நம்மில் யாரும், மறக்கவே மறக்கக் கூடாது.
அன்புள்ளவரான ஆண்டவரிடம்... அரிவாளும் இருக்கிறது என்பதை நம்மில் யாரும் மறக்கக் கூடாது.
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனை திராட்சத்தோட்டக்காரருக்கு உதாரணமாக்குகிறார். தொடர்ந்த வசனங்களில் தன்னை திராட்சச்செடி என்றும் உருவகப்படுத்தி அறிவின்றார். (யோவா 15: 1..3)
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனை திராட்சத்தோட்டக்காரருக்கு உதாரணமாக்குகிறார். தொடர்ந்த வசனங்களில் தன்னை திராட்சச்செடி என்றும் உருவகப்படுத்தி அறிவின்றார். (யோவா 15: 1..3)
தன்னுடன் இணைந்திருக்கிறவர்கள் தோட்டக்காரராக சித்தரிக்கப்படும் தேவனுடைய சித்தத்தின்படி நடவாவிட்டால்... அவர்களை கிறிஸ்துவிடமிருந்து பிதாவாகிய தேவன் களைந்துபோடுகிறார். அதாவது..
அன்புள்ளவராக யோவா 3:16 ல் அறிவிக்கப்பட்ட ஆண்டவரிடம் அரிவாளும் இருக்கிறது என்பதைச் சொல்லி நம்மை தெளிவாக எச்சரிக்கிறார். நம்முடைய இரட்சகர்.
இப்படிக் களைந்து போடப்பட்டவர்கள் உலர்ந்து போவார்களாம். அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து அக்கினியிலே போடுகிறார்கள். அவைகள் எரிந்துபோம். யோவா 15: 6
நண்பர்களே.., நீங்களும் நானும் 2013 ன் இறுதி நாட்களில் இருக்கிறோம். இதுவரை எப்படியிருந்தோம்..? என்றல்ல.., இனிமேல் எப்படி இருக்கப்போகிறோம்..? என்று சிந்தியுங்கள். தீர்மானியுங்கள். புதிய தீர்மானங்களுடன் இந்தப் புதிய வருடத்தை சந்திக்க ஆயத்தப்படுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Comments
Post a Comment