Posts

Showing posts from September, 2011

முழுக்கு ஞானஸ்நானம் - முக்கியத்துவம் என்ன? - 3

Image
மூன்றாம் பாகம்  பாஸ்டர்... மனம்திரும்பினவர்கள் மரித்துப் போனவர்கள் அதாவது பாவத்திற்கு மரித்தவர்கள் என்று சொல்லுகிறீர்கள். ஆனால் ஞானஸ்நானம் எடுத்ததாகச் சொல்லுகிற நிறைய கிறிஸ்தவர்கள் மனந்திரும்பினதற்கான எவ்விதமான அடையாளமும் இன்றி வாழ்கிறார்களே..? என்று ஒரு கேள்வி எழலாம். "ஞானஸ்நானம் எடுத்தவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் இல்லை" என்பதை இங்கே நீங்கள் அறிந்து கொள்வது நல்லது. கிறிஸ்தவன் என்று அழைக்கப்படுகிற எந்த ஒரு நபரும் கிறிஸ்துவின் சிந்தையை தரித்துக் கொள்ளாவிட்டால், அவர்கள் கிறிஸ்தவத்திற்கு கறைகளாகவும் குறைகளாகவும், காணப்படுகிறார்கள். உதாரணமாக, கத்தோலிக்கர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக் கொள்வார்கள். இவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதால் கிறிஸ்தவர்களா? இல்லையே இவர்கள் பெற்றோர் காலத்தில் சூழ்நிலையால் கத்தோலிக்கர்களாக மாறினார்களாம். யாரோ ஒருவர் இவர்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்ல இவர்களும் அப்படிதான் என்று நம்பிவிட்டார்கள். ஒரு நண்பரிடம் பேசியபோது அவர் இவ்வாறு சொன்னார்:  எங்கள் பெற்றோருடைய காலத்தில் நாங்கள் சுடலைமாடன் என்ற துஷ்டஆவியை வணங்கி வந்தோம். இப்ப

முழுக்கு ஞானஸ்நானம் - முக்கியத்துவம் என்ன? - 6

Image
ஞானஸ்நானம்  ஞானஸ்நானம் என்பது தேவனுக்கேற்ற அறிவடைந்து எடுக்கிற ஸ்நானம் என்று, 5-ம் பாகத்தில் எழுதியிருந்ததுடன் கிரேக்க மொழியில்: "βαπτίζω" " Baptizo means "To immerse or dip under water " " (தண்ணீருக்குள்ளே மூழ்கி ஆழ்த்தி ) என்றும் சொல்லப்படுகிறது. என்றும் இறந்த மனிதனை அடக்கம் செய்வதற்கு ஒப்பான நிகழ்வு. அடக்கம் செய்யும்போது முற்றிலுமாக தண்ணீரில் அமிழ்த்த வேண்டும் என்றும், பாரம்பரிய சபையினரோ ஒரு குவளைத் தண்ணீரை தெளித்து ஞானஸ்நானம் என்றுச் சொல்லுகிறார்கள் என்றெல்லாம் எழுதியிருந்தேன். தொடர்ந்து.. கிறிஸ்துவின் உபதேசமானது பாவத்திற்கு மரித்தவனை அடக்கம் செய்து விட்டு அப்படியே போகட்டும் என்று விட்டு விடுவது அல்ல ...., ஞானஸ்நானத்தில் அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும் அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள் என்று கொலோ 2: 12 -ல் வாசிக்கிறோம். எதற்காக நாம் எழுந்திருக்க வேண்டும்? என்று..., சிந்திப்பவர்களுக்கு பரிசுத்த வேதாகமம்  கூறுகிறது  ..பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிர

எனது தாய்மதம் எது? பாகம் -1

Image
புதிதாக ஒரு வார்த்தை தோன்றப்பண்ணப் பட்டிருக்கிறது அது: ‘தாய்மதம்’ . இப்போது சிலர் மதம் மாறி இருக்கிறார்களாம் இவர்கள் வேறு பல மதங்களிலிருந்து இந்து தருமத்தை தழுவ ஆரம்பித்துள்ளதாக ஒரு பரபரப்புச் செய்தி பரப்பட்டது.. இதில் எனக்கு வருத்தமளிக்கும் செய்தி என்பது இவர்கள் மதமாறியதால்  அல்ல.  பத்திரிகைகள் உட்பட பலரும் இவர்கள் “தாய்மதத்துக்குத் திரும்பிவிட்டார்கள்” “தாய்மதத்துக்குத் திரும்பிவிட்டார்கள்” என இதை பரபரப்பான செய்தி ஆக்குவதுதான் சரியில்லாதது போல் தோன்றுகிறது. ஒருவருக்கு எது தாய்மதம்? முதலில் அப்படி ஒன்று இருக்கிறதா?  தாய்மொழியைப் போன்றதாய் அது இருக்குமென்றே எடுத்துக்கொள்ளலாம். தாய்வழி -மொழி  தாய்மொழி என்பதற்கு சரியாய்  தாய்வழி மதம்தானே தாய்மதமாயிருக்க முடியும்.  மதம் மாறியவர்களைப் பற்றிய விபரங்கள் எனக்குத் தெரியவில்லை. ஆனால் “எனது தாய் மதம் இந்து மதம் அல்ல” என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்து மதம் இந்தியாவில் எப்படி உருவானது? இந்தியர் அனைவருக்கும் எந்த நாள் முதலாய் அது தாய்மதமானது? என்பதை நாம் ஆய்வு செய்வோமால் , கிடைக்கும் பதில்:  தாய்மதம்னு

முழுக்கு ஞானஸ்நானம் - முக்கியத்துவம் என்ன? - 5

Image
ஞானம் + ஸ்நானம் = ஞானஸ்நானம்.  ஞானம்  என்றால் என்னவென்று? ஞானம் உள்ள அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் ஒருவிசை நினைவுபடுத்துகிறேன். இங்கே ஞானம் என்பதை, தேவனுக்கேற்ற அறிவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எப்படியெனில், இஸ்ரவேலர்கள் ஊருக்கு வெளியே வணாந்திரமான இடத்தில், யோர்தான் நதிக்கரையில், பகட்டானதும், மெல்லியதுமான ஆடைகளை அணிந்திருந்திராமல், மிகவும் எளிமையான ஒட்டக மயிர் ஆடை அணிந்துள்ளவன் என்று ஏளனமாக எண்ணாமல்..., எருசலேம் தேவாலயத்திலும், அரண்மனைகளிலும் நின்று அருளுரையாற்ற வேண்டிய சகரியா என்ற ஆசாரியனின் மகன், வணாந்திரத்திலே நின்று சத்தமிடுகிறானே என்று, அசட்டையாக எண்ணாமல்..., பிரசங்கம் பண்ணி ஞானஸ்நானம் கொடுக்கும் இவனுக்கே நல்ல சாப்பாடு இல்லை, நல்ல வசதியான வீடு இல்லை, காட்டுத்தேனையும் வெட்டுக்கிளியையும்தான் உணவாகக் கொள்ளுகிறான். என்றெல்லாம், அவமானப்படுத்தாமல்... , யோவானுடைய வார்த்தையிலிருக்கும் கடுமைகளைக் கண்டு வெருப்படைந்து தூற்றித்திரியாமல்..., இஸ்ரவேல் மக்களில் ஒரு கூட்ட மக்கள் யோவானுடைய வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளை மட்டுமே கூர்ந்து கவனித்தார்கள். எனவே, எங்கள் பித

முழுக்கு ஞானஸ்நானம் - முக்கியத்துவம் என்ன? - 4

மனம்திரும்பினவர்கள் முதலாவது பாவத்திற்கு மரித்துப் போனவர்களாகிறார்கள்.  மரித்துப் போனவர்கள். அதாவது பாவத்திற்கு மரித்தவர்கள்தான் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள தகுதியுள்ளவர்கள். காரணம் ஞானஸ்நானம் என்பதின் இன்னொரு வடிவம்.. அடக்க ஆராதனையாகும். காரணம் பாவத்திற்கு அவன் செத்துப் போய்விட்டான். செத்துப் போனவனை அடக்கம் செய்வதுதான் நமது இயல்பு. இங்கே ஒருவன் சரீரத்தில் அல்ல.. பாவத்திற்கு மரித்துப் போய் விட்டான். பாவம் என்னவென்பதை உணர்ந்து பாவத்திற்கு ஏதுவான எந்த ஒன்றையும் இனி செய்ய மாட்டேன். என்று தீர்மாணித்து அனைத்தையும் அறிக்கை செய்து விட்டு விட்டதினிமித்தம் பாவத்திற்கு மரித்துப் போனவனாகிறான். (ரோம 6:2 11 மற்றும் 8:13) இனி அதில் அவன் பிழைக்கப் போவது இல்லை. மரித்துப் போனபின் அந்த சடலத்தை அதே வண்ணமாக வீட்டிலே வைத்துக் கொண்டிருக்க மாட்டோம். ஒருவேளை அவர் நமக்கு மிகவும் பிரியமானவர் என்hதற்காக செத்துப் போனாலும் பரவாயில்லை நாங்கள் சில நாட்கள் வைத்திருக்கிறோம் என்று எவரும்  சொல்லப் போவதில்லை. செத்துப் போன மனிதனது சரீரத்தை கண்டிப்பாக அடக்கம் செய்தே ஆக வேண்டும். நாம் அப்படித்தான் செய்கிறோம்.  மீன்டும் சொல்லு
Image
குடும்ப ஆசீர்வாத கருத்தரங்கு - 2011 வள்ளியூர் அனைவரும் குடும்பம் குடும்பமாக வாருங்கள், தேவனுடைய ஆசீர்வாதம் பெற்றுச் செல்லுங்கள்.

விஜய் மற்றும் அவரது நண்பர்களான "நவீன தீவிரவாதிகளுக்கு" ஒரு எச்சரிக்கை.

மனிதன் தேவ சாயலாக படைக்கப்பட்டிருக்கிறான் . ஆதாம் பரிசுத்தமாக மகிமையுடையவனாய் தேவனால் படைக்கப்பட்டான். தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்தில்; உலாவ வரும்போதெல்லாம் பரிசுத்த தேவனை பரிசுத்தமுடைய மனிதனான ஆதாம் சந்திக்கும்படி ஓடி வருவான். ஒருநாள் ஆதாம் ஓடி ஒளிந்து கொண்டானாம். காரணம் அவன் தேவசாயலான மகிமையின் சாயலை இழந்துவிட்டான். பிசாசினுடைய ஆலோசனைக்கு கீழ்படிந்ததால் மனிதன் பிசாசின் சாயலானான்.  (ஆதி 1:27 ஆதி 3:8)  பிசாசின் குணங்களில் ஒன்று அது தேவனுடைய சமூகத்தினின்று விலகி ஓடும். (மாற் 1:24, மத் 8:29)  தேவசாயலை இழந்து , பிசாசின் சாயலான மனிதன் கர்த்தருடைய சமூகத்திற்கு விலகி ஓடி ஒளித்துக் கொண்டான். பாவம் செய்வதற்கு முன்புவரை அவன் தேவசாயலாக இருந்தான். தேவ சாயலாக இருப்பவன் தேவனைப் போலவே கிரியை செய்வான். என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். எனவே நாங்களும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்போலவே வாழ்ந்து வருகிறோம் ஒரு வேளை எங்களை அறியாமல் அல்லது நாங்கள் ஒன்று செய்ய வேறு ஒன்றாய் நடந்த சம்பவங்களும் உண்டு. இல்லையென சொல்லவில்லை அதற்காக ஆண்டவரிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்டுப் பெற்றுக் கொண்ட

முழுக்கு ஞானஸ்நானம் - முக்கியத்துவம் என்ன? - 2

இரண்டாம் பாகம்   கிறிஸ்துவுக்குள் எனக்கு மிகவும் பிரியமானவர்களே கிறிஸ்துவின் மாறாத அன்புடன் வாழ்த்துக்கள் கூறி முழுக்கு ஞானஸ்நானம் அவசியம் பற்றிச்சொல்ல விரும்புகிறேன். பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வசனங்களின் அடிப்படையில் தெளிப்பா? மூழ்கியா? என்ற கேள்வியே எழுப்பப்பட வேண்டிய அவசியமில்லை. ஞானஸ்நானம் என்றாலே முழுக்கு ஞானஸ்நானம் என்பதைத்தான் வேதவசனம் கூறுகிறது. ஆனால் கள்ள உபதேசங்களில் ஒன்றான தெளிப்பு ஞானஸ்நானம் என்ற நூதன முறையை  கிறிஸ்தவ அமைப்புகளுடன் தந்திரமாக உறவாடி துணிகரமாக நுழைத்து அதற்கான இயக்கங்களையே உருவாக்கிவிட்டபடியினாலே… ஆவிக்குரிய சத்திய சபையாராகிய நாம் விவாதிக்க அவசியமே இல்லாததும் வேதத்தில் காணப்படாத பழக்க வழக்கங்களில் ஒன்றுமான தெளிப்பு ஞானஸ்நானத்தையெல்லாம் மறுக்க வேண்டிய நிலையில் நிற்கிறோம்...!? சற்றுப்பொறுத்துக் கொள்ளுங்கள்.  சத்தியத்தை, சஞ்சலமில்லாமல் அறிவிப்போம். கடந்த பதிவுகளில் மத் 28: 18..20 வரையுள்ள வசனங்களை மேற்கோள்காட்டி ஞானஸ்நானம் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே என்ற கர்த்தருடைய கட்டளைகளின்படி எடுக்க வேண்டும். என்பதை எழுதியிருந்தோம்.   இப்போதும் ஞானஸ்நானம

முழுக்கு ஞானஸ்நானம் - முக்கியத்துவம் என்ன?

Image
மூன்றாம் பாகம்  பாஸ்டர்... மனம்திரும்பினவர்கள் மரித்துப் போனவர்கள் அதாவது பாவத்திற்கு மரித்தவர்கள் என்று சொல்லுகிறீர்கள். ஆனால் ஞானஸ்நானம் எடுத்ததாகச் சொல்லுகிற நிறைய கிறிஸ்தவர்கள் மனந்திரும்பினதற்கான எவ்விதமான அடையாளமும் இன்றி வாழ்கிறார்களே..? என்று ஒரு கேள்வி எழலாம். "ஞானஸ்நானம் எடுத்தவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் இல்லை" என்பதை இங்கே நீங்கள் அறிந்து கொள்வது நல்லது. கிறிஸ்தவன் என்று அழைக்கப்படுகிற எந்த ஒரு நபரும் கிறிஸ்துவின் சிந்தையை தரித்துக் கொள்ளாவிட்டால், அவர்கள் கிறிஸ்தவத்திற்கு கறைகளாகவும் குறைகளாகவும், காணப்படுகிறார்கள். உதாரணமாக, கத்தோலிக்கர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக் கொள்வார்கள். இவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதால் கிறிஸ்தவர்களா? இல்லையே இவர்கள் பெற்றோர் காலத்தில் சூழ்நிலையால் கிறிஸ்தவர்களாக மாறினார்களாம். சரித்திரத்தில் அப்படித்தான் வாசிக்கிறோம். ஒரு நண்பரிடம் பேசியபோது அவர் இவ்வாறு சொன்னார்:  எங்கள் பெற்றோருடைய காலத்தில் நாங்கள் சுடலைமாடன் என்ற துஷ்டஆவியை வணங்கி வந்தோம். இப்போது சிலையையும் பெயரையும் மட்டுமே மாற்றி இருக்கிறோம். ஆனால் கடவுள் வணக்கமாக

இம்மானுவேல் ஆப்ரஹாம் ஆகிய நான்....!

ஆவியோடும் உண்மையோடும் தேவனை ஆராதிக்கும்படி ஜனங்களை வழி நடத்தும் தேவஊழியர்களுக்கும்  ஆவிக்குரிய சபை விசுவாசிகளுக்கும் தைரியமூட்டும் கடிதம். பாரம்பரியமான இந்து குடும்பத்தில் பிறந்து வாலிப வயதில் தீவிர இந்துமத வெறியனாக வாழ்ந்த ஒரு வாலிபன் தான் சார்ந்த இந்துமத நூல்களை கவனமாக வாசித்து வந்தான். அதனால் அவனுக்குள் எழும்பின கேள்விகளுக்கு விடைகாண பல்வேறு ஆன்மீகத் தலைவர்களை அனுகியபோது அவர்களால் பதில் சொல்லமுடியவில்லை என்பதையும் அவர்கள் திணறியதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தான். மட்டுமல்ல, ஒரு சிலர் சொன்ன பதில்கள் ஆன்மீகம் கடவுள் என்று சொல்லத்தக்க விதத்தில் லடசணமுடையதாக இராதபடியினாலே…, கடவுள்கள் என்பதே கட்டுக்கதைகளும், பொய்யும் புரட்டும் அவனவன் பிழைப்புக்காக ஏற்படுத்திக் கொண்டதுமானவைகள் எனச்சொல்லி, கடவுள் மறுப்பு அமைப்பான திராவிட கழகத்தில் இணைந்த அந்த வாலிபன் தன்னை இதுவரை ஏமாற்றின இந்து மதத்தையும், அவலட்சணமான அந்தக்கடவுள்களையும், அவைகளின் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கைகளுக்கும், எதிராக  தீவிர பணியாற்றினான். அதுமட்டுமல்ல, அந்த வாலிபன் பகுத்தறிவை போதித்து தமிழகத்தில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தியவ