Posts

Showing posts from 2011

கிறிஸ்தவரல்லாத ஒரு இந்து அரசியல்வாதியுடன்....,

Image
" கிறிஸ்தவ சபைகளின் உள்பிரச்சனை " - " ஒரு இந்து அரசியல்வாதியுடன் தொடர்பு..... " "இந்து அரசியல்வாதியுடன் தொடர்புவைக்கும்வரை  திருநெல்வேலி  டையோசிஸ்ஸானாலும் சரி,  தூத்துக்குடி டையோசிஸ்ஸனாலும் சரி, உருபடவே உருப்படாது" "  தேவபிரசன்னம் இருக்காது". " (இந்து) அரசியல்வாதியான திரு.வைகுந்தராஜ் அவர்களுக்கு சி.எஸ்.ஐ சபையில் என்ன வேலை? -என்று சொல்லுகிறார் - மருத்துவரும், பத்திரிக்கையாளருமான சேலத்தைச் சேர்ந்த பூராசா என்ற புஷ்பராஜ் அவர்கள். மேற்கண்ட செய்தியை படித்தவுடன் மிகவும் வேதனை அடைந்தேன். ஆவிக்குரிய சபையினராகிய நாம் இவைகளை சுட்டிக்காட்டி எழுதியிருந்தால் சபை துவேஷத்தினால் இப்படி எழுதுகிறார்கள் என்று பழிச்சொல்லில் படாய்படுத்தியிருப்பார்கள். ஆனால்... இந்த குற்றச்சாட்டை எழுப்புகிற இந்த மருத்துவர் சி.எஸ்.ஐ சபைகளுக்கு அடுத்தவரல்ல. இவரும் அதே சி.எஸ்.ஐ சபையைச்சேர்ந்த தீவிர பக்தர். மட்டுமல்ல.. நல்ல ஆன்மீகஅரசியல்வாதி. இவர் தான் சார்ந்துள்ள சபையையும் அத்துடன் இணைந்த நிறுவனங்களையும் தொண்டு அமைப்புகளையும்ம் அழிந்து போகாமல் காப்ப

சபை என்ற தேவ வடிவமைப்புக்கு எதிராக போர் தொடுப்பவர் யார்?

அனுபவமும் வயதில் மூத்தவருமான ஒரு பெந்தகோஸ்தே பாஸ்டரிடம் சில நாட்களுக்குமுன் பேசிக் கொண்டிருந்தேன். எங்களுடைய பேச்சின் நடுவே சபைகளுக்கு எதிராக நடக்கிற சில விரும்பத்தகாத விமர்சனங்களைப் பற்றி அந்த அனுவம் வாய்ந்த பாஸ்டரிடம் பேச வேண்டியதாயிற்று. அப்போது... நான் : இது கடைசி காலம் என்றும் கர்த்தருடைய வருகை அதி சீக்கிரத்தில் இருக்குமென்றும் அறிந்திருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான் கிறிஸ்தவ சபைகளுக்கு எதிரான தாக்குதலை பல வழிகளில் சாத்தானானவன் தொடுத்திருக்கிறான். பாஸ்டர் : இது சபையின் தொடக்க நாட்களிலிருந்தே பிசாசானவன் தனது அடியார்களைக் கொண்டு நிறைவேற்றுகிற செயல். இப்போது இருக்கிற விசுவாசிகளுடைய பிள்ளைகள் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து விட்டார்கள். பல இடங்களுக்கு பல நாடுகளுக்கு பயணிக்கிறார்கள். ஆங்காங்கே பல்வேறு கலாச்சாரங்களைப் பார்க்கிறார்கள். நமது சபையும் மேலை நாட்டு முறைமைகளின்படி மாறவேண்டுமென ஆசைப்படுகிறார்கள். ஒருசிலர் சற்று வித்தியாசமாக நமது முந்தைய முறைமைகளின்படியே தொடரவேண்டுமென்கிறார்கள். எல்லாருடைய ஆசைகளின்படியேயும், விருப்பத்தின்படி யேயும் சபையை நடத்த முடியாதல்லவா

சத்தியத்திலே வளர விரும்புகிறவர்கள் நம்முடன்....,

Image
அன்புக்குரியவர்களே இரட்சகரும் நமதாண்டவருமாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறேன். ஆவிக்குரிய போதகர்களாகிய நாம் விரும்பத்தகாத சில சம்பவங்கள் நடந்து விட்டது. அதை நியாயப்படுத்த நான் விரும்பவில்லை. கிறிஸ்துவின் பொருட்டு நீங்கள் எல்லாம் என்னை தயவாய் மன்னிக்கும்படி தாழ்மையுடன் கேட்கிறேன். முன்பு நம்முடைய தேவனோடு நான் ஒப்புறவாகிவிட்டிருக்கிறேன். சாத்தானை பரிசுத்தமான பாஷையில் அழைக்க முடியாது அதற்காக கெட்டவார்த்தைகளையும் நாம் பயண்படுத்த முடியாது..! கூடாது. அவன் அதாங்க அந்த பிசாசானவனும் அவன் கூட்டத்தாரும் வேத வசனத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். சில்சாம் மற்றும் விஜயகுமார் போன்றோர் ஏதோ சிலசிறிய பாவத்தில் அல்லது பாவசூழ்ச்சியில் அகப்பட்டு கிடக்கிறார்களோ..? என்று அவர்களை மென்மையான போக்கிலேயே அணுகினேன். இறுதியில் அவர்களுடைய துனிகரமான தூஷணமான வார்தைகளின் நிமித்தம் கடிந்து கொண்டு புத்திசொல்ல வேண்டியதாயிருந்து. ஆனால்... அவனோ முற்றிலும் பிசாசாக இருந்துள்ளான். குறிப்பாக சில்லறை சாமான் என்று அழைக்கப்படத்தகுதி உடைய சில்சாம் ஒரு சந்தர்ப்பத்தில்

ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைத்தலைவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:

by Immanuel Abraham on Monday, October 10, 2011 at 9:47pm தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டும் அழைக்கப்பட்டுமிருக்கிற கர்த்தருடைய ஊழியர்களுக்கு நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் . ஏதேன் தோட்டத்தில் உலாவரும் தகுதி படைத்ததும் தேவனால் படைக்கப்பட்டதுமான சர்ப்பத்தை ... பூமிக்குரிய முதல் தொண்டனாக சாத்தான் தெரிந்த கொண்டது போல .. இன்றும் சபைகளுக்குள் உலாவிவரக் கூடிய தகுதி இருப்பதாகச் சொல்லித் திரியும் சில கருங்காலிகளை பிசாசானவன் தெரிந்து கொண்டிருக்கிறான் . இவர்கள் .... தேவனுடைய தோட்டமாகிய ஏதேனுக்குள் நுழைந்த சர்ப்பமானது ஏவாளை   ஏமாற்றியது போல ... இவர்கள் மூலமாக கிஸ்தவர்களை வஞ்சிக்க சாத்தானானவன்  திரிகிறான் . பெண்களைப் போன்ற குணமுடையவர்கள் ஆனாலும் ஆண்களைப் போல அலையும் சில நபர்களை வஞ்சித்து வசப்படுத்திக் கொண்டிருக்கிறான் . இவர்கள் மூலமாக தேவசபையை அழித்துவிட முடியாது என்று அவனுக்கு தெரியுமாதலால் அவனால் இயன்ற மட்டும் தேவ ஜனத்தை தேவனிடத்திலிருந்து பிரிக்கும் வண்ணமாக மீறுத