Posts

Showing posts from November, 2012

K.R.M சபையின் இந்த மாதத்தின் வாக்குத்தத்த வசனமும், செய்தியும்.

தேவனுடைய அன்பினால்   என் சகோதர சகோதரிகளே…! கிறி ; ஸ்துவினிமித்தம் உங்களை வாழ்த்துகிறேன் . கர்த்தருக்கு ஸ்தோத்திரம் . 2012 ஆம் ஆண்டு துவங்கின நாள் முதல் இந்த நாள்வரை 11 மாதங்களாக கர்த்தர் நம்மை காத்து நடத்தியிருக்கிறார் . 12- ம் மாதத்தின் முதல் நாளாகிய இந்த நாளிலே கர்த்தர் சமூகத்தில் ; கூடி வந்திருக்கிறோம் . நமது கூடுகைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் . நமது கூடுகை, அர்த்தமுள்ளதாக இருப்பதினால் மகிழ்ச்சியடைந்து நம்முடைய கர்த்தரை துதிக்கிறேன் . நமது கூடுகையானது உலகப் பிரகாரமான ஆசீர்வாதத்தை மட்டுமே குறியாக வைத்து அல்ல . இதுவரை நம்மை நடத்தி வந்த கிருபை மிகுந்த தேவனுக்கு ஸ்தோத்திரங்களை செலுத்தி அவரை மகிமைப்படுத்தும்படி கூடி வந்திருக்கிறோம் . இப்படி, சபையாய் கூடி இதுவரை நம்மை நடத்தின தேவனைத் துதித்து புதிய மாதத்தை ஜெபத்துடன் கூட துவங்கியிருக்கிறோம் . பரிசுத்த வேதாகமத்தில் நம்மை தைரியப்படுத்தக் கூடிய வசனங்களில் முக்கியமானது பிலி 4- ம் அதிகார த் தின் 6; மற்றும் 7- ம் வசனங்கள் ஆகும் . “ நீங்கள்

"இறைத்தூதர்" - ஏட்டிக்குப் போட்டி மொத்தத்தில் முரன்பாடு.

1. கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2500 ஆண்டுக்கு முன்பாகவே                                                                        இறைபக்தியுள்ளவர்கள் யூதர்கள். 2. கிறிஸ்துவுக்குப்பின், கிறிஸ்துவின் மூலமாய் கிடைக்கப்பெற்ற இரட்சிப்பை                         அனுபவிக்கும் யூதகிறிஸ்தவர்கள்  மற்றும், கிறிஸ்தவர்கள். யூதர்கள் தங்கள் முற்பிதாவும் தீர்க்கதரிசியுமான மோசேவின் மூலம் ஆண்டவர் கொடுத்த கட்டளையின்படி "சனிக்கிழமை யை " ஓய்வு நாளாக கடைபிடிக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஞாயிற்றுக்கிழமை சபை கூடிவருதல் என்றும் அப்படி கூடிவரும் நாளில் ஆராதனையும் செய்கிறோம். முக்கியமான செய்தி என்னவெனில்... , நாங்கள் இருவருமே சுமார் 4500 ஆண்டுகளாக பல்வேறு காரணப் பெயர்களுடன் "சர்வவல்லவரும் பரிசுத்தருமாகிய ஒரே ஒரு தேவனையே" தொழுது கொள்ளுகிறோம்.  இப்படியிருக்கையில் திடீரென..., யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தொடர்பில்லாதது மட்டுமல்லாமல்..., சந்திர தேவனை அல்லாஹ் (அல்லாஹ் என்றால் கடவுள்) என்றும், கூடவே பலநூறு தேவர்கள் மற்றும் தேவதைகளை கடவுளாக

நிஜத்தை அறிந்து கொள்ள, நமது சந்ததிக்கு அறிவிக்க..,

கிறிஸ்துவுக்குள் எனக்குப் பிரியமானவர்களே..!  உங்களுடன் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இதில் மகிழ்ச்சியடைகிறேன். கர்த்தர் கொடுத்த இப்படிப்பட்ட வாய்ப்புகளுக்காக நம்முடைய தேவனாகிய கர்த்தரை முழுமனதோடே துதிக்கிறேன்.  எழுதப்படும் செய்திகளை நிதாணமாக படியுங்கள். இதை மற்றவர்களுடன் பொறுமையாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆலோசனைகள் சொல்ல விரும்புவீர்களானால்..., சொல்லுங்கள்..., வரவேற்கிறேன். ஏனெனில்... இன்றைய சமூகத்திற்கு சில வரலாறுகள் மறைக்கப்படுகின்றன. அல்லது, திரிபுபடுத்தி அறிவிக்கப்படுகிறது. நாமோ.., மிகவும் கவனமாக நிஜத்தை அறிந்து கொள்ள வேண்டியது இன்றைய காலகட்டங்களில் மிகவும் அவசியமாக இருப்பதுடன் அதை நமது சந்ததிக்கு அறிவிப்பதும் அதை அவர்கள் வரும் சந்ததிகளுக்கு தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டியதும் மிகவும் கட்டாயமானதாக இருக்கிறது. எனவே..,  இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து படியுங்கள். கர்த்தர் எனக்குக் கொடுத்துள்ள சபை மற்றும், வெளி ஊழியங்கள் மத்தியிலும் சமயமிருக்கும்போதெல்லாம் என்னால் முடிந்தமட்டும் எழுதுகிறேன். ஆர்வமுடன் இந்த எழுத்துக்களைப் படிக்கிற உங்களுடைய அகக்கண்களை கர்த்தர்தாமே திற