எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

கிறிஸ்து இயேசுவில் எனக்குப் பிாியமானவா்களே..! அன்புடன் வாழ்துகிறேன். சில கால இடைவெளிக்குப் பின் இந்த பதிவின் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்..! 
இந்த பதிவிலும் கா்த்தா் தம்முடைய வேதத்திலிருந்து நமக்கு கொடுக்கும் அவசியமான ஆலோசனையை  கவனிப்போம். 

எபேசியா் 1 :15..19 
கர்த்தராகிய இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார் மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு, இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருள வேண்டுமென்றும், தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும். தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்.
என்பதான தேவனை நோக்கிய தனது விண்ணப்பத்தை அப் பவுல் அடிகளார் எபேசு சபைக்கு எழுதி அனுப்பினார்.

எபேசு சபை என்பது எபேசு பட்டணத்தில் உள்ள சபையாகும்.

எபேசு - விரும்பப்பட்ட அல்லது பிரியமான என்று பொருள்.
ரோம ஆட்சியின்போது எபேசு மிகப்பெரிய துறைமுகப் பட்டணம் ஆகும். எனவே, எபேசு பட்டணம் கடல் வாணிபத்தில் கோலோச்சி விளங்கியது. அரிதான பல்வேறு பொருட்கள் எபேசிய சந்தையிலே வந்து குவிந்ததால் இது ஆசியாவின் மாயச்சந்தை என்று அழைக்கப்பட்டது. அது மட்டுமல்ல..,

எபேசுவில் தியானாள் என்ற பெயரிலான விக்கிரஹ கோவில் ஒன்று இருந்தது. இந்த தியணாள் காம தேவதையாக அறியப்பட்டாள்.
இந்த தியானாளின் கோவில் உலகப் புகழ்பெற்றது. (அப்19:24)
இக்கோவில்முதலாம் நூற்றாண்டு வாக்கில் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டது என்றாலும், தியானாள் அழகான தேவதையும் அல்ல. அது வெறும் கருப்பு உருவம் கொண்ட ஒரு கல் அவ்வளவே...!

தியானாள் லத்தீன் மொழியில் டயனா என்று அழைக்கப்படுவாள்.

இஸ்லாமியா்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டு தரிசிக்கும் மக்கா கோவிலில் உள்ள  ஹஸ்ருல் அஸ்வத் கல்லைப்போன்று இந்த தேவதை??!! கூட வானத்திலிருந்து விழுந்தது என அவர்கள் உரிமை பாராட்டினார்கள். (அப் 19 :35)

இத்தேவதையின் சொரூபங்களும் தாயத்துகளும் உலக மேன்மையை தருவதாக கருதப்பட்டதுஇக்கோவிலில் தேவதாசி முறையும் வழக்கத்தில் இருந்தது. ஒழுக்ககேடுகளும், மூட நம்பிக்கைகளும் மலிந்து இருந்தன. இந்த ஜனங்களை அறியாமை இருள் மூடியிருந்தது.

உலகிற்கு வெளிச்சமாக தேவனால் பிரகாசித்த 
அப். பவுல் கி.பி 55-ல் எபேசுவுக்கு வந்தார்.

அப்போஸ்தலனாகிய பவுல் அவா்களுடைய ஊழியம் எபேசுவிலிருந்த தியளாள் கோவிலுக்கும் அதைச்சார்ந்த மாயச்சந்தைக்கும் மற்றும் பெருமைக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. (அப் 19 27)

2) எபேசுவின் நூலகம்:
எபேசு நூலகத்தில் மாய தந்திரங்களை குறித்த புகுத்தகங்களே  ஆயிரக்கணக்கில் காணப்பட்டன. (அப் 19 :19) இங்கு ஏறத்தாழ 15,000- க்கும் மேற்பட்ட புஸ்தகச் சுருள்கள் இருந்தனசுவிசேஷ ஒளி எபேசுவில் பிரகாசித்தபோது மாய வித்தைக்காரா்கள் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள். (அப் 19 :19)

3) வியாபார சந்தை:
எபேசுவில் 360 சதுரடியில் வியாபார சந்தை இருந்ததுஆக்கிலாள், ப்ரிஸ்கிலாள் ஆகியோரோடு கூடாரம் பண்ணுகிற தொழிலை இங்குதான் அப்போஸ்தலனாகிய பவுல் செய்து, சந்தைக்கு வருவோர், போவோரிடம் சுவிசேஷத்தை பிரசங்கித்தாகவும் சொல்லப்படுகிறது.

4) அரங்கசாலை:
எபேசுவின் மையத்தில் ரோமர்களால் பராமரிக்கப்பட்ட அரங்கசாலை ஒன்று இருந்தது இதில் 25,000 பேர் அமர முடியுமாம்..! இங்கு மல்யுத்தங்களும், கலை நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்பட்டது.

பவுல்-ன் ஊழியத்தினால் தியானாளின் கோவிலுக்கும், மதம் சார்ந்த வாணிபத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டபோது, கலகக்காரர்கள் இந்த அரங்க சாலையில்தான் கூடி வந்தார்கள். (அப் 19 :29)

இங்குதான்எபேசியருடைய தியானாளே பெரியவள்என்று இரண்டு மணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். (அப் 19:29)

பிரியமானவா்களே நாமும் கூட பல்வேறு மத நம்பிக்கை உள்ள மக்கள் நடுவில் குறிப்பாக தெய்வமல்லாதவைகள் மீதுகூட மிகுந்த பக்தியும் அறிவுக்கு ஏற்புடையதாக இல்லாத முரட்டு வைராக்கியமும் கொண்ட மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்றாலும், நாமும் அவா்களைப் போன்று வெறும் பக்தி மற்றும் பெருமையுள்ளவா்களாக அல்ல..,

நம்மால் ஆராதிக்கப்படுகிற சா்வ வல்லவரை அறிகிற அறிவில் எவ்விதம் இருக்கிறோம்? என்பதில் கவனமாக இருக்க வேண்டும். 

எபேசியா் 1 : 17.19 - வில்
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று….,
அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

நம்முடைய கா்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் பின்வருமாறு கூறினாா். ( யோவான் 17:3 ல் ) ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

இஸ்ரவேல் ஜனங்களை தேவனுக்கு பயப்படும் பயத்தோடு வழி நடத்தின அல்லது ஆளுகை செய்த தாவீது இராஜா தன் இடத்தில் ஆட்சிப் பொாறுப்பை ஏற் தன் குமாரனாகிய சாலமோனிடத்தில் கூறுகிறார். (1நாளா 28 : 9 )

என் குமாரனாகிய சாலொமோனே
நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் . சேவி கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து,  நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார் . நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார். நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார். என்றான்.

புதிய உடண்படிக்கைக்குப் பின் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை பரிசுத்த ஆவியானவருடைய ஆலோசனையின்படி வழி நடத்தின அப்போஸ்தலனாகிய பேதுரு சபைகளுக்கு பொதுவான நிரூபங்களை எழுதினபோது, (2பேது 1 :2) 
தேவனையும்  நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது. என்கிறார். அவரை அறிகிறதனால் நமக்கென்ன இலாபம்? கிருபையும் சமாதானமும் பெருகும் அவ்வளவே..! இது போதும்தானே?!!! என்றாலும், நாம் நம்மை தேவனுக்கேற்ற பரிசுத்தமாக காத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால்.., 

                     2பேது 2 : 20, 21 ல் பின்வருமாறு எச்சரிக்கிறார். 

கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே, உலகத்தின்  அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்அவர்கள் நீதியின் மாக்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.


மீண்டும் கா்த்தருடைய வார்த்தையைக் அழுத்தமாகக் குறிப்பிடுகிறேன் பிாியமானவா்களே..! ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (யோவான் 17: 3)

Comments

  1. அருமையான செய்தி வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?