Posts

Showing posts from January, 2014

“மகிழ்ச்சியான எங்கள் நேரங்கள் தேவனுக்கு மகிமையாய் காணப்பட்டது”

Image
நாங்கள் ஒன்றிணைந்தால் என்ன நடக்குமென்று இன்று (30 01 2014) மாலையில் தெரிவிப்பதாக இன்று காலையில் ஒரு பதிவை பதித்திருந்தேன். அதை Like - கியதுடன் பிண்ணூட்டங்களைப் பதிவிட்டு உற்சாகமூட்டிய அனைவருக்கும் என் முதல் வணக்கங்கள் உங்கள் நிமித்தமாக கா்த்தரை துதிக்கிறேன்.   நான் தாமதாகவே வீட்டிற்கு வந்ததால்.., பதில் எழுதவும் தாமதமாகிவிட்டது. பொறுமை காத்ததற்கு நன்றி. நாங்கள் நேற்றுதான் (29 01 2014) முதன்முதலாக நேரடியாக சந்தித்துக் கொண்டோம் முதல் நாளில் சுமார் 8 மணி நேரங்களுக்கு மேலாக ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்தோம். எங்களுடன் மேலும் சில இணைய நண்பா்களும் கலந்துகொண்டனா். “மகிழ்ச்சியான எங்கள் நேரங்கள் தேவனுக்கு மகிமையாய் காணப்பட்டது” மீண்டும் இந்த நாளிலும் ஒன்று கூடினோம். அதைத்தான் முன்னதாகவே ”நாங்கள் ஒன்றிணைந்தால் என்ன நடக்குமென்று” இணையத்தில் பதித்திருந்தேன். நாங்கள் சந்தித்துக் கொண்டபோது இங்கு நடந்தவைகளை முகநூலில் வெளிப்படையாய் எழுத வேண்டாமென்று நண்பா்களாய் தீா்மாணித்தோம். என்றாலும் எங்களுடைய சந்திப்பை கொச்சைப்படுத்த முயற்சிக்கும் கள்ளஆவி பிடித்த சிலா்…   இவா

திருமணத் தகவல் மையம் ஆரம்பிக்கலாமா?

Image
திருமணத் தகவல் மையமொன்று ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். பெரும்பாலும் அனைத்து ஊழியா்களும் தன் சபை விசுவாசப் பிள்ளைகளுக்கு மட்டுமே என்றுதான் ”திருமணத் தகவல் பிரிவு” ஒன்றைத் துவங்குகிறார்கள். அதன் தொடர்ச்சியாக.., பக்கத்து சபை, பக்கத்து ஊா் என மற்றவா்களுடன் இணைந்து அந்த ”திருமணத் தகவல் பிரிவு” பெரிய வட்டமாக மாறிவிடுகிறது. இப்படியான ஊழியா்கள் இணைந்து யாரையும் ஏமாற்றாமல் நடத்தி வைக்கும் இத்திருமணங்களால் அநேக குடும்பங்களுடைய தவிப்பு நீங்குவதையும், பிள்ளைகள் தங்கள் கண்களுக்கு முன்பாகவே நன்றாக வாழ்வதைக் கண்டு, மற்றவா்களுடைய நல் வாழ்வையும் தேடுகிறார்கள். இதில் தவறு என்ன இருக்கிறது. ?! என்கிறேன். நான் ஊழியம் செய்கிற சபையில் கூட எங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. எங்கு? யார் மூலம் தேடுவது? எனத்தெரியாமல் இருந்து வருகிறேன். குடும்பம் இருப்பதுடன் பிள்ளைகளையும் உடையவன் பொறுப்பும் பாரமும் உள்ளவன் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதேநேரம் தெருவில் அலைந்து திரிகிறவா்களைப் போன்று இருப்பவா்கள். அதாவது

இணையத்திலும் நாம் ஒருமித்து கர்த்தர் நாமத்தை உயர்த்துவோம்.

Image
நண்பர்களே, தாமதிக்க வேண்டாம்..!  விரைந்து செய்படுங்கள், உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். "இணையதள கிறிஸ்தவர்களின் ஐக்கியம்" உடனடியாக மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளுங்கள். நமது மின்னஞ்சல் முகவரி:- immanuel580@gmail.com இணையதள கிறிஸ்தவர்களின் ஐக்கியத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும்படியான விண்ணப்பங்கள் வந்து கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு நான் அனுப்புகிற பதில்:- அன்பின் தேவனின் நிமித்தமான என் சகோதரரை வாழ்த்தி வரவேற்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நம்முடைய இரட்சகரும் ஆண்டவருமான இயேசுகிறிஸ்துவானவர் "பிதாவே நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். நாம் ஒன்றாயிருக்கிறதுபோல, அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும் என்னை நீர் அனுப்பினதையும் நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும் நான் அவர்களிலும் நீர் என்னிலு

பெலிஸ்தியன் சாட்டை சுழட்டுவதை அனுமதிக்க முடியாதுங்கறேன்.

Image
எ ம து பார்வையில் R.S.S  க் காரனைவிட                                   C.S.I  க்காரர்கள் எதிரிகள் இல்லை என்பேன் . கிறிஸ்துவுக்குள் எனக்கு அன்பான நண்பர்களே.. திரித்துவ தேவனாம் பிதா குமாரன் தூய ஆவியானவரான தேவனுடைய பெயரால் அன்புடன் வாழ்த்துகிறேன். ( https://www.facebook.com/kalvan.nanban/posts/419136604855415?comment_id=2007849&offset=0&total_comments=41&notif_t=mentions_comment ) நான் மேலே கொடுத்துள்ள (Link - ல்) தொடுப்பிலுள்ளதான செய்தியானது   உண்மையாகவும் நியாயமானதாகவே இருந்தாலும், இது கிறிஸ்துவின் சரீரமாகிய சபை தூய்மை பெற வேண்டுமென்ற நோக்கத்தில் பதிவிடப்பட்டதில்லை என்கிறேன். காரணம்.., இந்த சுட்டிக்காட்டலை நண்பர் சாணக்யன் செய்யவில்லை மாறாக உபதேச ரீதியில் கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு எதிரான நபராகிய ஞானப்பிரகாசம் என்பவரால் பதிவிடப்பட்டதாகும். அதை  நமது நண்பர் சாணக்யன் மீள் பதிவிட்டிருக்கிறார் அ வ்வளவே..! அதற்கு கீழே உபதேச விகற்பமானவர்கள் கும்மியடித்து வருகின்றனர் இதைத்தான் நான் வன்மையாகக்கன்டிக்கிறேன். ஏனெனில்..,     கிறிஸ்துவின் சரீர

அருமையானவர்களெல்லாம் அவரவர் விருப்பம் போல அசத்துகின்றனர்.

“இணையதள கிறிஸ்தவர்களின் ஐக்கியம்" இணைய  உலகின் கிறிஸ்தவ நண்பர்களே என் அன்பிற்கு உகந்த ஆவிக்குரிய உறவுகளே என் மீட்பரும் ஆண்டவருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் இனியப் பெயரால் உங்களை வாழ்த்துகிறேன். இதெற்கெல்லாம் காரணரான தேவனாகிய கர்த்தரை நன்றியுடன் துதிக்கிறேன். இணைய உலகில் இதுவரை இல்லாத வகையில் கிறிஸ்தவர்களுடைய செயல்பாடுகளும் பங்களிப்புகளும் அதிகரித்து வருகிறதை நாம் அறிவோம். அதேநேரம் இணையத்தில் நுழைகிறவர்கள் யார்? யாருடன் உறவாடுவது? இவர்களில் யார் நல்லவர்? யார் கள்ளர்? என்று கண்டுபிடிக்க முடியாமல் நாள்தோறும் தடுமாறுவதைக் கண்டு அதிர்ச்சியடைகிறேன். அதுமட்டுமல்ல.. குறை சொல்லுவதாக நினைக்காமல் இதைப்படியுங்கள் கோபப்பட  வேண்டாம். அருமையான ஊழியர்களில் அநேகர்.. இணையத்தில் நுழையும் சில ஊழியர்கள்  குறைந்த காலங்களிலேயே தாங்கள் நுழைந்த தளத்தை அரட்டை அரங்கமாக மாற்றி அசத்தி விடுகின்றனர். அதுவரைக்கும் அவர்களுக்குள் இருந்த தாலந்துகளெல்லாம் பொங்கி வழிகிறது. அச்சமயங்களில் கட்டுக் கதைகளால் இணையத்தை கலகலப்பாக்கி விடுகின்றனர்.  ஒரு மனிதர் தான் ஒருத்தியை பயண வழியில் கண்டதாகத் து

இறைப்பணி செய்ய இருகரம் நீட்டி வரவேற்கிறோம்.

“இணையதள கிறிஸ்தவர்களின் ஐக்கியம்" இணைய  உலகின் கிறிஸ்தவ நண்பர்களே என் அன்பிற்கு உகந்த ஆவிக்குரிய உறவுகளே என் மீட்பரும் ஆண்டவருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் இனியப் பெயரால் உங்களை வாழ்த்துகிறேன். இதெற்கெல்லாம் காரணரான தேவனாகிய கர்த்தரை நன்றியுடன் துதிக்கிறேன். இணைய உலகில் இதுவரை இல்லாத வகையில் கிறிஸ்தவர்களுடைய செயல்பாடுகளும் பங்களிப்புகளும் அதிகரித்து வருகிறதை நாம் அறிவோம். அதேநேரம் இணையத்தில் நுழைகிறவர்கள் யார்? யாருடன் உறவாடுவது? இவர்களில் யார் நல்லவர்? யார் கள்ளர்? என்று கண்டுபிடிக்க முடியாமல் நாள்தோறும் தடுமாறுவதைக் கண்டு அதிர்ச்சியடைகிறேன். அதுமட்டுமல்ல.. குறை சொல்லுவதாக நினைக்காமல் இதைப்படியுங்கள் கோபப்பட  வேண்டாம். அருமையான ஊழியர்களில் அநேகர்.. இணையத்தில் நுழையும் சில ஊழியர்கள்  குறைந்த காலங்களிலேயே தாங்கள் நுழைந்த தளத்தை அரட்டை அரங்கமாக மாற்றி அசத்தி விடுகின்றனர். அதுவரைக்கும் அவர்களுக்குள் இருந்த தாலந்துகளெல்லாம் பொங்கி வழிகிறது. அச்சமயங்களில் கட்டுக் கதைகளால் இணையத்தை கலகலப்பாக்கி விடுகின்றனர்.  ஒரு மனிதர் தான் ஒருத்தியை பயண வழியில் கண்டதாகத் துவங்கி அவள் வாந்தி எட

எல்லாம் எங்கள் ஊர், எல்லோரும் எங்கள் உறவுகளே..!

Image
யாதும் ஊரே யாவரும் கேளிர்   தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே, மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே - (புறம்: 129)                                            - கணியன் பூங்குன்றனார் விளக்கம்: எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள்தான்; தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை;  துன்பமும், அதன் தீர்வும் கூட அது போல்தான்.  செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை. வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு. மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு; வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய, கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி, அதன் தட

உண்மையை சொல்லுங்கள். தசமபாகம் கொடுக்காமல் விட்டிருக்கிறீர்களா ? - தசமபாக வழக்கு 005

பாஸ்டர் ஜோன்ஸ் : கனம் நீதிபதியவர்களே, கோர்ட்டார் அவர்களே, கடைசியாக இயேசு கூறிய வேத வாக்கை தங்கள் பரிசீலனைக்கு தெரிவித்துவிட்டு என் வாக்குமூலத்தை நிறைவு செய்கிறேன். அதாவது  இயேசு மாற்கு 10: 29,30 வசனங்களில்... என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இமமையிலே, நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.  இம்மையிலே நூறத்தனையாக அவைகளைதிரும்ப பெறுவான் என்று சொல்லியிருப்பதால், ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கும் மக்கள் எங்களிடம் காணிக்கை தந்திருக்கிறார்கள்.  ஒன்றுக்கு நூறாக ஆசீர்வதிக்க இயேசு வாக்களித்திருக்கிறபடியால் 10-ல் ஒன்று கொடுப்பது சாதாரணமாகி விடுகிறதை கனம் கோர்ட்டார் அவர்கள் கவனிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். என்மேல் சாட்டப்பட்ட குற்றம் வேதத்தை தவறாக போதித்து தசமபாகம் என்ற காணிக்கையை கட்டாயப்படுத்தி வாங்கின

பாஸ்டர் ஜான்சன் மேமனாவை பயன்படுத்திய பரிசுத்த ஆவியானவரே...,

Image
அன்புக்குகந்த நண்பர்களே..,  இரட்சகராம் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறேன். நேற்றும் நேற்றைய முந்தைய நாளும் (ஜன 11,12 - 2014 ல் ) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த  "விடுதலையின் நற்செய்திக் கூட்டங்கள்"  தேவகிருபையினால் அருமையாக நடந்தது. தேவசெய்தி கொடுத்த தேவ ஊழியர் ஜான்சன் மேமனா அவர்களை தேவன் தம்முடைய வல்லமையினால் பயண்படுத்தினார். அதேபோல தமிழில் மொழி பெயர்த்த பாஸ்டர் நெல்சன் அவர்களையும் பாஸ்டர் ஜான்சன் மேமனாவை பயன்படுத்திய பரிசுத்த ஆவியானவரே பயன்படுத்தியதால், அவருடைய மொழி பெயர்ப்பும் மிக நன்றாக இருந்தது. மேலும்.., நம்முடைய K.R.M சபையில் "உதிவிக்காரர் ஊழியத்திற்காக" சகோ ஜோசுவா மனோகர் அவர்களை பிரதிஷ்டை செய்தோம். அத்துடன் என்னுடைய 3 வது மகன் தீமோத்தேயு சந்தோசமாய் ஞானஸ்நானம் எடுத்ததின் மூலம் கர்த்தருடைய நீதியை நிறைவேற்றினார். கூட்டங்களுக்காக  ஜெபித்த உழைத்த ஒத்துழைத்த கொடுத்த அனைவருக்காகவும் கர்த்த