Posts

Showing posts from October, 2012

கல்லை முத்தமிடுவதால்...,

அன்பு, பாசம், நேசம், காதல் என, மனதில் ஏற்படும் உணர்வுகளை அடையாளப்படுத்த உதவும், எளிமையான சாதணமாக முத்தம் பயண்படுகிறது..  தாய், தந்தை மற்றும் பிள்ளைகள் பெற்றோருக்கு என குடும்பத்திற்குள் பகிர்ந்து கொள்ளும் முத்தம். பாசத்தின் அடையாளமென்கிறோம். காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனைவிக்குத் தரும் முத்தம், அன்பின் அல்லது, மோகத்தின் அடையாளம் என்கிறோம். இப்படியாக, சூழ்நிலை அல்லது இடத்திற்கேற்படி முத்தத்தின் பொருள் மாறுபடுகின்றது. முத்தம் தோன்றியது எப்போது?      எந்த உயிரினம் தன் உணர்வை வெளிப்படுத்த விரும்பியதோ..? அப்பொழுதுதான், முத்தம் தோன்றியது. என்பதுதான், பதிலாக இருக்குமேயன்றி வேறில்லை. யார்? யாரிடத்தில் அன்பை வெளிப்படுத்துவார்கள்?        உயிரிணங்கள் மட்டும்தானா? உயிரினங்கள் மரியாதை செய்யும் பொருட்டு, உயிரற்ற பொருட்களில் முத்தமிட மாட்டார்களா? என்பீர்களாகில்.... ,  சிலர் சில பொருட்களுக்கு முத்தமிடுகிறார்கள் என்பது உண்மையே..! ஒரு மட்டை வீரர் தன்னை நோக்கி வீசப்பட்ட பந்தை தனது மட்டையால் வேகமாக அடிக்கிறார். பந்து ( Ball ) எவருடைய கையிலும் சிக்காமல் பறந்து போய், பார்வையாளர்கள் பகுத

கர்த்தருடைய சபையானது தூய்மையாகி வசனத்தின்படி வாழ வேண்டுமென்று....,

Image
கிறிஸ்து இயேசுவில் எனக்கு மிகவும் பிரிமானவர்களே..! என்னை மீட்டெடுத்த மீட்பராம் இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறேன். ஒருசிலர் என்னைக் கடுமையாய் விமர்சிக்கிற படியினாலே... நான் எனது நிலையை மாற்றிக் கொண்டு அனைத்து தரப்பினரும் விரும்புகிறபடி எழுத வேண்டும். அல்லது ஸ்தல ஊழியத்தை மட்டுமே கவனித்து அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்றும் நண்பர்களில் சிலர் விரும்புகிறதை அவர்களது எழுத்துக்கள் எனக்கு அறிவிக்கிறது.  உங்களுடைய எதிர்பார்ப்பு நல்லதுதான். என் நலம் நாடும் நண்பர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லுகிறேன். நான் என் மரியாதையையும் என்னுடைய நலத்தையும் மட்டுமே நாடினால்... கர்த்தருடைய ஊழியத்தை போராட்டத்தின் மத்தியில் செய்யப் போவது யார்? உண்மையை உண்மையாய் சொல்வதினாலேதானே பிரச்சனை வருகிறது..! இன்னும் புரியலல்ல.. ஒரு உண்மையை மீன்டும் அழுத்தமாகச் சொல்லுகிறேன். நான் மாம்சத்தின்படி இயங்குகிற சபைகளின் ஊழியக்காரனல்ல... நான் ஒரு ஆவிக்குரிய சபையில் கர்த்தருடைய வேலையைச் செய்ய கர்த்தரால் அழைக்கப்பட்ட கர்த்தருடைய ஊழியக்காரனாக இருக்கிறேன். எனவேதான் என்னால் கர்த்தருடைய வேலையை அசடம்டையா

பாம்பை என் கால்களுக்கு கீழே...,

Image
Face - Book ல் எழுதியதை எனது நண்பர்களாகிய உங்களுடைய பார்வைக்காக இங்கும் பகிர விரும்புகிறேன்.  --------------------------------------------------------- "பாம்பு" "பாம்பு" என்று கத்திக் கொண்டு ஓடுபவன் ஜனங்களை எச்சரிப்பதாக தம்பட்டம் அடித்தாலும்.. - அவன் உயிருக்குப் "பயந்து ஓடுகிற கோழை" என்பதுதானே உண்மை...! நான் பயந்து ஓடுகிற கோழையாக இருக்க விரும்பவில்லை. ஏனெனில்… அந்த பாம்பையும் என் கால்களுக்கு கீழே நசுக்கிப் போடுபவர் கர்த்தர் அல்லவா? மரணத்தையும் ஜெயித்தவர் ஜெயம் பெறுவதற்கு தயங்குகிற கோழைகளை தன் எல்லைக்கு வெளியே புறம்பாக்குவார்.. புரிந்து கொள்ளுங்கள். நண்பர்களே.. நீங்கள் என்னை சுலபமாய் புரிந்துகொள்ள - நான் சாலையோரம் நாட்டப்பட்ட "மைல்கல்" அல்ல..  ஜீவனுள்ள கல்லாகிய கிறிஸ்து இயேசுவுடன் இணைக்கப்பட்டவன் நான் . ஒருவேளை நாம் இணைந்து பயணம் செய்தோமானால் என் தனித்துவம் புரியும். சிலருக்கு சற்று தாமதமாகும். அவசரமாய் வந்து அதிரடியாய் வெளியேறினால்.. எதுவுமே புரியப் போவதில்லை.