Posts

Showing posts from 2016

தீபாவளி - முன்பு விவேகானந்தருடைய அறிவிப்பை அறியுங்கள்.

தமிழன்   கொல்லப்பட்ட   நாளை   தீபாவளி   நாள்   என்று தமிழர்களே   கொண்டாடுவதா ? இதை   படிக்கும் முன்பு    இந்தியாவின்   தென்பகுதியில்   வாழ்ந்த மக்களையே   புராணங்களில்   இராட்சதா்களாகவும்   குரங்குகளாகவும் சித்தரித்தனா்   என்ற   விவேகானந்தருடைய   அறிவிப்பை   அறிந்து   கொள்ளுங்கள் . தீபாவளியைப்   பற்றி   பல   கதைகள்   உண்டு .  வடநாட்டவரைப்   பொறுத்தளவில்  ( குஜராத்திகள் ,  மார்வாரிகள் )  தீபாவளி   இலக்குமிக்கு   உரிய    நாள் .  அவர்களது   புத்தாண்டின்   தொடக்க   நாள் .  அப்பகுதிகளில்   உள்ள   வணிகர்கள்   புதுக்   கணக்கை   அந்த   நாளில்தான்   தொடங்குகிறார்கள் .  வங்காளிகள்   தீபாவளியை   காளி   அல்லது   துர்க்கைக்குரிய   நாளாகக்   கொண்டாடுகிறார்கள் .  இன்னும்   சில   இனத்தவருக்கு   தீபாவளி   நாள்   இராமன்    வனவாசம்   முடித்து   அயோத்திக்குத்   திரும்பிய   நாள் .  தமிழர்களை   பொறுத்தளவில்   தீபாவளி நாள்   நரகாசுரன்   என்ற   அசுரன்   கொல்லப்பட்ட   நாள் .  இது   பற்றிய   புராணக் கதை  நரகாசுரன்   பூமாதேவியின்   பிள்ளை .  காமரூப   நாட்டின்   மன்னன் .  படைப்புக்