Posts

Showing posts from February, 2014

தூத்துக்குடி ஊழியத்தைச் செய்ய உற்சாகமாக...

Image
தூத்துக்குடியில் "தூத்துக்குடி எழுப்புதல் திருச்சபை" என்ற வடிவமான சபையை, 09 02 2014 - ல், மிக எளிமையான முறையில் தேவ கிருபையினால் துவக்கியிருக்கிறோம். இந்த சபையானது தேவஒழுங்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவ்வித விளம்பரமுமில்லாமல் ஆரம்பித் தபோதும் வாய்மொழி அழைப்பை ஏற்று அநேகர் வந்து கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முதல் நாளிலேயே 14 இந்துக்கள் வந்ததுடன் அவர்கள் சுவிஷேசத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்டபோது அருமையான ஊழியம் செய்த திருப்தி எமது குழுவினருக்கு ஏற்பட்டது. தூத்துக்குடி ஊழியத்தை கர்த்தருக்கு பயப்படும் பயத்துடன் வழி நடத்திச்செல்ல ஆவிக்குரிய அனுபவமுள்ள நண்பா்களை நியமிக்க இருக்கிறோம். ஜெபித்து கொள்ளுங்கள். தூத்துக்குடியிலுள்ளவர்கள், தொடர்பு கொள்ள.. Contact No's  93606 77580.

ஞானப்பிரகாசம் தன்னை சி.எஸ்.ஐ சபையை சார்ந்தவன் என்று பொய் சொல்லுகிறார்.

Image
"வேதாகம அடிப்படை உபதேசத்தில்" ஞானப்பிரகாசத்தின் துவக்கம் முதலிலேயே கோனலாகிவிட்டது. ஆகையால், அவரது பயணம் முற்றும் கோனலாகவே இருப்பதை நம்மால் உணர முடிகிறது. ஞானப்பிரகாசம் உபதேச அடிப்படையில் கண்களில் உத்திரத்தையுடையவர் என்றாலும் பிறருடைய கண்ணில் தூசியை நீக்க முனைகிறார்.  தன் கண்ணில் உத்திரத்தை மறந்தவர். மட்டுமல்ல அதை ஒருபோதும் அகற் ற முயலாதவர். இவா் வயதில் முதிர்ந்தவராக தெரிந்தாலும் "வசனத்திலோ" சற்றும் முதிராதவராக இருக்கிறார். நானும் கிறிஸ்த்தவதன்தான்... என்று இவா் எங்கும் நுழைந்து பழகி உறவாடி பின்னா் குழி பறிக்கிறவா். இதை சுருக்கமாக ”கூட இருந்தே குழி பறிக்கிறவர்” என்போம். கிறிஸ்தவ ஜனமே "எச்சரிக்கை" “ஜாக்கிரதை...." அநேகர் எழும்புவார்கள் என ஆண்டவர் கூறியது நினைவிருக்கிறதா? அந்த அநேகரில், இவரும் ஒருவர். எனவே, உங்களில் யாரும் இவரால் வஞ்சிக்கப்படாதிருங்கள்.   வயதில் முதிர்ந்த ஞானப்பிரகாசத்தை அவமானப்படுத்து எமது நோக்கமல்ல. சபைக்கும் உபதேசத்திற்கும் எதிரானவா் என்பதை சுட்டிக் காட்டுகிறோம் அவ்வளவே.. ஞானப்பிரகாசம் &quo

பெந்தகோஸ்தே சபைகளை அவதூறு செய்கிற பொன்னுதுரை ஜோசப் அவா்களுக்கான சிறப்பு அழைப்பு..

Image
இதெல்லாம் பிழைப்பா? அல்லது, இதுதான் பிழைப்பா? என்ற தலைப்பில்.., // பிழைப்புக்கு வழியில்லாமல் சபைகளை ஆரம்பித்து பாஸ்டர்களாகி திருட்டுத்தொழில் செய்து நடத்துகின்றவர்கள் செய்கின்ற அட்டூழியங்கள்தான் இவைகள். இவர்கள் கேயாரம் சபை என்றும் அகாபே சபையென்றும் தங்கள் கட்டிடங்களுக்கு பெயர்களை வைத்துக்கொண்டு பண்ணிக்கொண்டிருப்பதே அட்டூழியங்கள்தான். //  என்ற –( Ponnudurai Joseph ) பொன்னுதுரை ஜோசப் அவா்களுக்கான சிறப்பு அழைப்பு :- P.J அவா்களே நான் ஊழியம் செய்யும் சபைக்கு எவ்விதத்திலும் தொடா்பற்ற நீா் முறையற்று நடந்து கொள்வதுடன், K.R.M சபையின் பெயரையும் மற்றும் சில சபைப் பெயா்களையும் அடையாளப்படுத்தி ஒரு (Status) பதிவிட்டு பெந்தகோஸ்தே சபைகளை அவதூறு செய்திருக்கிறீா். உமது பதிவில் உள்ளதையெல்லாம் படிக்கும்போது நீா் உண்மையிலேயே அக்கரையினால் எழுதுகிறீரா? அல்லது ஆவிக்குரிய சபைகளை குற்றப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், வேண்டுமென்றே எழுதுகிறீரா? என்ற சந்தேகம் என்னைப் போன்ற பாஸ்டா்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதைப்பற்றின எங்கள் சந்தேகத்தை அறிய உமக்கு 2 வாய்ப்பு தருகிறேன். 1.நீ

இயேசுகிறிஸ்துவானவா் தமது உடலாகிய திருச்சபையை தம் மீதே கட்டினார்..!

Image
இயேசு தம் சீடரை நோக்கி மானிடமகன் யாரென்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக நீர் மெசியா வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார். அதற்கு இயேசு யோனாவின் மகனான சீமோனே நீ பேறு பெற்றவன். ஏனெனில், எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன். உன் பெயர் பேதுரு இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. என்றார் மத் 16 13..18 வரை, இயேசுவின் வார்த்தையை கவனியுங்கள்.., 1. இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. இதை என்றால் வாழும் கடவுளாகிய மெசியா என்பதை.. 2. இந்தப் பாறையின்மேல் என் திருச்சபை.. இந்தப் பாறை என்றால்.., யார்? என அறிந்து கொள்ள  திருவிவிலியத்தில் தேட வேண்டும். ”ஆண்டவர் என் காற்பாறை. என் கோட்டை. என் மீட்பர். என் கடவுள். நான் புகலிடம் தேடும் மலை. அவரே என் கேடயம். எனக்கு மீட்பளிக்கும் வல்லமை. என் அரண் என் தஞ்சம். என் மீட்பர். கொடுமையினின்று என்னை விடுவிப்பவரும் அவரே. என்ற இந