Posts

Showing posts from 2012

"தோற்பதற்கு அல்ல ஜெயிப்பதற்கு"

Image
கிறிஸ்து இயேசுவினால் எனக்குப் பிரியமானவர்களே.. வாழ்த்துகிறேன்.  நாம் எல்லாரும் ஆதாமுடைய சந்ததியில் வந்தவர்களேயானாலும், நாம் எல்லாரும், ஆதாம் அல்ல. என்பது இந்த பிசாசுவுக்குத் தெரிவதில்லை. எனவேதான் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மை இந்த ஏமாற்றுக்காரன் பல்வேறு வழிகளில் வஞ்சிக்கத் துடிக்கிறான். அவன் தேவனுடைய ஜனத்திற்கெதிராக தானாகவும் தமது சீஷர்கள் மூலமாகவும் பல்வேறு யுத்த தந்திரங்களைப் பயண்படுத்துகிறான். அவைகள் முக்கியமான மூன்று. அவையாவன.., 1.கண்களின் இச்சை,  2.மாம்சத்தின் இச்சை,  3.ஜீவனத்தின் பெருமை.    இந்த ஆயுதங்களை அவன் முதன்முதலில் ஆதாமிடமும், பின்னர், அநேகரிடமும், உச்சக்கட்டமாக நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவிடமும், பயண்படுத்திப் பார்த்தான். என்ற.., செய்திகளையெல்லாம் நாம் எப்போதும், நினைவில் நிறுத்திக்கொள்வது நல்லது. "இயேசுவானவர் தேவனுடைய வார்த்தை" என்பதை நாம் நன்கு அறிவோம். என்றாலும் அவர் சோதனைக்காரனால் சோதிக்கப்பட வேண்டிய நிலை வந்தபோது.. இயேசு கிறிஸ்துவினிடத்தில் சாத்தானானவன் தேவனுடைய வார்த்தைகளை பயண்படுத்தியே வஞ்சிக்கப் பார்த்தான் நீங்களும் நானும

K.R.M சபையின் இந்த மாதத்தின் வாக்குத்தத்த வசனமும், செய்தியும்.

தேவனுடைய அன்பினால்   என் சகோதர சகோதரிகளே…! கிறி ; ஸ்துவினிமித்தம் உங்களை வாழ்த்துகிறேன் . கர்த்தருக்கு ஸ்தோத்திரம் . 2012 ஆம் ஆண்டு துவங்கின நாள் முதல் இந்த நாள்வரை 11 மாதங்களாக கர்த்தர் நம்மை காத்து நடத்தியிருக்கிறார் . 12- ம் மாதத்தின் முதல் நாளாகிய இந்த நாளிலே கர்த்தர் சமூகத்தில் ; கூடி வந்திருக்கிறோம் . நமது கூடுகைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் . நமது கூடுகை, அர்த்தமுள்ளதாக இருப்பதினால் மகிழ்ச்சியடைந்து நம்முடைய கர்த்தரை துதிக்கிறேன் . நமது கூடுகையானது உலகப் பிரகாரமான ஆசீர்வாதத்தை மட்டுமே குறியாக வைத்து அல்ல . இதுவரை நம்மை நடத்தி வந்த கிருபை மிகுந்த தேவனுக்கு ஸ்தோத்திரங்களை செலுத்தி அவரை மகிமைப்படுத்தும்படி கூடி வந்திருக்கிறோம் . இப்படி, சபையாய் கூடி இதுவரை நம்மை நடத்தின தேவனைத் துதித்து புதிய மாதத்தை ஜெபத்துடன் கூட துவங்கியிருக்கிறோம் . பரிசுத்த வேதாகமத்தில் நம்மை தைரியப்படுத்தக் கூடிய வசனங்களில் முக்கியமானது பிலி 4- ம் அதிகார த் தின் 6; மற்றும் 7- ம் வசனங்கள் ஆகும் . “ நீங்கள்