அந்த நல்ல நாளுக்காக...,
கிறிஸ்து இயேசுவில் என்க்கு பிரியமானவர்களே..!
மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான். கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது. அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி,
பயப்படாதிருங்கள். இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக் 2: 8..11 என்று சொன்ன அந்த நல்ல நாளுக்காகவும்..,
இணைய பயணத்தில் என்னுடன் இணைந்து பயணிக்கிற நல்ல நண்பர்களுக்காகவும் கர்த்தரைத் துதிக்கிறேன்.
இந்த 2013 ன் 25ந்தேதியிலே, நீங்கள் எவ்வித மனநிலையில் இருந்தாலும், பரவாயில்லை. நானோ, இந்த வருடம் நேற்று ஆரம்பித்தது போல இருந்ததே, அதற்குள் அதாவது 2013 ம் வருடம் திடீரென்று கடந்து போய்விட்டதே என்பதை எண்ணி வியந்து போகிறேன்..
பயப்படாதிருங்கள். இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக் 2: 8..11 என்று சொன்ன அந்த நல்ல நாளுக்காகவும்..,
இணைய பயணத்தில் என்னுடன் இணைந்து பயணிக்கிற நல்ல நண்பர்களுக்காகவும் கர்த்தரைத் துதிக்கிறேன்.
இந்த 2013 ன் 25ந்தேதியிலே, நீங்கள் எவ்வித மனநிலையில் இருந்தாலும், பரவாயில்லை. நானோ, இந்த வருடம் நேற்று ஆரம்பித்தது போல இருந்ததே, அதற்குள் அதாவது 2013 ம் வருடம் திடீரென்று கடந்து போய்விட்டதே என்பதை எண்ணி வியந்து போகிறேன்..
இந்த 25ந்தேதி முதல், கடந்த வந்த பாதைகளை திரும்பிப்பார்க்க முற்படுகிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது..! எத்தனை அனுபவங்கள்? ஆனந்தங்களும் காயங்களும் போட்டிப் போட்டல்லவா.., நம்முடன் உறவாடியது...?
தழும்புகளை தடவிப் பார்க்கிறேன். அத்தனையும் ஆண்டவருக்கான ஊழியத்தின் பாதையில் கள்ளர்களால் வந்ததுதானே..!?
என் பாதைகளில் என் பயணத்தில் என்னுடன் இருக்கிற என் ஆண்டவர் முன்னமே (யோவா 15: 20 21 ல்) சொல்லியிருந்தார். "ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள்
என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள். அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள். அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள். இதுமட்டுமல்ல, தேற்றரவாளனாம்..
பரிசுத்த ஆவியானவர் பவுல் அப்போஸ்தலன் மூலமாக "அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்." என்று 2தீமோ 3:12 லும் சொல்லியிருந்தபடியினால்..,
2கொரி 12: 10 ன்படி "ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும் நிந்தைகளிலும் நெருக்கங்களிலும் துன்பங்களிலும் இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்." என்கிறேன்..., மிக தைரியமாக...!
பரிசுத்த ஆவியானவர் பவுல் அப்போஸ்தலன் மூலமாக "அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்." என்று 2தீமோ 3:12 லும் சொல்லியிருந்தபடியினால்..,
2கொரி 12: 10 ன்படி "ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும் நிந்தைகளிலும் நெருக்கங்களிலும் துன்பங்களிலும் இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்." என்கிறேன்..., மிக தைரியமாக...!
வேதனையுடன் விடிவுக்காக காத்திருந்த சமயங்களிலெல்லாம் இப்படியான கர்த்தருடைய ஜீவனுள்ள வசனங்கள்தான் என்னை தேற்றியிருக்கிறது.
முன்னவர்களிலும், புதியவர்களிலும் அனைவருக்காகவும்.., என்னை இன்னும் தொடர நினைப்பவர்களுக்காகவும் கர்த்தரைத் துதித்து வாழ்த்துகிறேன். கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
முன்னவர்களிலும், புதியவர்களிலும் அனைவருக்காகவும்.., என்னை இன்னும் தொடர நினைப்பவர்களுக்காகவும் கர்த்தரைத் துதித்து வாழ்த்துகிறேன். கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
இப்படிக்கு
கிறிஸ்துவுக்குள் உங்களுக்காக
கிறிஸ்துவுக்குள் உங்களுக்காக
பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம்.
Comments
Post a Comment