Posts

Showing posts from October, 2015

நாடார்களே உணா்வில்லையா ?

Image
அடிமைத்தனத்தை உடைத்து அருமையாய் வளா்ந்து நிற்கும் நாடார் சமுதாயத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகவே மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒருவரை நாடார் என்ற காரணத்திற்காகவே தரையிலே உட்கார வைத்ததின் மூலம் அவரை தெரிந்தெடுத்த அனைத்து சாதி, மத மக்களையும் கேவலப்படுத்தி இருக்கின்றனரே..! நாடு போற்றும் நாடார்களே உணா்வில்லையா? தமிழ்செல்வி நாடார் என்ற முகநூல் விலாசத்தில் உள்ள ஒருவா் ”நாடார்களே கிறிஸ்தவ மதத்திற்கு மாறாதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்தும் கிறிஸ்தவர்களின்  புனித நூலாகிய பைபிளை மிககேவலமாகவும் திரித்து கருத்து வெளியிட்டிருந்தார்கள். அவர்களுக்கு பதில் அளித்து நான் வெளியிட்ட கருத்துக்களை அதிலிருந்து எடுத்து விட்டபடியினால், என்னுடைய பக்கத்தில் இதை வெளியிடுகிறேன். திருவாங்கூர் சமஸ்தானத்தில் நம்பூதிரிகளும், நாயர்களும் நாடார் உட்பட மற்ற சூத்திர சாதி பெண்களை மேலாடை அணியக்கூடாது என்று சட்டம் போட்டு அப்படி மேலாடை அணிந்தவர்களை பொது இடங்களில் ஒரு நீளமான குச்சியின் முனையில் கத்தியை கட்டி நாடார் பெண்களின் மேலாடைகளை கிழித்ததும், முலைவரி விதித்ததும், அந்த வரி கட்டாத நாடார் பெண்களை மார்பகங்களை வெட்டி

நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதி..!

Image
நண்பா்கள் அனைவருக்கும் காலை வணக்கம். ( இது ஏற்கனவே வேறொரு செய்தியின் இடையில் இது எழுதப்பட்ட செய்தியாக இருந்தாலும் காலத்தின் தேவை கருதி தனித்து...) பரிசுத்த வேதாகமத்தை படிக்கிறவா்கள் பரிசுத்த வேதாகமத்தை நான்கு பிரிவுகளாக பிரித்துக் கொண்டு படிக்க வேண்டுமென்று ஆலோசனையாகக் கூறுகிறேன். அப்பொழுது உங்களுக்கு அநேக விஷயங்கள் புரியத் துவங்கும். நாம் மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட பழைய உடண்படிக்கையினால் தேவனைச் சேராமல் புதிய உடண்படிக்கைக்கு உட்பட்டு, அவருடைய பிள்ளைகளாகக்  காணப்படுகிறோம். இதனால் நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக பல்வேறு சிறப்பான தகுதியை பிதாவினிடத்தில் பெருகிறோம். இப்படியான மேன்மையான அனுபவத்தை கிருபையாகப் பெற்ற நாம் தேவனை பரியாசம் பண்ணக்கூடாது. உதாரணமாக  எபே 5: 10 கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். (என்றும்) கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். என்றும் ஆவியானவா் நமக்கு அனுமதியளித்துள்ளார். என்னுடைய அனுபவத்திலிருந்து ஒரு சம்பவத்தை குறிப்பிட விரும்புகிறேன். ஒருநாள் காலையில் தொலைபேசிய

இனி அப்படி இருக்கலாகாது...,

Image
கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்து நமக்குக் கற்றுத்தந்ததும் இந்திய சட்ட திட்டங்களுக்கு சற்றேனும் முரன்படாததுமான போதனைகளை நமது இறைவேதத்தின் கட்டளைக்கு இணங்க மக்களுக்கு போதித்து வருகிறோம். நமக்கு கிடைக்கும் தரிசனத்தின் அடிப்படையில் பல்வேறு பகுதிகள் மாவட்டங்கள் மாநிலங்கள் என்று பயணித்து கிறிஸ்துவின் அன்பையும், நற்போதனைகளையும் சமூக சேவைகளையும் செய்து வருகிறோம்.  நம்மால் அறிவிக்கப்படும் சுவிஷேசத்தைக் கேட்கிற எவ்விடத்திலுமுள்ள ஜனங்கள் தங்கள் பாவ வழிகளை விட்டு என்பதுடன், சமூக சீர்கேடுகளையும், மனித சரீரத்தில் பாதிப்புகளை உண்டுபண்ணுகிற தீமையான பழக்க வழக்கங்களை கூட ஓழித்துவிட்டு மனமாற்றமடைந்து திருந்துகின்றனர்.  இப்படி பல குடும்பங்கள் இயேசுகிறிஸ்துவினால் வருகிற சமாதானத்தை அடைந்து சுகவாழ்வு வாழ்ந்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்தோர் உயருகின்றனர். அவர்களுடைய பிள்ளைகளும் கல்வி அறிவு போன்ற மேன்மைகளை அடைந்து சந்ததிகள் சந்தோஷமாக வாழுகின்றனர். எனவேதான்  நாம் நமது இறைப்பணியை முழுமனதோடும், உற்சாகத்தோடும் செய்து வருகிறோம். என்றாலும்...,  நமதுது இறைப்பணியை கெடுத்துப்போட சில அமைப்புகள் ப