Posts

Showing posts from December, 2012

"தோற்பதற்கு அல்ல ஜெயிப்பதற்கு"

Image
கிறிஸ்து இயேசுவினால் எனக்குப் பிரியமானவர்களே.. வாழ்த்துகிறேன்.  நாம் எல்லாரும் ஆதாமுடைய சந்ததியில் வந்தவர்களேயானாலும், நாம் எல்லாரும், ஆதாம் அல்ல. என்பது இந்த பிசாசுவுக்குத் தெரிவதில்லை. எனவேதான் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மை இந்த ஏமாற்றுக்காரன் பல்வேறு வழிகளில் வஞ்சிக்கத் துடிக்கிறான். அவன் தேவனுடைய ஜனத்திற்கெதிராக தானாகவும் தமது சீஷர்கள் மூலமாகவும் பல்வேறு யுத்த தந்திரங்களைப் பயண்படுத்துகிறான். அவைகள் முக்கியமான மூன்று. அவையாவன.., 1.கண்களின் இச்சை,  2.மாம்சத்தின் இச்சை,  3.ஜீவனத்தின் பெருமை.    இந்த ஆயுதங்களை அவன் முதன்முதலில் ஆதாமிடமும், பின்னர், அநேகரிடமும், உச்சக்கட்டமாக நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவிடமும், பயண்படுத்திப் பார்த்தான். என்ற.., செய்திகளையெல்லாம் நாம் எப்போதும், நினைவில் நிறுத்திக்கொள்வது நல்லது. "இயேசுவானவர் தேவனுடைய வார்த்தை" என்பதை நாம் நன்கு அறிவோம். என்றாலும் அவர் சோதனைக்காரனால் சோதிக்கப்பட வேண்டிய நிலை வந்தபோது.. இயேசு கிறிஸ்துவினிடத்தில் சாத்தானானவன் தேவனுடைய வார்த்தைகளை பயண்படுத்தியே வஞ்சிக்கப் பார்த்தான் நீங்களும் நானும