Posts

Showing posts from June, 2012

பிரியமானவர்களே..,சோதித்தறியுங்கள்

கோல்டா அவர்களுக்கு காலை வணக்கம். பரிசுத்த வேதாகமத்தை நான்கு பிரிவுகளாக பிரித்துக் கொண்டு படியுங்கள் அப்பொழுது உங்களுக்கும் அநேக விஷயங்கள் புரியும்;. பழைய உடண்படிக்கையினால் தேவ ஜனங்களானவர்களைப் போல அல்ல நாம்… புதிய உடண்படிக்கைக்கு உட்பட்டு அவருடைய  பிள்ளைகளாக  காணப்படுகின்ற நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக பல்வேறு சிறப்பான தகுதியை பெற்றிருக்கிறோம். அப்படிப்பட்ட நாம் தேவனை பரியாசம் பண்ணக்கூடாது. உதாரணமாக சில வசனங்கள்:- லூக் 6: 43. நல்ல மரமானது கெட்ட கனிகொடாது, கெட்ட மரமானது நல்ல கனிகொடாது. மத் 12 :33 ….. மரமானது அதின் கனியினால் அறியப்படும். இங்கே மரமென்கிற பதம் மனிதனை குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிது என்பது உங்களுக்குத் தெரியும். அப்படியானால் மனிதனுடைய கிரியைகளை வைத்து அவனை கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு ஜெபம் என்ற போர்வையில் அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்@ அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். (மத் 6: 7 ) ஒருவேளை “இந்த ஏஞ்சல் டிவி உமது சித்தப்படி ஆரம்பித்த டிவி தானா? அதில் வரும் செய்திகள்