Posts

Showing posts from August, 2015

கிறிஸ்தவத்திற்கு என்னவாயிற்று?

Image
பெந்தகொஸ்தே சபைகளின் உண்மை நோக்கம்.  இரட்சிக்கப்பட்டு தேவ ஜனங்களாக ஆனவா்களை தேவனுக்கேற்ற பக்தி விருத்தி அடையச் செய்வதுடன்,  அவா்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் கறை திரை பிழையில்லாமல் வாழச்செய்ய வழி நடத்துவதும்,  வேத வசனமான மன்னாவை முறையாக புகுட்டி உட்கொள்ளச் செய்வதுடன் கிறிஸ்துவினுடைய நிறைவான வளா்ச்சிக்கு ஏற்றபடி பூரண புருஷராக வளரச் செய்வதுமாகும். இந்நிலையில், இயேசுகிறிஸ்துவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து அவருடைய வருகையில் அவரை மகிழ்ச்சியோடு எதிகொள்ளச் செய்வதுமே பெந்தகொஸ்தே சபைகளின் உண்மையான நோக்கம் என்பதை நம்மில் அநேகா் அறிவார்கள்.    அதேநேரம்..., இந்த உண்ணத நோக்கத்தைக் கெடுக்க வந்த சில பெருச்சாலிகள் போன்ற போதகா்கள், நாங்களும் பெந்தகொஸ்தே சபைப் போதகா்கள்தான் என்று பொய்யான பிரச்சாரம் செய்வதுடன்,  பெந்தகொஸ்தே அல்லது ஆவிக்குரிய உபதேசத்தை சிதைத்து, பெந்தகொஸ்தே என்னும் பெயரையே கெடுத்தும் வருகிறார்கள். இவா்கள் பணத்தாசை  பிடித்து திரிவதினாலேயே இப்படி நடந்து கொள்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடாகவே இந்த மொட்டை போட்ட மனிதரை வைத்து இவா்கள் நடத்துகிற கூட்டத்தை காண்கி