Posts

Showing posts from January, 2013

20. 01. 13 K.R.M Sunday Service.

நேற்று இருந்ததைவிட ஒரு மேலான வாழ்க்கையை தேவ உதவியுடன் வாழ இன்றே தீர்மாணியுங்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது 20.01.2013 அன்று நம்முடைய K.R.M சபை ஆராதனையில் பகிர்ந்து கொண்ட தேவ செய்தி.. https://www.youtube.com/watch?v=9eJzSDbVyTc

கடைசிவரை நம்முடன்....,

Image
அவர்: கர்த்தர்.  கர்த்தர். இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும்,  மகா தயையும் சத்தியமுமுள்ள தேவன். யாத் 34: 6 ...நீரே தேவன். உம்முடைய வார்த்தைகள் சத்தியம் 2 சாமு 7: 28 என் நாவிலே அக்கிரமம் உண்டோ?  என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ? யோபு 6: 30 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,  தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே  மறுரூபமாகுங்கள். ரோம 12: 2 தேவனை அறிந்தவர்களும், கண்கள் திறக்கப்பட்டவர்களும், சத்தியத்தை உணர்ந்தவர்களும், யதார்த்தத்தைப் புரிந்தவர்களும், பகுத்திவுள்ளவர்களும் கர்த்தருக்காக கடைசிவரை நம்முடன் இணைந்து வருவார்கள்.

சென்னை "ஜெப மாநாடு" திடுக்கிடும் தகவல்கள்.?

Image
"ஜெபமாநாடு" என்ற பெயரில் சென்னையில் பிரமாண்டமான அளவில்.., "ஆன்மீக அரசியல் மாநாடு" ஒன்றை நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இந்த மாநாட்டின் மூலம் லட்சக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கடவுள் பெயரால் ஏமாற்றப்பட்டுள்ளனர். எப்படியெனில்..., தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்ததுபோல சென்னையிலும் 12 மணிநேர உபவாசக் கூட்டமாகவே நடத்துவதுதான் இவர்களுடைய முதல் திட்டம். ஆனால், திடீரென்று 12 மணிநேர உபவாசக்கூட்டம் பிரமாண்டமான ஜெபமாநாடாக மாற்றப்பட்டதின் பின்னனியில்தான் பல்வேறு திடுக்கிடும் செய்திகள் இருக்கிறது என்பதே உண்மை. சென்னை 12 மணி நேர உபவாசக் கூட்டம், ஜார்ஜ் பள்ளி நிர்வாகத்தின் அனுமதியில்லாமலேயே  ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் என்று, அறிவித்துவிட்டார்களாம். இதை தாமதமாகவே அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் கடுமையாக ஆட்சோபித்ததாகவும் அதன் பின்னரே சின்னமலை ஏ.ஜி சபையின் மைதானத்திலென்று முடிவெடுத்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. சென்னை 12 மணிநேர உபவாசக் கூட்டத்திற்காக ஏ.ஜி சபை மைதானத்தில் பல லட்சக்கணக்கில் செலவு செய்து அதாவது, மண் மட்டுமே சுமார் 5 அடி உயரத்திற்கு கொட்டி நிரப்