Posts

Showing posts from August, 2011

முழுக்கு ஞானஸ்நானம் - முக்கியத்துவம் என்ன?

முதல் பாகம் . முழுக்கு ஞானஸ்நானத்தில் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது? எடுப்பது அவசியமா? என்பதைப் பற்றியெல்லாம் எழுத அமர்ந்தபோது கர்த்தருடைய ஆவியானவர் ஒரு வசனத்தை நினைவுபடுத்துகிறார்:-    உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.(மத்5:37)   நண்பர்களே…! "உள்ளதை உள்ளதென்று சொல்லுவோம்"  உதாரணமாக:- நான் ஊழியம் செய்கிறப்பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு, தன்னைப் பாஸ்டர் என்று அழைத்துக் கொண்ட செல்வந்தரான கத்தோலிக்கர் ஒருவர் எனக்கு எதிராக எழும்பியதுடன், நேரடியாக என்னிடம் சவால்விட்டு மிரட்டினார். அத்துடன் கர்த்தரால் எனக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்தை செய்ய விடாமல் என்னை மிகவும், எதிர்த்து வந்தார். கர்த்தரோ.., எனக்கு பக்கபலமாக இருந்தபடியினாலே, ஊழியத்தில் ஆரோக்கியமான வளர்ச்சியை கட்டளையிட்டார். சில மாதங்களுக்குப்பின்,  அந்த சகோதரருடைய மனைவி எதிர்பாராத வகையில் மிகவும் சுகவீனமானார்கள். (எனக்கு எதிராய் செயல்பட்டதினால்தான் என நான் சொல்வதாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.) மருத்துவரால் கைவிடப்பட்டபோது, அவருடைய மனைவ

கிறிஸ்தவர்களுக்கான நியாயம் இப்பூமியின் நீதி மன்றங்களில் இல்லை அல்லவா?

Image
Rev.ஸ்டெயின்ஸ் கொலைவழக்குத் தீர்ப்பு : நீதிமன்றமா? காவிமன்றமா? by William Christober on Friday, March 25, 2011 at 10:43pm ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, தொழு நோயாளிகளுக்கு தொண்டூழிம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர். இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது. இவ்வழக்கின் மேல்முறையீட்டில், ஒரிசா உயர் நீதிமன்றம் தாரா சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது; ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 12 குற்றவாளிகளுள் மகேந்திரா ஹெம்ப்ராம் என்பவனின் தண்டனையை மட்டும் உறுதி செய்து, மீதி

எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நண்பர்.., X

அன்பு சகோதர நண்பர்களே.., எய்ட்ஸ் என்பது, காய்ச்சல் என்பதைப்போன்ற சுகவீனம் அல்ல. கொள்ளை நோய் . எய்ட்ஸ் நோய் பிடித்தவர்களுக்கு உதவி செய்யும் அமைப்புடன் அவ்வப்போது இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அந்த அனுபவத்தில்..., எய்ட்ஸ் நோய் உள்ளவரெல்லாம் விபச்சாரம் செய்து, இந்த வியாதியை பெற்றுக் கொள்ளவில்லை என்பதை, நான் நன்கு அறிந்து கொண்டேன். இரத்த பரிவர்த்தனை மூலமாகக் கூட இந்தக் கொடிய வியாதியை பெற்றுக் கொண்டவர்களும் உண்டு. ஆனால் குற்றம் இல்லாத அல்லது பாவம் செய்யாத  இவருக்கு எய்ட்ஸ் வருவதற்கhனக் காரணம் என்ன? அதாவது அந்த முதல் எய்ட்ஸ் நோயாளி விபச்சாரம் செய்திருப்பார், அல்லவா? அதனால்தான் எச்சரிக்கிறேன்..! அவர்களுடன் கைகுழுக்குவதாலோ, ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதாலோ, ஆடைகளை அணிவதாலோ எய்டஸ் வியாதி வருவதில்லை. உறவு அதாங்க உடல்உறவு மட்டுமே தடைசெய்யப்பட வேண்டியது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமான பேர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது உண்டு. குடிப்பழக்கம் போன்றவை மட்டுமல்ல காம வெறியில் குழந்தைகளை கற்பழித்த காமுகர்களும் உண்டு. தனக்குள்ள எய்ட்ஸ

எனக்கு உரிமையில்லையா?

//சகோ. இம்மானுவேல் ஆபிரகாம் பதிலுக்கு நன்றி// என்று ஆரம்பித்த பால் நானையா..,  //கொஞ்சம் கவனிக்கணும். எனக்கு சகோ.இம்மானுவேல் ஆபிரகாம் அவர்களும் தெரியாது. சகோ. பொன்னுத்துரை ஜோசப் அவர்களும் தெரியாது. எனக்கு Face Book அக்கவுண்ட் உண்டு. அதில் என்னுடைய நண்பர் ஒருவர் சகோ. பொன்னுத்துரை ஜோசப் அவர்களின் video message ஒன்று share பண்ணியிருந்தார். அதற்குப்பின் நான் face Book - ல்அவருடைய நண்பர் ஆனேன். இதனால் நான். சகோ. பொன்னுத்துரை ஜோசப் அவர்கள் share பண்ணும் Photo மற்றும் அதற்கு மற்றவர்கள் எழுதும் comments-களை நானும் பார்க்கலாம்//  என்று தனது முன்னுரையை ஆரம்பிக்கிறார். அப்படியா..? பேஸ்புக்ல அப்படிதான் நண்பர் ஆவாங்களா? அது சரி.. நமக்கும் இந்த உண்மை இப்பதான தெரியுது. என்று நாமும், நமது மறுமொழியைத் துவக்குகிறோம். //அந்தப்படி சகோ. பொன்னுத்துரை ஜோசப் அவர்கள் ஒரு குருவானவர் ஒரு சகோதரிக்கு ஞானஸ்நானம் கொடுக்கிற ஒரு போட்டோ upload பண்ணியிருந்தார். அதற்கு பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாமாகிய நீங்கள் எழுதிய முதல் commend இன்னும் கல்யாணம் ஆகலன்னா...! கிறிஸ்தவ பையன கல்யாணம் பண்ண வேண்டியதாக இருக்கும்..

"நவீன தீவிரவாதிகள்"

 கிறிஸ்துவில் எனக்கு மிகவும் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு இயேசுகிறிஸ்துவின் இனிய பெயரால் அன்புடன் வாழ்த்துகிறேன்.  நான் உங்களுடன், சற்றுத் தணித்துப்பேச விரும்புகிறேன். நான் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தையும், குறித்த நபர்களையும் கர்த்தர் அடையாளம் காட்டியதற்காக, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் . கீழே வரிசைபடுத்தப்பட்டுள்ளவர்களைப் போன்றவர்கள் இத்தனை காலங்களாக அராஜகமான முறையில் ஆவிக்குரிய சபைகளுக்குள்  கொட்டிய குப்பைகளை, சுத்தம் பண்ண முயற்சிக்கிறேன்..., கிறிஸ்துவின் உபதேச சத்தியத்தின் நிமித்தம் விருப்பமுள்ளவர்கள் மட்டும் எனக்கு உதவி செய்யுங்கள். பணம் கொடுத்து அல்ல..., கமெண்ட் எழுதி. ஒருவேளை நம்மையும் இந்த நயவஞ்சகர்கள் இம்மானுவேல் பாஸ்டரை எழுத்துச் சவுக்கால் விளாசியதைப்போல் விளாசுவார்களே? என்று பயப்படுகிறவர்கள் இதுவரை இருந்தது போலவே உங்கள் இஷ்டப்படி முடிவெடுங்கள். எப்படியாயினும் அல்லேலூயா. அல்லேலூயா என்றால் ஆண்டவரைப் போற்றுங்கள் தேவனுக்கே மகிமை எனப் பொருள்படும். எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அது அதற்குரிய பலனை கர்த்தர் எனக்கும், உங்களுக