Posts

Showing posts from 2014

கிறிஸ்தவா்களுக்கு வேதனை தரும்..., கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்.

Image
உண்மை கிறிஸ்தவா்களுக்கு வேதனை தரும் நிகழ்வு இன்றைய கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள். கிறிஸ்தவ மார்க்கம் தூய்மையும் சத்தியமுமானது. ஆதி அப்போஸ்தலா்களுடைய காலங்களுக்குப்பின் பக்க வழியாய் நுழைந்த தந்திரக்காரா்களால் கணக்கில்லாத கற்பனைக் கதைகள் கிறிஸ்த வ மாா்க்கத்தின் வழக்கமான பழக்கமாக அடையாளப்படுத்தப்பட்டது. அதில் ஒன்றுதான் பறக்கும் மான்கள்..! இது வேத வசனத்திற்கும் தேவனுக்கும் விரோதமானது. பூட்டிய சாரட் வண்டியில் பற்பல பாிசுகளுடன் பறந்து வரும் செவ்வாடை அணிந்த கிறிஸ்மஸ் தாத்தா.  விநாயகருக்கு வாகனமாக எலியும், முருகனுக்கு வாகனமாக மயிலும் இருப்பதுபோல கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் பறக்கின்ற மான்களை வாகனமாக கொடுத்துள்ளனா். கிறிஸ்மஸ் என்றவுடன்.., கிறிஸ்துவையும் அவரால் வரும் பாவ மன்னிப்பைக் காட்டிலும், பறக்கும் மான்கள், பரிசுகள் நிரப்பப்பட்ட சாரட் வண்டி, கிறிஸ்துமஸ் தாத்தா, பிா் மரம் போன்ற புணையப்பட்டக் கதைகளே நினைவுக்கு வரும் வகையில் நிரப்பப்பட்டுள்ளது. துருவப் பிரதேசங்களில் வாழ்ந்த பழங்குடிகளுடைய சிலை வழிபாடுகளுடன் இணைந்த மிருகங்களை வழிபடுகிற பழக்க வழக்கங்கள் கிறிஸ்தவா்களுடைய நற்செய்தி அறிவிப்பின்

கிறிஸ்மசும், மரங்களும்..!

Image
குளிர்காலம் தொடங்கும்போது, சூரியனுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும்...???! அந்த காலகட்டத்தில்  சூரியன் விரைவில் குணமடைய வேண்டிய சில நாட்டு மக்கள் மூலிகைகளை வீட்டில் வைத்து வழிபட்டதாகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகி ன்றனர். முதன்முதலாக பைன் மரங்களை அலங்கரித்து வழிபட்ட பெருமை ஜெர்மனியர்களை சாரும் என்று கூறுகின்றனர். அவர்கள்தான் 19ம் நூற்றாண்டில் இந்த வழக்கத்தை அறிமுகப்படுத்தினர். இந்த பைன் மரங்கள் பின்னர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இடம்பெற்று விட்டது. இந்த மரத்தை பின்விளக்குகள், வண்ண வண்ண ரிப்பன்கள், ஸ்டார்கள், பரிசு பொருட்களால் அலங்கரிக்கின்றனர். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பொது இடங்களில் கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்தனர். 1948ல் அட்லான்டா, நியூயார்க், அடிலெய்ட் போன்ற முக்கிய நகரங்களில் பிரமாண்ட பைன் மரங்கள் காட்சிக்கு வைத்தனர். அதன்பின் பல நாடுகள் இதை பின்பற்றின. கடந்த 1923ம் ஆண்டில் இருந்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில், தேசிய கிறிஸ்துமஸ் மரம் ஆண்டுதோறும் புதிதாக வைக்கப்படுகிறது. ஆனால், கால மாற்றத்தால் இயற்கையான பைன் மரங்களுக்கு பதில் செயற்கை மரங்கள் இன்று பல வீடுகளை ஆக்கிரமி

புனைகதைகளை நாடி...,

Image
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்றவுடன், கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு (சான்டா கிளாஸ்) அடுத்தபடியாக நினைவுக்கு வருவது பைன் அல்லது பிர் ஊசி இலை மரங்கள்தான். கட்டுக்கதைதான் என்றாலும் இந்த அறிவிப்பு சுவாரஸ்யமானது. கிறிஸ்துமஸ் மரம் இயேசு பிறப்போடு தொடர்ப ுடையது...?? மாட்டுத் தொழுவத்தில் பிறந்த குழந்தை இயேசுவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக எல்லா உயிரினங்களும் பரிசு பொருட்களுடன் பெத்லஹேம் சென்றன..??! ஆலிவ் மரம் பழங்களுடன் வந்தது. பேரீச்சம் மரம் தனது பழங்களுடன் வந்தது. ஆனால், குழந்தை இயேசுவுக்கு கொடுப்பதற்கு ஊசி இலைகளை கொண்ட பிர் மரங்களிடம் எதுவுமே இல்லை. இதை பார்க்க தேவதைக்கு பாவமாக இருந்தது. உடனே வானத்து நட்சத்திரங்களை பார்த்து, நீங்கள் பிர் மரத்தின் அழகான கிளைகளில் இருந்து அலங்கரியுங்கள்'' என்று கூறியது தேவதை. அதன்படி நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாக பிர் மரத்தை மொய்க்க ஆரம்பித்தன. பிர் மரம் ஜொலிக்க தொடங்கியது. அதை பார்த்து குழந்தை இயேசு சிரித்து ஆசிர்வதித்தாராம்....?! பரிசுத்த வேதாகமத்தில்.., 2 தீமோ 4 : 3. முதல் 5 வரை உள்ள வசனங்களில்.., “மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்கமாட்டார்கள். ம

உண்மை கிறிஸ்தவா்கள்,பிரயாசப்படுங்கள்.

Image
கிறிஸ்தவா்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கோமாளிகளைப் போல வேஷமிடும் கிறிஸ்தவா்கள் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள ஒவ்வொரு உண்மை கிறிஸ்தவா்களும் பிரயாசப்படுங்கள். கா்த்தா் உங்களை ஆசீா்வதிப்பாராக.

நமக்கு எந்த சபை வேண்டும்?

தேவகுமாரனாம் இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் எனக்கு மிகவும் அன்பானவர்களே..! சர்வலோக மீட்பரும் ஆண்டவருமாகிய அவருடய பெயரால் வாழ்த்துகிறேன். கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் இருந்தே வாழ்ந்து வருபவர் தமிழா்..! என்று, தமிழ் பற்றுடையவர் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். இந்தியன் என்றாலே அவன் இந்துவாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில், நமது தேசத்தில் முதலிலிருந்தே இருப்பது இந்து மதம்தான் என்று, விபரமறியாத இந்து மதப்பற்றாளாகள் சொல்லித்திரிவர். இந்துக்களுடைய பொய் பிச்சாரங்களை முறியடித்து, மிக குறுகிய காலங்களிலேயே இந்துமதம் வந்தது என்றும், பொய்களையும் கட்டுக்கதைகளையும் விட்டுவிலகி உண்மையாய் வந்த இயேசுவைப் பற்றிக்கொண்டு, நிலைவாழ்வு வாழ வாருங்கள் என்று, அழைத்து வழிநடத்தினால்…, மதப் பிரச்சாரம் செய்கிறார்கள், மதம் மாற்றுகிறார்கள் என்று சூலாயுதமும், குண்டாந்தடியும் தூக்குகிறார்கள்..! இந்துமதமென்ற போர்வைக்குள் மறைந்திருக்கும் காட்டுமிராண்டிகள். ஆபிரகாமுக்கும் அவருடைய மனைவியாகிய சாராளுக்கும், ஈசாக்கு எனும் மகன் பிறக்கும் முன்னரே, ஆபிரகாமுடைய வேலைக்காரியின் மூலமாக, இஸ்மவேல் பிறந்துவிட்டார். அந்த இஸ்மவேல

உண்மையான காவலர்கள் நமது நண்பர்கள்

Image
விழிப்பாயிருங்கள்..! ஜாக்கிரதையாருங்கள்..! எச்சரிக்கையாயிருங்கள்...! ---------------------------- கிறிஸ்தவர்கள், அல்லது தேவஊழியர்கள் என்ற அடையாளத்துடன் இணையதளத்தில் ஊடுருவி இருக்கிற சிலக்கள்ளர்கள், கிறிஸ்தவ சபை அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து ஆட்டம் போடுகின்றனர். அப்படியே ஆட்டய (Cheating) போடுகின்றனா். சபைக்கு எதிரானவர்களையும் அதிருப்தியாளர்களையும் தங்களுக்கு ஜால்றாக்களாக மாற்றிக் கொண்டு அவர்கள் மூலம் தங்களுக்கு ஒரு பரிசுத்த தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, தங்கள் குழுவில் உள்ளவர்கள் மூலமாகவே கிறிஸ்தவ சபைகளை வேவு பார்த்து வருகின்றனர். இப்படியான தங்கள் உளவு வேலை மூலம் பாஸ்டர்கள், மற்றும் வசதி படைத்த விசுவாசிகளின் பலம் மற்றும் பலவீனங்களைத் தெரிந்துகொண்டு, சிலருக்கு சில பலவீனங்களை ஏற்படுத்தின பின்பு தங்களுடன் உள்ள சில ரவுடிகளை போலீஸ் வேடத்தில் அனுப்பி பணம் பறித்து வருவதாக அறிகிறோம். தமிழகம் முழுவதும் முகநூல் நண்பா்களை உருவாக்கிக்கொண்ட இந்தக்குழு பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுமுன் யாருக்கும் சந்தேகம் வராதபடி தங்கள் குழுவில் உள்ளவர்களை ஓரிடத்தில் திரட்டுகிறார்கள். அந்தக்

“தாலத்தில் வைக்கப்படும் என் தலை”

Image
என் நண்பா்களே இன்றிருக்கும் அநேகரில் குறிப்பாக ஊழியர்களுக்கு மத்தியில் நான் எதில் வித்தியாசப்படுகிறேன்? என்பதை இரண்டே வரிகளில் சொல்லிவிட விரும்புகிறேன்.  அதாவது..,  இன்றைய ஊழியா்கள். கிறிஸ்துவுக்காக,  “சாவதற்கும் ஆயத்தமாயிராமல் சீரோடும் சிறப்போடும் எப்படியாகிலும் இவ்வுலகில் செல்வசெழிப்போடு வாழ்ந்துவிட அவசவசரமாக வாழ்கிறார்கள் என்பதைவிட அலைகிறார்கள்” நானோ,  “தேவனோடு நித்தியமாக வாழ வேண்டுமென்பதற்காகவே சாவதற்கும் ஆயத்தமாக சத்தியத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறேன்”. மேலும், ஆவியானவா் எனக்குள் இருப்பதால்.., பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்த தூண்டப்படுகிறேன். எனவே சிலருடைய தவறுகளை தைரியமாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி வருகிறேன். நம்முடைய செயல்பாடுகள் சிலருக்கும் இந்த சிலருடைய அடிவருடிகள் பலருக்கும் சங்கடமாக இருந்ததையும் அதனால் பலா் பல விதங்களில் என்னுடன் மோதியதையும் பின்னா் என்னை தடை (Block) செய்துவிட்டு ஓடினதையும்தான் என் அனுபவத்தில் பலதடவை பார்த்திருக்கிறேன். சிலா் வேறுவிதமாக செயல்பட்டதுண்டு.  ஒருந

இது நமக்குப் படிப்பினை

அநேக ஜனங்கள் மற்றவா்களுடைய பார்வையில் சிறந்தவா்களாக காணப்பட வேண்டுமென்று அதிகமாக பிரயாசப்படுகிறார்கள். எதை செய்தாலும் மற்றொரு மனிதனை மனதில் வைத்தே செயல்படுகிறதைக் காண்கிறோம். இதை தேவன் விரும்புவதில்லை என்பதை முதலாவது புாிந்து கொள்ள வேண்டும். லூக் 16 :15. ல் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார். மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது. என்று படிக்கிறோம். இது நமக்குப் படிப்பினையாக இருக்க வேண்டும். நாம் அவருடைய பார்வைக்கு அருமையாக இருக்க வேண்டுமாம். அதுதான் அவருக்குப் பிரியமானது என்று அறிந்து செயல்படுங்கள் கா்த்தர் உங்களை ஆசீா்வதிப்பார். இதைத்தான் ஏசா 43 : 4, 5 ல் நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய். நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும்கொடுப்பேன். பயப்படாதே,  நான் உன்னோடே இருக்கிறேன். என்கிறார். சகோதரனே சகோதரியே கா்த்தருக்குப் பிாியமாக நடந்து ஆசீா்வாதத்தைப் பெறுங்கள். ஆமென்.

உங்கள் வாழ்வின் சோர்வுகள் நீங்கும்.

Image
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே வாழ்த்துகிறேன். இன்றைய மனிதர்களின் வாழ்க்கையை நாம் கவனித்தோமானால் பெரும்பாலானவா்கள் சோர்ந்துபோன நிலையைிலேயே வாழுகிறதை நாம் கவனிக்க முடியும். அவா்களுடன் ஒருமித்துப் போவதால் இரட்சிக்கப்பட்டதாக நம்புகிற தேவ ஜனங்களும்கூட உலக கவலைகளில் சிக்கி சோ்ர்ந்துபோன நிலையிலேயே, வாழ்ந்து வருகிறார்கள். இதையே முதலீடாகக்கொண்டு, பெரும்பாலான ஊழியங்களும், ஊழியா்களும் அழைப்பின் ஊழியங்கள், விடுதலையின் ஊழியங்கள், ஆறுதலின் ஊழியங்கள் போன்று, பற்பல பெயர்கொண்டு பிழப்பை நடத்துகின்றனர்.  அவனவன் திறமையின்படி அவனவன் செயல்படுகிறான். அப்படிப்பட்டவா்களை அண்டி அவர்கள் நிழலில் ஒரு கூட்டம் வயிற்றைக் கழுவுகிறதினால் ஊக்கம் எல்லாம் ஆக்கமாகிறது. அவா்கள் காட்டில் பணமழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. நற்செய்திக் கூட்டங்கள் நாடக மேடையானதுடன், நடன மங்கையரால் அலங்கரிக்கப்படுகிறது. இயேசுவை அறிந்த மக்களோ தான் யாரென்றும் தன் நிலை என்னவென்றும் தெரியாமல், இயேசு, விசுவாசம், இரட்சிப்பு, ஆவிக்குரிய வாழ்க்கை என்பதெல்லாம் இதோ இங்கே.! அதோ அங்கே.! என்று வண்டிகட்டி பறந்து வருகின்றனர். பம்பரமாக ச

தூத்துக்குடி ஊழியத்தைச் செய்ய உற்சாகமாக...

Image
தூத்துக்குடியில் "தூத்துக்குடி எழுப்புதல் திருச்சபை" என்ற வடிவமான சபையை, 09 02 2014 - ல், மிக எளிமையான முறையில் தேவ கிருபையினால் துவக்கியிருக்கிறோம். இந்த சபையானது தேவஒழுங்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவ்வித விளம்பரமுமில்லாமல் ஆரம்பித் தபோதும் வாய்மொழி அழைப்பை ஏற்று அநேகர் வந்து கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முதல் நாளிலேயே 14 இந்துக்கள் வந்ததுடன் அவர்கள் சுவிஷேசத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்டபோது அருமையான ஊழியம் செய்த திருப்தி எமது குழுவினருக்கு ஏற்பட்டது. தூத்துக்குடி ஊழியத்தை கர்த்தருக்கு பயப்படும் பயத்துடன் வழி நடத்திச்செல்ல ஆவிக்குரிய அனுபவமுள்ள நண்பா்களை நியமிக்க இருக்கிறோம். ஜெபித்து கொள்ளுங்கள். தூத்துக்குடியிலுள்ளவர்கள், தொடர்பு கொள்ள.. Contact No's  93606 77580.

ஞானப்பிரகாசம் தன்னை சி.எஸ்.ஐ சபையை சார்ந்தவன் என்று பொய் சொல்லுகிறார்.

Image
"வேதாகம அடிப்படை உபதேசத்தில்" ஞானப்பிரகாசத்தின் துவக்கம் முதலிலேயே கோனலாகிவிட்டது. ஆகையால், அவரது பயணம் முற்றும் கோனலாகவே இருப்பதை நம்மால் உணர முடிகிறது. ஞானப்பிரகாசம் உபதேச அடிப்படையில் கண்களில் உத்திரத்தையுடையவர் என்றாலும் பிறருடைய கண்ணில் தூசியை நீக்க முனைகிறார்.  தன் கண்ணில் உத்திரத்தை மறந்தவர். மட்டுமல்ல அதை ஒருபோதும் அகற் ற முயலாதவர். இவா் வயதில் முதிர்ந்தவராக தெரிந்தாலும் "வசனத்திலோ" சற்றும் முதிராதவராக இருக்கிறார். நானும் கிறிஸ்த்தவதன்தான்... என்று இவா் எங்கும் நுழைந்து பழகி உறவாடி பின்னா் குழி பறிக்கிறவா். இதை சுருக்கமாக ”கூட இருந்தே குழி பறிக்கிறவர்” என்போம். கிறிஸ்தவ ஜனமே "எச்சரிக்கை" “ஜாக்கிரதை...." அநேகர் எழும்புவார்கள் என ஆண்டவர் கூறியது நினைவிருக்கிறதா? அந்த அநேகரில், இவரும் ஒருவர். எனவே, உங்களில் யாரும் இவரால் வஞ்சிக்கப்படாதிருங்கள்.   வயதில் முதிர்ந்த ஞானப்பிரகாசத்தை அவமானப்படுத்து எமது நோக்கமல்ல. சபைக்கும் உபதேசத்திற்கும் எதிரானவா் என்பதை சுட்டிக் காட்டுகிறோம் அவ்வளவே.. ஞானப்பிரகாசம் &quo