எனது உயிருக்கும் எனது உடமைகளுக்கும் உத்திரவாதம் என்பது நிச்சயமில்லை

பிரியமானவர்களே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மீதும் கிறிஸ்துவின் மணவாட்டி என்று பரிசுத்த ஆவியானவரால் வடிவமைக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகிறதான கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் ஒழுங்குகளின் மீதும் கவனமுள்ளவனாக இருப்பதினாலேதான் கிறிஸதுவின் உபதேசத்துடன் இசைந்து போவதாகச் சொல்லுகிற சகலரையும் சற்று உரிமையுடன் கடிந்துகொண்டு கவனமாக கன்டனம்பண்ணி எச்சரிப்புடன் புத்திச்சொல்லி வருகிறேன். (தீத் 1: 7..9)

சபைக்கு எதிராக எழுதுவேரை கடிந்து கொள்கிறேன். சில நேரங்களில் கன்டனமும் செய்கிறேன்.  அதேவேளையில் சத்தியத்தை கர்தருடைய புதிய உடண்படிக்கையை பரிசுத்த வேதாகமத்தை தவறாக சித்தரித்து பலவீனமானவர்களிடத்தில் சலனத்தை ஏற்படுத்துகிறவர்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நேரடியாகவும் தொடர்பு சாதணங்கள் மூலமாகவும் தொடர்புகொண்டு முடிந்தமட்டும் மறுப்பை தெரிவிப்பதுடன். சத்தியத்தை விளக்கி வருகிறேன். .(தீத் 1:11)

உதாரணமாக... முசுலீம்கள் மற்றும் சில தவறான உபதேசத்தை பின்பற்றி சோரம் போகிறவர்களிடமும் சத்தியத்தை சாட்சியாக அறிவித்து வருகிறேன். என்னுடன் ஆவியில் இசைந்து போகிறவர்களுடன் இணைந்து இணைய - தளத்திலும் எழுதுகிறோம்.

கிறிஸ்துவின் ஒழுங்குகளுக்கு உட்பட மறுக்கும் ஊழியர்கள் கண்டிப்பாக நம்முடைய இப்படிப்பட்ட பதிவுகளால் ஒரளவுக்கு பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் நம்முடைய எழுத்துக்கலிலுள்ள செய்தியை படிப்பவர்கள் ஓரளவுக்காவது தெளிவடைவார்கள். அப்படி நடப்பதினால்.., 

கள்ள ஊழியர்களுடைய திருட்டுத்தனம் பெரும்பாலும் வெளியரங்கமாகி விடுகிறது. இதனால் பாதிப்புக்குள்ளாகும் கள்ள ஊழியர்கள் தங்களின் ஆதரவாளர்களை தூண்டி விடுகிறார்கள். அவர்களும் தங்கள் ஜென்மசுபாவ இயல்பின்படியே நம்முடன் கடுமையாக மோதுகிறார்கள். அந்த சமயங்களில் கடுமையான வார்த்தைகளை பயண்படுத்தி பிண்ணூட்டமிடுவது மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் மிரட்டல் விடுகிறார்கள் இதையெல்லாம் கவனிக்கிறோம். எனவே சில நேரங்களில் அவர்களுடைய வார்த்தை-களுக்கேற்ப பதில் கொடுக்க வேண்டியதாகவும் இருக்கிறது. (நீதி 26: 5 )

கள்ள தீர்க்கதரிசிகள் மட்டுமல்ல அனைத்து கள்ள ஊழியர்களுடைய ஆதரவாளர்களும் என்னை எதிர்ப்பது (என்னுடைய செய்தியை அல்ல) மட்டுமே சிறந்த ஊழியம் என நினைத்துக் கொண்டு ஏதோ ஒன்றை செய்கிறார்கள் அப்படிப்ட்டவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் அது அவசியமும் என்றே கருதுகிறேன்.

கர்த்தருடைய ஊழியத்திற்கு வருவதற்கு முன்னதாகவே தேவனுக்குப் பிரியமான ஊழியத்தை நான் செய்வேனானால் எனது உயிருக்கும் எனது உடமைகளுக்கும் உத்திரவாதம் என்பது நிச்சயமில்லை. கர்த்தருக்குச் சித்தமானதுதான் நடக்கும் என்பதையெல்லாம் என்னுடைய அழைப்பின்படி  என்னுடைய பிரதிஷ்டையின்படி  மிகவும் தெளிவாக அறிந்த பின்னரே ஊழியத்திற்கே வந்தேன்.

உண்ண உணவும் உடுக்க உடையும் உறங்க வீடும் இருந்தால் போதும் என நினைத்திருந்தால்... கணிணியில் என் கையை வைத்திருக்கவே மாட்டேன். இணையதளத்தில் நுழைந்திருக்கவே மாட்டேன். குடும்பமாக நாங்கள் வாழத் தேவையான அனைத்தையும் கர்த்தர் கொடுத்திருக்கிறார்.
                                                                                                    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

தேவராஜ்யத்தை இடித்துப்போடவும் பரிசுத்தக் குலைச்சலாக்கவும் முயலும் சக்திகளிடமிருந்து சபையை காக்கவே போராடுகிறேன். அதற்காகவே படிப்பதற்கும் எழுதுவதற்குமான நேரங்களை இணையத்தில் செலவிடுகிறேன். 

சபை ஊழியம் ஆண்டவருடைய கிருபையால் ஆசீர்வாதமாக நடந்து கொண்டிருக்கிறது. நமது K.R.M.சபை ஜனங்கள் ஆரோக்யமான உபதேசத்தினாலே மாய்மாலங்களுக்குத் தப்பி ஆவிக்குரிய வாழ்க்கையில் அருமையாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். தேவனுக்கே மகிமை.

கள்ள தீர்க்கதரிசிகளின் ஆதரவாளர்களில் சிலர் அரசு பணிகளில் இருக்கிறார்களாம் அவர்களில் ஒருவர்:- சதீஷ்நடேசன்

அவர், "நம்முடைய பின் சந்ததியை ஏமாற்றகிறோமா?" என்ற எனது பதிவை அரைகுறையாக படித்திருக்கிறார். அந்த பதிவிலிருந்த செய்தி அவருக்கு மிகுந்த ஆத்திரமடைந்த உண்டாக்கியிருக்கும் போல் இருக்கிறது.

அவர் (சதீஷ்) என்னிடத்தில்;- “இந்தியன் எக்ஸ்பிரஸ்-ல் என்னுடைய சகோதரன் வேலை பார்க்கிறான்.  ஊழியம் ஒன்றை தாங்கள் செய்து கொண்டு வருகிறீர்கள் . உலகம் முழுவதும் தங்களுக்கு ஒரு நல்ல பெயரை போட்டு விட்டுவிடலாமா சகோதரா?

நீ ஊழியக்காரன் அல்ல. அல்ல ஊழியக்காரன் போர்வையில் பேசுகிற பிசாசின் ஆவி உன்னை அப்படி செய்ய வைக்கிறது. உன்னை ஆட்டு விக்கிற பிசாசு உன்னை விட்டு போகும் படி முதலாவது செய்து விட்டு ஊழியம் செய்.

மக்களுக்குள் சண்டையையும் தமிழ்நாட்டுக்குள் குழப்பத்தையும் கலவரத்தையும் உண்டு பண்ண தொடங்குகிறீர்களா?

ஒரு தனிப்பட்ட நபரை விமர்சிக்கும் உங்கள் மீது ஏன் மனித உரிமை கமிஷனில் புகார் செய்யக் கூடாது பார்க்கிறாயா?
என்றெல்லாம் ஏகத்துக்கும் என்னை மிரட்டியவர் 

என்னுடைய பதிவில் இருந்தவற்றிற்கு மறந்துகூட நியாயப் படுத்தவுமில்லை மறுப்பு தெரிவிக்கவுமில்லை. ஏனென்றால் இவர்களுக்கு அதற்கு பதில் சொல்லத் தெரியாது. இவர்களுடைய குருக்களான கள்ளர்கள் இவர்களை இப்படித்தான் உருவாக்கி இருக்கிறார்கள்.

இத்துடன் விட்டாரில்லை சதீஷ். தொடர்ந்து, கேவலமான வார்த்தைகளால் தூஷிக்க ஆரம்பித்துவிட்டார். 

"கிண்டலுக்கும் குறை சொல்லுதலுக்கும் பெயர் போன மானம் கெட்ட இம்மானுவேல் நீ மற்றவர்களை குறை சொல்லுகிறாயா? திருடனே நீ என்ன யோக்கியானா?

பொய் பித்தலாட்டம் செய்து ஊழியம் செய்கிற கள்ள ஊழியக்காரனே நீ யார் மற்றவனை குறை கூறுகிறாய்..?
 

பைத்தியக்காரனாய் பேசும் இம்மானுவேல் நீங்கள் மனுஷனா?
 

கள்ள ஊழியத்தை செய்து கொண்டிருக்கும் தங்களுக்கே இவ்வளவு திமிராக பேசுவீர் என்றால்...
 

நீங்கள் எல்லாவற்றிற்கும் சீக்கிரத்தில் பதில் சொல்வீர்கள் கவலைப்படாதீர்கள்.

என்று என்னை ஏடாகூடமாக மிரட்டியதுடன் சாபங்களையும் தூஷனங்களையும் அள்ளி வீசிய சதீஷ் அத்துடன் விடவில்லை 

நம்முடைய எழுத்துக்களில் இருந்த யதார்த்தத்தை உணர்ந்து நம்முடன் ஜெபத்திலும் இணைய ஊழியத்திலும் உற்சாகமாக ஒத்துழைக்கும் நண்பர் ஒருவரை மிரட்டும்போது

"நான் வனத்துறையில் இருக்கிறேன் வனத்துரையினருடைய பலம் என்ன? என்று உனக்கு காட்டுகிறேன் என்கிறார். இரண்டுபேரும் ஒரே ஊர்க்காரர்கள் என்பதுடன் அவர்கள் வாழ்கிற பகுதியில் உள்ளவர்கள் மீது வனத்துறையினர் ஏதாவது குற்றச்சாட்டை சுலபமாக சுமத்த முடியும்.

நண்பர்களே இப்போது உங்களுக்குத் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். சாது என்ற போலிகளும் வின்சென்ட் செல்வகுமார் போன்ற விஷயமில்லா தீர்க்கதரிசிகளும் "ஓ:ப் போடவும் சிங்கம் போல கெர்ச்சிக்கவும் ஜனங்களை பழக்கப்படுத்துவதின் மூலம் தேவஊழியர்களை எதிர்க்க்கூடிய அசுத்தமுள்ள ஆவி உள்ளவர்களை அதிகமாக உருவாக்கி வருகிறார்கள்.

தனக்கு மேல் மட்டத்திலும் தனக்கு கீழ் மட்டத்திலுள்ள எல்லா வனத்துறை அதிகாரிகளும் இவர் சொல்வதை அப்படியேக் கேட்டுவிட்டு இவருக்கு வேண்டாதவர் மீது பழிசுமத்தி பழிவாங்க முடியுமானால் வனத்துறையின் இறையான்மைக் கேள்விக் குறியாகிறது. ஒருவேளை...,

இவர் பணிபுரியும் வனத்துறை அதிகாரிகள் இந்த நண்பருடைய விருப்பப்படித்தான் செயல்படுவார்கள் என்றால்.. அல்லது வனத்துறையை காட்டி நமது நண்பர்களை பயமுறுத்த முயலுவார்களானால்.., இவர்களை கன்டிக்கக்கூடிய அளவுக்கு அதிகாரம் பொருந்திய வான்துறையை (பரலோகத்துறை) நாங்கள் நாடுவோம். சர்வலோக ராஜாவிடம் முறையிடுவோம். எமக்காக வான்துறை வராது என்று நினைக்கிறீர்களா? .

ஒருவேளை தேவசித்தம் வேறுவிதமாக இருந்து எங்களை தப்புவிக்கும்படி வான்துறை வரவில்லையானாலும்..
கள்ள ஊழியர்களும் அவர்களுடைய ஊழியங்களும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை ஒழுங்குகளுக்கு எதிராக எழும்புவதற்கு ஒருநாளும் அனுமதிக்கமாட்டோம். அதை முடிந்த அளவு தடுப்போம். அதற்கு இணையதளத்தையும் பயண்படுத்துவோம்.

எம்முடைய எழுத்து இன்னும் தீவிரமாக இருக்குமேதவிர குறையாது. நாங்கள் கர்த்தருடைய ஜனங்களை பொய்யிலிருந்து தப்புவிப்பதற்காக தொடர்ந்து எழுதுவோம். இதற்காக நாங்கள் எங்கள் உயிரையே பணயம் வைக்கிறோம். 

ஒருவேளை எமது ஓட்டம் முடிக்கப்படுமானால்..., அல்லது கிரயமாக்கப்படுமானால் தொடர்ந்து எழுத ஆட்கள் இருக்கிறார்கள். எப்படியாகிலும் கர்த்தருடைய வருகை வரையிலும் கர்த்தருடைய ஆவியானவருடைய வழி நடத்துதலின்படி (யோவா 16: 8..11) எங்கள் மூலமாகவும் கர்த்தருடைய வருகை தாமதிக்குமானால் ...,

தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய ஆவிக்குரிய சத்தியமுள்ள சந்ததிகளைக் கொண்டும் கர்த்தர் தம்முடைய சபையை தேவ ஒழுங்கின்படி தூய்மைப் படுத்திக்கொண்டே இருப்பார். நாங்கள் எதற்கும் ஆயத்தமாகவே இருக்கிறோம். அதனால்தான்.., கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர் எம்மைப் போன்றவர்களைத் தெரிந்து கொண்டார். தொடர்ந்து பயண்படுத்தியும் வருகிறார்.

கிறிஸ்துவுக்குள்ளான எமது நண்பர்களே தொடர்ந்து ஜெபியுங்கள். நாம் ஒருமித்து கர்த்தருடைய நாமத்தை உயர்த்துவோம்
                                                     கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?