முஹம்மது என்பவர் சொன்ன அல்லாஹ் யார்?
முகம்மது என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கியவர்களை உண்மையிலே பாராட்ட வேண்டும். ஏனெனில்... அந்த மனிதருடைய வழியிலே வாழவிரும்புகிற மனிதர்களை ஏராளமான எண்ணிக்கையில் கட்டிப் போட்டிருக்கிறது பாருங்கள்.
முசுலீம்களுடைய நம்பிக்கையின்படியே நாமும் பேசுவோம் முகம்மது என்ற ஒருவர் இருந்தார் என்றும் ஓரிறைக் கொள்கையை போதித்தார் என்றும் பேசுகிறார்களல்லவா?
“ஓரிறைக் கொள்கை” புதிதாக முஹம்மது என்பவரால்தான் கண்டுபிடிக்கப்பட்டதா ?
முசுலீம்களுடைய நம்பிக்கையின்படியே நாமும் பேசுவோம் முகம்மது என்ற ஒருவர் இருந்தார் என்றும் ஓரிறைக் கொள்கையை போதித்தார் என்றும் பேசுகிறார்களல்லவா?
“ஓரிறைக் கொள்கை” புதிதாக முஹம்மது என்பவரால்தான் கண்டுபிடிக்கப்பட்டதா ?
“ஓரிறைக் கொள்கை” ஏற்கனவே யூதர்களாலும் கிறிஸ்தவர்களாலும் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த ஒன்றல்லவா?
முஹம்மது என்பவரது பெயரால் அரபிய அரசர்களால் உருவாக்கப்பட்ட வேதமான குர்ஆனில் காணப்படுகிற அனைத்து பாத்திரங்களுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? இதற்கு முன், இவர்களுடைய பெயர்களெல்லாம் யூதர்களுடைய வேதமாம் தோறா-விலும் கிறிஸ்தவர்களுடைய வேதமாம் தோறா,சபூர் மற்றும் இஞ்சிலை உள்ளடக்கிய பரிசுத்த வேதாகமத்தில் இருக்கிறதல்லவா?
இப்படி உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களும் யூதர்களும் பரவலாக வாழ்ந்த காலத்தில் கி.பி 652 க்குப் பின் எழுதப்பட்ட குர்ஆனில் முகம்மது ஓரிறைக் கொள்கையைப் போதித்தார் என்றும் அவர் சொன்ன கடவுளின் பெயர் அல்லாஹ் என்ற புளுகு மூட்டை எப்படி வந்தது?
முஹம்மது என்பவர் சொன்ன அல்லாஹ் யார்?
முஹம்மதுவின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் (அப்த்+அல்லாஹ்) அப்படியானால் திருமிகு அல்லாஹ்வின் அடிமை என்று அர்த்தம்.
இதன்படி முசுலீம்மதம் தோன்றும் முன்பே அல்லாஹ் உள்ளது. இந்த அல்லாஹ் எங்கிருந்து வந்தார்? நிச்சயமாக புதிதாக வந்தவர் அல்ல. குறைஷிகளான அந்த மக்களுடைய சுமார் 365 தெய்வங்களில் ஒன்றாகத்தானே அல்லாஹ் இருக்க முடியும்.???
முகம்மது என்று சொல்லப்படுகிறவருடைய குறைஷி குலமக்கள் பின்பற்றிய மதம் பலதெய்வ வழிபாடுகளை கொண்டதும் சிலைகளை வணங்குவதுமான பேகன் என்கிற மதம் ஆகும். பேகன் மதத்தின் இறைவன் தான் அல்லாஹ். அதனால் தான்....,
முகம்மது என்பவரின் அப்பாவின் பெயர் அப்துல்லாஹ்.
முசுலீம்கள் எழுதி வைத்த சரித்திரத்தின் முந்தைய காலத்தில் அரபியர்கள் சுமார் 365 தெய்வங்களை வணங்கினர் என்றேனல்லவா? அந்த பழங்குடி அராபியர்கள் சூரியன் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை வணங்குபவர்களாக இருந்தார்கள்.
அந்த அராபியர்கள் அதாங்க குறைஷியர்கள் சந்திர கடவுளுக்கு ஆலயத்தை கட்டினார்கள்.
சின், ஹபுல், இலும்காஹ், அல்-இலாஹ் என்பவை அல்லாஹ் என்ற சந்திர கடவுளுக்கு கொடுக்கப்பட்டு இருந்த பெயர்கள்.
அல்லாஹ் என்ற வார்த்தை " அல்+இலாஹ்" என்பதிலிருந்து வந்தது ஆகும்.
மற்ற எல்லா சிலைகளை விடவும் சந்திர கடவுளின் சிலைகளை ("அல்லாஹ்வை") பழங்குடி அரபியர்களான குறைஷிகள் உயர்வாக எண்ணினார்கள்.
இந்த அல்லாஹ் என்ற சந்திர கடவுளைத்தான் காபாவில் குறைஷிகள் தொழுதுக்கொண்டார்கள். திரும்பச் சொல்லுகிறேன் அல்லாஹ் என்பது மக்கா நகர பழங்குடி அராபியர்களான குறைஷிகள் வணங்கிய அனேக கடவுள்களில் முதன்மையானது ஆகும்.
காபாவின் மேலே ஹுபுல் என்ற சிலையை அவர்கள் வைத்திருந்தார்கள். அந்த சமயத்தில் ஹுபுல் என்ற சிலையை சந்திர கடவுளாக கருதினார்கள். அதுமட்டுமல்ல...
குறைஷிகளின் வணக்கத்தலமான காபாவில் கருப்புக்கல் ஒன்று உண்டு. (இன்றைய முசுலீம்களின் பள்ளியிலும் அது இருக்கிறது) இந்தக்கல் சுவர்க்கத்திலிருந்து வந்த கல் எனக்கருதினார்கள். இன்றும் அப்படியே நம்புகிறார்கள். அதற்கு முத்தமிடுவதன் மூலம் சிலை வணக்கத்திற்கு ஒத்த வணக்கத்தை அன்றைய குறைஷிகளும் இன்றைய முசுலீம்களும் செய்து வருகிறார்கள். இருந்தபோதும் நாங்கள் சிலை வணக்கம் செய்வதில்லை என்று பொய் பரப்புரை செய்வார்கள்.
ஆக காபா என்பது சந்திர கடவுளின் வீடு அல்லது ஆலயம் ஆகும்.
காலப்போக்கில் ஹுபுல் விக்கிரத்திற்கு பதிலாக அல்லாஹ் என்ற பெயரை சந்திர கடவுளுக்கு வழங்கி காபா கல் இருக்கிற திசையை நோக்கி முசுலீம்கள் வணங்கும்படி நூதனமாகப் போதிக்கப்பட்டுள்ளார்கள். விவரம் தெரியாத முசுலீம்களும் தாங்கள் விக்கிரஹ வழிபாடு செய்வதில்லை என்று சொன்னாலும். மறைமுகமாக குறைஷிகள் வணங்கின அதே கல்லை அதே ஆலயத்தில் வேறு ஒரு பெயரில் வேறு சில பழக்க வழக்கங்களுடன் வணங்கி வருகிறார்கள்
அம்மக்கள் காபாவை "அல்லாஹ்வின் வீடு" என அழைத்தார்கள்.
சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்த அந்த பழங்குடி அரபியர்கள் மெக்காவில் உள்ள கபாவுக்கு புனித யாத்திரைச் செல்லுதல், ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருத்தல், காபாவைச் சுற்றி ஏழுமுறை சுற்றிவருதல், அதிலுள்ள கருப்புக் கல்லை முத்தமிடுதல், தலையை சிரைத்துக்கொள்ளுதல், மிருகங்களை பலியிடுதல், இரண்டு மலைகளுக்கும் இடையே ஓடிச் செல்லுதல் அல்லது நடத்தல், சாத்தான் மீது கல்லை எறிதல், ஒரு நாளுக்கு பலமுறை காபாவை நோக்கி தொழுகை நடத்துதல் மற்றும், வெள்ளிக்கிழமையன்று சிறப்பு தொழுகை செய்தல் போன்றவைகளை இந்த கல்லை மையப்படுத்தியே செய்து கொண்டு இருந்தார்கள்.
மேலும் சுன்னத் செய்தல், பன்றி வெறுத்தல், ஓரிறை கொள்கை, விலங்கை அறுத்து கொல்லுதல். ஆகியவை யூதர்களிடமிருந்து முசுலீம்கள் காப்பியடித்துக் கொண்டார்கள்.
விக்கிரங்களை அடிப்படையாகக் கொண்டு அராபிய பழங்குடியினராகிய குறைஷிகள் வகுத்து இருந்த பழக்க வழக்கங்களை முசுலீம்கள் புனித வழிபாடு என்ற போர்வையில் தங்களது மத சடங்குகளாக்கிக் கொண்டார்கள்.
அல்-லாத், அல்-உஸ்ஸா மற்றும், மனாத் என்ற தெய்வங்கள் "அல்லாஹ்வின் மகள்கள்" என்று அழைக்கப்பட்டு இருந்தார்கள். (குரான் 53:19-20) லாத் உஸ்ஸா மற்றும், மனாத் என்ற தெய்வங்களை கண்டீர்களா? என்று உள்ளது.
அரேபியாவில் சந்திர கடவுளின் மதச் சின்னமாக "பிறை" இருந்தது. இதேபோல அல்லாஹ்வின் மகள்களைக் குறிக்க நட்சத்திரங்கள் சின்னமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
பேகன் என்றுச் சொல்லக்கூடிய சிலைகளை வணங்கும் மக்களின் இறைவன் தான் அல்லாஹ். அதாவது பிறை அல்லது சந்திர கடவுள் தான் அல்லா.
இதை எல்லா பள்ளிகளிலும் காணலாம். பல கடவுளை உடைத்து, ஒரேயொரு கடவுளாக சந்திரகடவுளை உருவாக்கி எல்லாரும் அதையே வணங்கும்படியான சூழலை ஏற்படுத்திய பெருமை முசுலீம்களையேச் சேரும்.
பல மதத்தை குழைத்து இஸ்லாமை தோற்றுவித்த பெருமையும் முசுலீம்களையேச் சேரும்.
பல வேதத்தை (இஞ்சில், தவ்ராத், ஸபூர்) தொகுத்து குரானை கொடுத்த பெருமையும் கூட முசுலீம்களையேச் சேரும்.
Comments
Post a Comment