முழுக்கு ஞானஸ்நானம் - முக்கியத்துவம் என்ன? - 6

ஞானஸ்நானம் 
ஞானஸ்நானம் என்பது தேவனுக்கேற்ற அறிவடைந்து எடுக்கிற ஸ்நானம் என்று, 5-ம் பாகத்தில் எழுதியிருந்ததுடன் கிரேக்க மொழியில்: "βαπτίζω" " Baptizo means "To immerse or dip under water " " (தண்ணீருக்குள்ளே மூழ்கி ஆழ்த்தி ) என்றும் சொல்லப்படுகிறது. என்றும் இறந்த மனிதனை அடக்கம் செய்வதற்கு ஒப்பான நிகழ்வு. அடக்கம் செய்யும்போது முற்றிலுமாக தண்ணீரில் அமிழ்த்த வேண்டும் என்றும், பாரம்பரிய சபையினரோ ஒரு குவளைத் தண்ணீரை தெளித்து ஞானஸ்நானம் என்றுச் சொல்லுகிறார்கள் என்றெல்லாம் எழுதியிருந்தேன். தொடர்ந்து..


கிறிஸ்துவின் உபதேசமானது பாவத்திற்கு மரித்தவனை அடக்கம் செய்து விட்டு அப்படியே போகட்டும் என்று விட்டு விடுவது அல்ல....,
ஞானஸ்நானத்தில் அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும் அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள் என்று கொலோ 2: 12 -ல் வாசிக்கிறோம்.
எதற்காக நாம் எழுந்திருக்க வேண்டும்? என்று..., சிந்திப்பவர்களுக்கு பரிசுத்த வேதாகமம்  கூறுகிறது 
..பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல... நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம் பண்ணப்பட்டோம். 
                                                                                                                      ரோம 6: 4 
புதிதான ஜீவனுள்ளவர்களா நாம் நடந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே அடக்கம் பண்ணப்பட்டிருக்கிறோம். அப்படியானால், சிலர் தங்களைக் கிறிஸ்துவர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு, துண்மார்க்கமாக பழைய ஜீவனுள்ளவர்களாக நடக்கக் காரணம் என்னவென்றால்? இவர்கள் பாவத்திற்கு சாகவே ல்லை அடக்கம் பண்ணப்படவுமில்லை....,  கிறிஸ்துவுடனே கூட எழுப்பப்படவுமில்லை.
புதிதான ஜீவன் உள்ளவர்களாய் நடந்து கொள்ள வேண்டுமானால்

1. பாவத்திற்கு மரிக்க வேண்டும்
2. அடக்கம் பண்ணப்பட வேண்டும்
3. கிறிஸ்துவின் செயலின்படியே எழுந்திருக்கப்பட வேண்டும்.
இதைத்தான் யோவான் 3: 3..5 வரையுள்ள வசனங்களில் வாசிக்கிறோம்.
மறுபடி பிறக்க வேண்டும் என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் மறுபடியும் பிறந்தவர்கள் புதிதான ஜீவனுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். என்றே கர்த்தர் விரும்புகிறார்.

இன்றைய ஆவிக்குரிய சபைகளில் கொடுக்கிற எடுக்கிற எல்லா ஞானஸ்நானமும் சரியான முறையில் அல்லது முறைப்படியான ஞானஸ்நானமே..! என்று சம்பந்தமேயில்லாமல் வக்காலத்து வாங்க மாட்டேன். காரணம் இன்று ஆவிக்குரிய சபைகள் என்று சொல்லப்படுகின்றவை எல்லாமே ஆவிக்குரிய சத்தித்தின்படியும் உபதேசத்தினடிப்படையிலுமே முழுமையாக செயல்படுகிறது என்று எண்ணால் சொல்லமுடிவதில்லை. நான் மட்டுமல்ல சரியான ஆவிக்குரிய சபையில் ஆவியானவரால் நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்ற எவருமே அப்படிச் சொல்ல முடியாது. சொல்வதுமில்லை. அதற்காக சத்தியத்தின்படி நடக்கிற சபைகளே இல்லை எனச் சொல்லிவிடவும் முடியாது. 
 தாரணமாக: காவல்துறையில் அநேகர் கையூட்டு (லஞ்சம்) வாங்குகிறார்கள். என்று செய்திகளிலும் சினிமா தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அப்படி என்றால் காவல்துறையில் எல்லாருமே அப்படித்தான் என்று தீர்மாணித்துவிட முடியாதே...! நல்லவர்களும் உண்டு அல்லவா. அதற்காக எல்லாருமே நல்லவர்கள் என்று திருப்திபட்டு விடவும் முடியாதே..! அப்படி திருப்திப்பட்டுக் கொண்டால் நாம் ஏமாளிகள் என்று கருதப்படுவோம் அல்லவா? எனது அனுபவத்தில் அநேகமான ஆவிக்குரியசபைகள் நல்ல நோக்கத்தில் அல்ல பெரும்பாலும் உள் நோக்கத்தோடுதான் ஸ்தாபிக்கப்படுகிறது. இதை மட்டுமே ஆய்வு செய்து உண்மையை அறிவோமானால்… நமது ஆவிக்குள்ளாக மிகவும் சோர்ந்து போவோம். கூடுமானால் ஆண்டவர் இருக்கிறாரா? இல்லையா? என்று யோசிக்குமளவுக்கு நமது நிலை மாறிவிடும்.

 அதனால்தான் சொல்லுகிறேன் சர்வவல்லவரும் மகா உண்ணதமானவருமான தேவனை நோக்கி நீங்கள் பார்க்கும் பார்வைக்கு இடையில் தடையாக மனிதனால் எழுப்பபட்ட சில ஊழியங்களும் ஊழியர்களும் திரையாக இருந்து சர்வ வல்லவரையும் அவரது வார்த்தையையும் நீங்கள் கற்பதற்கும் காண்பதற்கும் தடையாக இருக்குமானால் நீங்கள் மிகவும் பரிதபிக்கப்படத் தக்கவர்களாக இருப்பீர்களே..!? மீன்டும் சொல்லுகிறேன் கவனமாயிருங்கள்.
ஏனெனில்..., கிறிஸ்துவின் உபதேசத்தில் கற்றுத் தேர்ந்த மனிதர்களுக்கு கர்த்தரால் உண்டாக்கப்பட்ட ஏதேன் தோட்டத்திற்குள் கர்த்தரால் உண்டாக்கப்பட்டதாயிருந்த போதும் ஏவாளுக்கும் முன்னே தன்னைப் படைத்தவரை மறந்து பிசாசின் வஞ்சனைக்குள்ளே விழுந்துபோய் விட்டதுமான சர்ப்பமும் இருக்கும். அது நம்மிடத்தில் பேசவும் கூடும். என்று நன்குத் தெரியும். 
கர்த்தருடைய வார்த்தையின் மீது கவனமும் பயமுமுள்ள மனிதனுக்கு தேவனைச் சேர்வதற்கும் அவரது கற்பனைகளுக்கு கீழ்படிவதற்கும் தடையாக எந்த ஒன்றும் வந்துவிட முடியாது. இப்படிப்பட்டதொன்றும் வரவேமுடியாது. இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களே முழுக்கு ஞானஸ்நானம் எடுக்க முன்வருவார்கள் ஏனெனில் இது அதாவது ஞானஸ்நானம் தேவநீதி. மற்றவர்கள் எதிர்த்து நிற்பார்கள் காரணம் ஞானஸ்நானம் இடுக்கிறவன் பிசாசின் ஆளுகைக்கு விடுபட்டு தேவராங்யத்தின் கட்டுப்பாட்டுக்குள் கர்த்தருடைய கட்டளைகளுக்குள் கடந்து வருகிறான். இது சத்துருவுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் மகத்தானதொரு நிகழ்வு.

கானானுக்குப் போக வேண்டுமானால் செங்கடலைக் கடக்கவேண்டும்
மேகம் மற்றும் அக்கினியினுடைய பாதுகாப்பு வேண்டும்.


1கொரி 10: 2. எல்லாரும் மேசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். 3. எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள். 4. எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில் அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள் அந்தக் கன்மலை கிறிஸ்துவே.

எகிப்திலிருந்து விடுதலையான இஸ்ரவெலர்கள் கர்த்தர் வாக்குப் பண்ணின கானான் போக வேண்டுமானால் கர்த்தர் வழி நடத்தினதின்படி செங்கடலை கடக்க வெண்டும் அக்கினி மேக ஸ்தம்பத்தின் கீழ் நடக்கவும் வேண்டம். இது பழைய உடண்படிக்கை.

புதிய உடண்படிக்கையின் நாட்களிலுள்ள நமக்கு கர்த்தர் தந்துள்ள வாக்குத்தத்தமான நித்திய ஜீவனைப் பெற வேண்டுமானால் இயேசுகிறிஸ்து காட்டிய வழியிலே மத் 3: 15..17 யோவா 3: 22...23 மற்றும் மத்28:18..20 வசனங்களின்படி ஞானஸ்நானம் எடுத்தபின்புதான் பரலோகப்பயணத்தை துவங்க முடியும் 
யோவா 3: 3. இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
4. அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இராண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ என்றான்.
5. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
6. மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும் ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.

இயேசு கிறிஸ்து மத் 28:19...20 ல் "ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்" என்று இயேசு கட்டளையிட்டுள்ளார்.

எபே 4: 5. ஒரே கர்த்தரும் ஒரே விசுவாசமும் ஒரே ஞானஸ்நானமும் என்றும்
1பேது 3: 21 ஞானஸ்நானமானது மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல் தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து எனச் சொல்லப்படுகிற வார்த்தையினிமித்தம்

இயேசு கொடுக்கச் சொல்லுவதும் பரிசுத்த ஆவியானவரால் இயேசுகிறிஸ்துவின் சீடர்களால் அறிவிக்கப்படுவடுமான ஞானஸ்நானம் எந்த ஞானஸ்நானம் ? என்ற சந்தேகமே வேண்டாம். 
அது முழுக்கு ஞானஸ்நானமே...! 
முழுக்கு ஞானஸ்நானத்திற்கு எதிர்த்து நிற்பவனும் மற்ற ஜனங்களை முழுக்கு ஞானஸ்நானம் எடுக்க விடாமல் தடை செய்கிறவனுமாகிய இவர்கள் நிச்சயமாக பிசாசினால் உண்டாயிருக்கிறார்கள்..

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?