குர்-ஆனின்"ஆதம்"பைபிள் கூறும்"ஆதாம்" அல்ல..

ஆதாம் ஒரு நபியா?

ஆதாமைப்பற்றி பரிசுத்த வேதாகமம் குறிப்பிடும்போது அவர் தேவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர் என்று மட்டுமே குறிப்பிடுகிறது. இதை பரிசுத்த வேதாகமத்தின் பல்வேறு இடங்களிலும் அப்படியேதான் நாம் காணமுடியும்.

இப்படி அகில உலகிலும் கோடிக்கணக்கிலான மக்களால் 3500 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றி வருகிற வேளையில்.. 3500 ஆண்டுகள் கழித்தும் திடீரென 700 ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய ஒரு மதத்தினர் பைபிளை உல்டா பண்ணி ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்கள். அந்த புத்தகம் குர்-ஆன் ஆகும். அந்தப் புத்தகத்தில்....

ஆதம் என்னும் ஒரு பாத்திரத்தை உருவாக்கி அந்த ஆதம் என்பவருக்கு நபி என்ற பட்டத்தையும் கொடுத்து விட்டனர். இதன்மூலம் தெரியவருவது என்னவென்றால்.., நாம் அதாங்க கிறிஸ்தவாளாகிய நாம் சொல்லும் ஆதாம் வேறு முசுலீம்கள் சொல்லும் ஆதம் வேறு.

முந்தினவர் ஆதாம் பிந்தினவர் ஆதம்

1.ஆதாம் 2.ஆதம் இரண்டு வெவ்வேறு நபர்கள் ஆனால் ஒரே பெயருடையவர்கள் மாதிரி இருந்தார்களானால்..., அவர்கள் இருவரும் ஒருவரே என்று சொல்லிவிட முடியாது. அதேபோல..,

இவருக்கான எந்த ஒன்றையும் அவருக்கோ அவருக்கான எந்த ஒன்றையும் இவருக்கே கொடுத்துவிட கூடாது. அதேபோல

அரசாங்க பதவியில் இருந்தவருக்கு அரசாங்கம் கொடுக்காத பதவிகளை நாமாக ஒருவருக்கு அளித்து அவரை அந்த அதிகாரமுடையவராக இருந்தார் என சொல்லிவிட முடியாது. உதாரணமாக

போலீஸ்காரராக மட்டுமே இருந்து செத்துப்போனவருக்கு அவருக்கு சம்பந்தமே இல்லாத சில ஆட்கள் சில வருடங்கள் கழித்து.., அவர் "போலீஸ் கமிஷனராக இருந்தார்" எனக்கூறுவது பித்தலாட்டமல்லவா? இதை நல்லவன் ஒருவனும் செய்ய மாட்டானே...?! அப்படியானால்...,

3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிசுத்த வேதாகமத்திலும் அதைச் சார்ந்தவர்களும் ஆதாமுக்கு கொடுக்காத பதவி பட்டங்களை வெறும் 1400 வருடங்களே ஆன ஒரு மதம் அதுவும் ஆதாமுக்கும் அவருடைய தெய்வத்திற்கும் எவ்வித தொடர்புமில்லாத மதம் கொடுக்கிறதென்றால்..., அதை ஏற்க முடியாதல்லவா?

முசுலீம்கள் திரும்ப திரும்ப தாங்கள் சொல்லுவதுதான் உண்மை என்று சொல்லுவார்களானால்..,

அவர்கள் சொல்வது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது அது வேறு ஒரு ஆளாக இருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒரு சில முசுலீம்கள் விவரமில்லாமல் அந்த ஆதாம்தான் இந்த ஆதம் என்று குருட்டுத்தனமாக நம்புகிறார்கள் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. எப்படியோ..,

பரிசுத்த வேதாகமம் என்ற பைபிள் கூறும் ஆதாம் வேறு. முசுலீம்களின் மதப்புத்தகமாகிய குர்-ஆன் கூறும் ஆதம் வேறு.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?