ஏஞ்சல் என்பதற்கு தூதன் என்று அர்த்தம். தூதன் என்றால் செய்தி கொண்டு வருபவன்


காலக்கிரமங்களின்படி வேதாகமத்தை வாசிக்க வேண்டும். -2
---------------------------------------------------------------------------------------------------

கடந்த பதிவின்போது பரிசுத்த வேதாகமத்திலுள்ள தேவசித்தத்தை நாம் சுலபமாக புரிந்துகொள்வதற்கு காலங்களை பகுத்து 4 முக்கிய காலங்களாக பிரித்து வேதாகமத்தை படிக்க வேண்டுமென்று எழுதியிருந்தேன். ஜனங்கள் வழி தப்பி போவதற்கு ஏதுவான ஏராளமான காரணங்களில் மிகவும் முக்கியமானது வேதத்தை காலக்கிரமங்களின்படி படிக்காததே ஆகும். இதனாலேயே கள்ள உபதேசங்கள் கணக்கில்லாத அளவில் பெருகி இருக்கிறது.

இப்படிப்பட்ட புரட்டு உபதேசங்களிலிருந்து நாம் நம்மையும் நம்முடைய சந்ததியையும் தேவனுடைய கிருபையால் நம்முடன் இணைக்கப்பட்டிருக்கும் விசுவாசக் குடும்பங்களையும் தப்புவித்துக் கொள்ளவேண்டியது நமக்கு மிகவும் அவசியம். கர்த்தர் நம்மை உண்மையுள்ளவர்களென்று நம்புகிறார்.

முதல் காலம் :- மனசாட்சியின் காலம்

முதல் காலத்தை ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திலிருந்து தேவனால் வெளியேற்றப்பட்ட நாளில் துவங்கி கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய மோசே என்பவர் சீனாய் மலையில் கர்த்தரிடத்திலிருந்து நியாயப்பிரமானத்தை பெற்றுக் கொண்டு வரும்வரையிலான காலம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது முதல் காலம்

முதல் காலத்தில் இருந்த ஜனங்கள் தேவ சித்தத்தை உணர்ந்தவர்களாக வாழ்ந்திருக்க வேண்டும். ஏனெனில் மனிதன் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டவர்களாக இருக்கிறபடியினாலே.... அவர்கள் ஒவ்வொருவரும் சுபாவமாய் (தேவனுடைய இயல்பின்னபடி) நியாயப்பிரமனத்திற்கேற்றபடி வாழ்ந்திருக்க வேண்டும். எப்படியெனில்..,

“....நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.

அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும் குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும் நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்”. ரோமர் 2: 14 15


ஆனால் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு தேவன் தந்தருளின ஆவியின்படி அல்லது தேவ சாயலின்படி (சுபாவத்தின்படி அல்லது மனசாட்சியின்படி) வாழாமல் சிறிறன்பங்களிலே விருப்பம் கொண்டவர்களாக மயங்கி மனம்போல வாழ்ந்தார்கள். அப்படி ஜனங்கள் தங்கள் மாமிசம் விருப்படிப்படியெல்லாம் வாழ்ந்து வந்த நாட்களிலும்...

மோசேவுக்கு முந்தினதும் ஆதாமுக்கு பிந்தைய நாட்களுமான முதல் காலமாகிய மனசாட்சியின் காலத்தில் கர்த்தருக்குப்பயந்து தங்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருந்த நியாயப்பிரமானத்தை உணர்ந்தவர்களாக தங்கள் வாழ்க்கையை தேவனுக்கேற்றபடி வடிவமைத்துக் கொண்டு மனிதர்களே பரிசுத்த வேதாகமம் குறிப்பிடும் பரிசுத்தவான்களான தேவமனிதர்கள்.

தம்மால் தெரிந்து கொள்ளப்பட்ட தம் ஜனங்கள். எப்பொழுதும் தம்முடன் இணைந்து வாழவேண்டுமென்று தேவனாகிய கர்த்தர் விரும்புகிறார். அப்படி வாழ விம்புகிறவர்களே தேவனுடன் சஞ்சரித்தார்கள் என்று பார்க்கிறோம். ஆதி 5: 22 24 ல் ஏனோக்குவும் ஆதி 6: 9 நோவா போன்றவர்கள் மட்டுமல்ல ஆபிரஹாம் ஈசாக்கு யாக்கோபு யோசேப்பு மற்றும் மோசே போன்றவர்கள்.

இவர்கள் தேவனோடு வாசம் செய்பவர்களாக இருக்கிறபடியினாலே அவர்கள் தேவனாலே பாதுகாக்கப்பட்டார்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். தங்களுடைய சந்ததிக்கு பரிசுத்த வாழ்க்கையை கற்றுக் கொடுத்தார்கள். அவர்களுடைய வார்த்தையை மீறுகிறவன் சாபத்திற்கு உள்ளாக்கப்பட்டான்.

மீன்டும் சொல்லுகிறேன். முதல் காலமாகிய ஆதாம் முதல் மோசே வரையிலான காலத்தில் ஆசரிப்புக் கூடாரமோ ஆலயமே இருந்திருக்கவில்லை. ஆசரியனும் இல்லை. போதிப்பதற்கு இன்று போல வேதாகமமும் இல்லை. என்றாலும் கர்த்தர் அநீதி உள்ளவரல்ல எல்லா மனிதர்களுடைய இருதயங்களிலும் நியாயப்பிரமானத்தை எழுதியிருந்ததார். அது அவர்களை எச்சரித்தது சுட்டக் காண்பித்தது. ஆனால் ஏற்றுக் கொள்ளாதவர்களிடையே அக்கிரமம் அளவில்லாமல் பெருகினது.

அதே நேரம் தேவனோடு சஞ்சரிக்கிற மனிதர்கள் நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியைகளை தாங்கள் செய்தபடியினாலே தங்கள் இருதயங்களில் நியாயப்பிரமானம் எழுதியிருக்கிறதென்பதை தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக யோக்கியமானவைகளை செய்து தாங்களை தேவனுடைய ஜனமென்று காண்பித்தார்கள். இன்றும் நமக்கு அதை பரிசுத்த வேதாகமத்தின் வழியாய் அறிவுறுத்துகிறார்கள். உதாரணமாக.. நோவா என்னும் தேவனுடைய மனிதன் தன்னுடைய செயல்களினாலே தேவனோடு சஞ்சரிக்கிற மனிதன் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாhன். அதனிமித்தமாக அவன் கர்த்தருடைய நாமத்தை இந்த பூமியிலே மகிமைப்படுத்தினான்.

எப்படி? என்றுக் கேள்வி எழுப்பவீர்களானால்... நீங்கள் பாக்கியவான்கள்...! இன்று கேள்வி எழுப்புவது தவறு என ஜனங்களுக்குள் போதிக்கப்பட்டிருக்கிறது. எனவேதான்

அநேக கள்ள தீர்க்கதரிசிகள் கள்ள அப்போஸ்தலர்கள் கள்ளப் போதகர்கள் எழும்பியிருக்கிறார்கள் இந்தக் கள்ளர்கள் கூடுமானவரையில் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பதற்காக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து சாத்தானால் பயண்படுத்தப்படும் பாத்திரங்களாக வல்லமையாய்...??? வலம் வருகிறார்கள்.

1பேதுரு 4: 11 ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன். ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன். எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக. அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

என்று பேதுரு எழுதின நிரூபத்தில் வாசிக்கிற இந்த வசனத்தை நன்றாக இல்லது நான்காக பகுத்து பாருங்கள்.

1)     போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி..

2)     உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி….

3)     எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாய்த் 
                                                                       தேவன் மகிமைப்படும்படியே..
4)     அவருக்கே மகிமையும் வல்லமையும் 
                                          சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக..

இன்றைக்கு நம்மிடையே நிறைவேற்றப்படும் அநேக ஊழியங்கள் மேற்கண்ட வசனத்தில் வெளிப்படுகிற தேவதிட்டத்தின்படி செய்யப்படவே இல்லை என்கிறேன். இன்று நடக்கிற பிரபலமான ஒவ்வொரு ஊழியங்களையும் கண்ணோக்கிப்பார்த்தோமானால் நம்முடைய ஆவியிலே சோர்வு ஏற்படுமேயன்றி பெலனுண்டாகாது.

ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பார்கள். அந்த ஒருசோறு இன்று நம்மிடையே உலாவரும் ஏஞ்சல் டி.வி

சாது என்றழைக்கப்படுவதற்கு காவி உடை மட்டுமே போதும் என்பதால் மட்டுமல்ல இலஸ்ரீவரது போதனை மற்றும் செயல்கள்மூலம் பல தவறான முன் உதாரனங்களை விதைத்துவிட்ட கலக்கல் ஆசாமி ஏஞ்சல் டி.வி யின் முதலாளி செல்வராஜ். இந்த ஆசாமி மூலமாகவும் இவரது சகாக்கள் மூலமாகவும் கள்ள உபதேசம் கட்டுக்கடங்காமல் ஏஞ்சல் டி.வியில் போதிக்கப்படுகின்றது.

பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டவர் பேதுரு இவர் வழியாக கர்த்தருடைய வார்த்தை சபைகளுக்கு ஊழியர்களுக்கு வெளிப்படுகிறது:- ஒருவன் “போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி..” போதிக்க வேண்டுமாம். ஆனால் செல்வராஜ் என்பவரோ அவருடைய சகாக்களோ கர்த்தருடைய வார்த்தைக்கு எதிராக அல்லது முரணாக பேசுவதில் மிகவும் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

வேத வெளிச்சமேயில்லாமல் இருளின் வடிவமாக இருக்கும் சாதுசெல்வராஜூம் அவருடைய நண்பர்களும் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற கள்ள உபதேசங்களை ஏஞ்சல் (தூதன்) என்ற டி.வியின் வழியாக கடைவிரிக்கிறார்கள்.

ஏஞ்சல் என்பதற்கு தூதன் என்று அர்த்தம். தூதன் என்றால் செய்தி கொண்டு வருபவன் அல்லது செய்தியை அறிவிப்பவன். யாரிடமிருந்து....?

ஏஞ்சல் டி.வி யின் நிகழ்ச்சிகளையெல்லாம் குறிப்பாக சாது என்ற செல்வராஜ் வின்சென்ட் செல்வகுமார் மற்றும் இவர்களது ஜால்ராக்களுடைய நிகழ்ச்சிகளையெல்லாம்  கவனிக்கும்போது ஆவியில் பகுத்தறிந்து சொல்லுகிறேன். இந்த ஏஞ்சல் (தூதன்)டி.வி தேவனுடைய ஏஞ்சலல்ல சாத்தானுடைய ஏஞ்சல் (தூதன்)

திரும்பச் சொல்லுகிறேன் ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்க வேண்டும். நான் மேலே குறிப்பிட்ட நோவாவைப் பற்றி இந்த சாது என்ற செல்வராஜூடைய போதனை என்னை மாத்திரமல்ல உலகத்தில் அநேக தேவமனிதர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.

தீர்க்கதரிசிகள் என்ற விளம்பர பலகைகளை சுயமாக எழுதி தங்கள் கழுத்திலே தாங்களேத் தொங்கவிட்டுக் கொண்டு அலைந்தாலும் தீர்க்கதரிசி ஆகிவிட முடியாது. அதேநேரம் அலங்கார விளக்குகள் பொறுத்திய அரண்மனைக்குள் நிற்பதற்கு அதிகாரம் பெற்று தூது அறிவித்தாலும். அது தேவசித்தத்திற்கு எதிராக வேதவசனத்திற்கு புறம்பாக இருப்பதனாலே.. இவர்களை போதகர்கள் என்றல்ல ஆபத்தானவர்கள் என்றே ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

நோவா மற்றும் அவரது மகன் காமைப்பற்றி சாதுசெல்வராஜூடைய விமர்சனம் தேவனுக்கு மகிமையையல்ல.. அவகீர்த்தியையே உண்டுபண்ண ஏதுவானதுது. ஆனாலும் தேவன் தம்மை பரியாசம் பண்ணவொட்டார் என்பதை இவரும் இவருடைய கள்ள தீர்க்கதரிசிகளான நண்பர் கூட்டமும் கூடிய விரைவில் உணருவார்கள்.

சாதுசெல்வராஜ் நோவாவைப் பற்றி பேசினதற்கும் தேவதிட்டத்திற்கும் இடையேயான முரண்பாடு என்ன என்றால்..???

தேவனாகிய கர்த்தர் இந்த பூமியை சீரமைத்த 6வது நாளிலே தேவன் மனிதனை சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்பி அதைக் கீழ்ப்படுத்தி சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். (ஆதி 1: 27 28.)

இங்கே புறஜாதியாருக்கு மாத்திரமல்ல... நமக்குமே கேள்விகள் எழும்பினதுண்டு.

படைத்தது இரண்டு பேரை மட்டும்தானே...! இவர்கள் பிள்ளைகள்தானே பெற முடியும். அவர்களுடைய பிள்ளைகள் எப்படி பலுகிப் பெருகுவார்கள் அதெப்படி முடியும்? என்று கேள்வி எழுப்புவோம் ஸாரி கேள்வி எழுப்பினோம். பதில் தெரியும்வரை நாமும் பலவாறு சிந்தித்தோம். இவர்கள் பலுகிப் பெருகினார்கள் எப்படி?

இந்த செய்தியை புரியாததினாலே அநேகர் குழப்பமடைந்தனர் அநேக பிற மதத்தினர் நம் சகோதரர்களை கேள்வி கேட்டு திணறடித்துவிட்டதாக மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இதற்கு சரியான பதிலைத் தெரிந்து கொள்ளாமலேயே அநேகர் உளறினார்கள். பரிசுத்த வேதாகமம் இதற்குச் சொல்லும் பதில் அல்லது விளக்கம் என்ன? -அடுத்த பதிவில் காண்போம்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?