நெல்லை வரலாற்றில் மறைக்கவியலாத சுவடு:-

பாளையங்கோட்டையில்  சாரா டக்கர் கல்லூரி, மட்டுமல்ல, சாரா டக்கர் ஹையர்  செக்கண்டரி ஸ்கூல், சாரா டக்கர் டீச்சர் டிரெய்னிங் ஸ்கூல் என்ற பலகைகளையும் பார்க்க முடியும்.


ஒருவேளை  இது உங்களுக்கு தெரியாமலும் இருக்கலாம்..


இங்கிலாந்து தேசத்தில் இரண்டு கால்களும் முடமான, ஒருசிறு பெண் இருந்தாள்.. அவள் பெயர்தான் சாரா டக்கர்.


அவளால் ஒன்று மட்டும்தான் செய்ய முடியும் ஒரு சாதாரண வீல் சேரில் ஆலயத்துக்கு செல்வாள் அப்போதெல்லாம் இப்போது உள்ள மாடர்ன் வீல் சேர் கிடையாது.


ஒருநாள் தென்னிந்திய மிஷனரி ஜான் டக்கர் (சாரா டக்கரின் சகோதரர்) அந்த ஆலயத்தில் பேசினார்..


தென் இந்தியாவில் பெண் பிள்ளைகள் படிக்க முடியாத சூழ்நிலைகளையும், சமுதாயக் கட்டுப்பாடுகளையும், பெண்களை சிறு வயதிலேயே கோயிலுக்கு பொட்டுக்கட்டி, விட்டு வாழ்நாளெல்லாம் விபச்சாரி ஆக்கப்படுகிறார்கள் என்று அழுகையோடு சொன்னார். பெண்கள் படிப்பது கேவலம் என்று கருதுகிறார்கள் என்றார். நொறுங்கிய மனதுடன்.., 


வீட்டுக்கு வந்தாள் சாரா அவளின் அப்பாவின் பெயர் டக்கர் அவள் ஆண்டவரிடம் சொன்னாள், "ஆண்டவரே எனக்கு இந்தியாவுக்கு போக ஆசையாய் இருக்கிறது.. ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள் என அந்தப் பெற்றோரின் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும் போல் இருக்குது அறிவுக் கண்ணைத் திறந்தால் தானே ஒளி வரும்" என்று.


அவளுக்கு ஒன்று தோன்றியது.. அவள் இந்தியாவைப் பார்த்ததில்லை. திருநெல்வேலி மக்களைப பார்த்ததில்லை. ஆனால், திருநெல்வேலி மக்களுக்காக ஏங்கினாள். அவள் உறவினர்களிடம் நண்பர்களிடம் இதுபற்றிச் சொன்னாள்..


அவள் தன் பிறந்த நாளை பரிசுகள் வாங்கி கொண்டாடவில்லை. அதற்கு பதிலாக பணமாகத் தாருங்கள் என்று பணத்தை சேர்த்தாள். தனது தோழிகளிடம் இருந்து நன்கொடையாக பெற்ற 200 பவுன் நகைகளுடன் தனது 100 பவுன் நகைகளையும் சேர்த்து, ஒரு நாள் அந்த மிஷனரி ஜான் டக்கருக்கு பணத்தை அனுப்பி வைத்தாள், சாரா டக்கர்.


அதில்  உருவாகியதுதான் சாரா டக்கர் ஸ்தாபனங்கள். இலவசமாகவே கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. 


இன்று 4000 பிள்ளைகள் படிக்கும் பெரிய ஸ்கூலாக, கல்லூரியாக கம்பீரமாக நிற்கிறது. 


அவள் இந்தியாவுக்கு வரவில்லை. திருநெல்வேலிக்கும் வரவில்லை ஆனால், இந்த கல்லூரியில் படிக்கும் ஒவ்வொருவரும், பெருமையாக "நான் சாரா டக்கர்  மாணவி" என்று சொல்லுகிறார்கள்..


அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள், இன்றளவும் நினைவுகூறப்படுகிறார்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?