அல்லாஹ் யார்?

அல்லாஹ் (Allah) என்பது அரபிச்சொல் 

Al என்ற  சுட்டுச் சொல்லுடன்  Ilah என்ற பெயர்ச்சொல் சேர்ந்து வருவதால் அது அல்+இலாஹ் = அல்லாஹ் ஆகும். அரபி மொழியில் கடவுளைக் குறிக்கும் பொதுவான வார்த்தை அல்லாஹ், அவ்வளவே..!  2500-க்கும் அதிகமான முறை குர்-ஆனில் வருகிறது. 

இஸ்லாம் வருவதற்கு முன்பு, 

இஸ்லாம் வருவதற்கு முந்தைய அரேபியாவில், முஹம்மதுவின் காலத்திற்கு முன்பே அல்லாஹ் முக்கியமான கடவுள்களில் ஒருவராக அரேபியர்களுக்கு இருந்திருக்கிறார். அல்லாஹ் என்பது, பொதுவான ஒரு பெயராக இருந்தாலும்,  இருப்பதிலேயே சிறந்த “அழகிய திருநாமங்கள்” (பெயர்கள்) அல்லாஹ்வுக்கு இருப்பதாக குர்-ஆன் 7:180; 17:110; 20:8; 59:24 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். 

குர்-ஆன் மற்றும் இஸ்லாமிய பாரம்பரியங்களின் அடிப்படையில், முஸ்லீம்கள் அல்லாஹ்வின்  99 பெயர்களை வரிசைப்படுத்தி, மனப்பாடம் செய்து, அவைகளை அடிக்கடி சிந்திக்கின்றனர். அல்லாஹ்வுக்கு 99 பெயர்களை வைத்து, முஸ்லீம்கள்  தொழுகை செய்தாலும், இஸ்லாமிய நம்பிக்கையின் படி, அல்லாஹ்வுடன் எவரும் நேரடியாக  உறவோ அல்லது தொடர்போ வைத்துக் கொள்ள முடியாது. இஸ்லாமில் அது தடைசெய்யப்பட்டிருக்கிறது. 

முஹம்மது அவர்கள் அல்லாஹ்விடம் இருந்து இறைவேதம் பெற்றதாகவும், அவர் இறுதி இறைத்தூதர் ஆதலால் அவருக்குப் பின் அல்லாஹ்வுடன் எவரும் தொடர்பு கொள்ள முடியாது என்றும் முஸ்லீம்கள் நம்புகின்றனர். உண்மையைச் சொல்வதானால், குர்-ஆனின் படி,  மூஸாவைத் தவிர வேறு யாரும் ( முஹம்மது கூட) அல்லாஹ்வுடன் நேரடி தொடர்பில் இருக்கவில்லை. ஜிப்ரீல் என்ற இறைத்தூதர்தான் முஹம்மதுவை சந்தித்து, குர்-ஆன் வசனங்களை ஓதக் கற்றுக் கொடுத்ததாக இஸ்லாமிய பாரம்பரிய நூல்கள் சொல்கின்றன. முன்பு, முஸ்லீம்களின் எதிர்மறை இறையியல் பற்றி வாசித்தது நினைவுக்கு வருகிறதா? இஸ்லாம் கூறும் அல்லாஹ் மனித அறிவுக்கு அப்பாற்ப்பட்டவர், மனிதர்களால் அறிய முடியாதவர் (Transcendence God).


பரிசுத்த வேதம் கூறும் தேவனோ, தன்னைப் பலவிதங்களில் வெளிப்படுத்துகிறார். கடைசியாக,  ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மூலமாக தம்மை வெளிப்படுத்தினார் என்றும், காணமுடியாத இறைவனை, இயேசுகிறிஸ்துவே வெளிப்படுத்தினார் என்றும் பரிசுத்த வேதத்தில் வாசிக்கிறோம்.(எபிரேயர் 1:1,2; யோவான் 1:18; யோவான் 14:9). 

குர்-ஆனில் அல்லாஹ்வைப் பற்றி சொல்லி இருக்கும் பல காரியங்களில் சில வேதாகமத்தின் தேவனைப் பற்றி நாம் வாசிக்கிறவைகளுக்கு ஒத்தது போலத் தோன்றினாலும், அடிப்படைக் குணாதிசயங்களில் முற்றிலும் வேறுபட்ட ஒருவரை குர்-ஆனில் (அல்லாஹ்வில்) காண்கிறோம். “நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்” என்று இஸ்ரவேலர்களிடம் வாக்குப்பண்ணின நம் தேவன் (லேவியராகமம் 26:12), இன்றும் பாவ-சுபாவ வாழ்க்கையை மாற்றும் ஒரு தெய்வீக அன்பின் உறவுக்கு மனிதனை அழைக்கிறார்.


முஸ்லீம்களில் ஜெபங்களை நீங்கள் என்றாவது கேட்டிருக்கிறீர்களா? தங்கள் கஷ்ட காலங்களில், ஓ அல்லாஹ், என்று சொல்லி தங்கள் மார்பில் அடித்து, அந்தந்த வேளைகளில் செய்ய வேண்டிய துஆக்களை (ஜெபங்களை) முஸ்லீம்கள் உடனடியாக ஓதுவார்கள். அவர்கள்  எவ்வளவுதான் ஊக்கமாக ஜெபித்தாலும், அல்லாஹ் அவர்கள் ஜெபத்திற்கு பதில் கொடுப்பாரா? இல்லையா? என்பதைப் பற்றிய அறிவு நிச்சயம் அவர்களுக்குக் கிடையாது, ஜெபங்களுக்கு பதில் கிடைக்குமா? என்பதை  அவர்கள் அறியார்கள். மாறாக, நம்முடைய தேவனோ அவர்களுக்கு மெய்யான தேவனைப் பற்றி அறிவிப்பதற்காக நம்மைத் தெரிந்தெடுத்திருக்கிறார் (1 பேதுரு 2:9).


தேவனை அறிந்துகொள்ள முடியாதபடி, முஸ்லீம்களை அறியாமை இருளில் வைத்திருக்கும் அந்தகார சக்திகளுக்கு எதிராக நாம் ஜெபிப்போம்.  எல்லா மனிதர்களுடனும் தனிப்பட்ட உறவை வைத்துக்கொள்ள விரும்புகிற மற்றும் இயேசு கிறிஸ்து மூலமாக தன்னை வெளிப்படுத்தின தேவனை முஸ்லீம்களும் அறிந்து கொள்ள நாம் ஜெபிப்போம், நம்மால் இயன்றதைச் செய்வோம், செயல்படுவோம். தொடர்ந்து சிந்திப்போம்...


- அற்புதராஜ் சாமுவேல் அவா்களின் பதிவிலிருந்து...!

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?