நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதி..!

நண்பா்கள் அனைவருக்கும் காலை வணக்கம்.
( இது ஏற்கனவே வேறொரு செய்தியின் இடையில் இது எழுதப்பட்ட செய்தியாக இருந்தாலும் காலத்தின் தேவை கருதி தனித்து...)

பரிசுத்த வேதாகமத்தை படிக்கிறவா்கள் பரிசுத்த வேதாகமத்தை நான்கு பிரிவுகளாக பிரித்துக் கொண்டு படிக்க வேண்டுமென்று ஆலோசனையாகக் கூறுகிறேன். அப்பொழுது உங்களுக்கு அநேக விஷயங்கள் புரியத் துவங்கும்.

நாம் மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட பழைய உடண்படிக்கையினால் தேவனைச் சேராமல் புதிய உடண்படிக்கைக்கு உட்பட்டு, அவருடைய பிள்ளைகளாகக்  காணப்படுகிறோம். இதனால் நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக பல்வேறு சிறப்பான தகுதியை பிதாவினிடத்தில் பெருகிறோம். இப்படியான மேன்மையான அனுபவத்தை கிருபையாகப் பெற்ற நாம் தேவனை பரியாசம் பண்ணக்கூடாது.

உதாரணமாக 

எபே 5: 10 கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். (என்றும்) கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். என்றும் ஆவியானவா் நமக்கு அனுமதியளித்துள்ளார்.

என்னுடைய அனுபவத்திலிருந்து ஒரு சம்பவத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

ஒருநாள் காலையில் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்ட நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். பேசிக்கொண்டு இருக்கும்போது, என் மேஜையின் மீது இருந்த கிறிஸ்தவ மாதாந்திர பத்திரிக்கையின் மீது என் பார்வை பட்டது. அப் பத்திக்கையின் அட்டையில் ஒரு விசித்திர ஓவியத்தைக் கண்டேன். நான் அந்த நண்பருடன் பேசி முடித்தவுடன்,

அந்த பத்திரிக்கையிலிருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டபோது, அந்த ஊழியரின் துணைவியார்தான் அப்போது தொலைபேசியை எடுத்தார்கள். அவர்களும் அவருடன் ஊழியம் செய்கிறவர்தான் இவரும் பல்வேறு கூட்டங்களில் பிரசங்கம் பண்ணுவார். எனவே அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு ஐயா இருக்கிறார்களா? என்றேன். இருக்கிறார்கள் என்ன காரியம் சொல்லுங்கள் என்றார்.

உங்கள் மாதப்த்திரிக்கையைப் பார்த்தேன் ஒரு சந்தேகம்….!? அவரிடம் கேட்க வேண்டுமெனச் சொன்னேன். 

என்ன சந்தேகம் பிரதர்? னாங்க

அம்மா உங்க பத்திரிக்கையை பார்த்தேன் அதில் உங்க ஊழியத்தின் பெயரின் இருபக்கமும் இரண்டு படம் போட்டு இருக்கீங்க அதுல ஒன்னு உங்க ஊழியத்தோட இலச்சினை அதாவது சின்னம். இன்னொரு பக்கம் தாடியும் மீசையுமா தலையில நீளமாட்டு முடி வளர்த்திருக்கிற ஒருவருடைய படத்த போட்ருக்கீங்களே? அது யாரு? ன்னேன். அவுங்க சிறிது தயங்கி தயங்கி சொன்னாங்க அதுவா..? அது இயேசுசாமி படம்.

நான் கேட்டேன் இவர் எந்த இயேசு?
அவுங்க சொன்னாங்க நம்ம பைபிள்ல இருக்கிற இயேசுதாங்க..
நான் கேட்டேன் இவர் பைபிளில் காணப்படும் இயேசு என்றால் இது எப்போது எடுத்த படம்? அதாவது  இந்தப் படம்,

30 வருடங்கள் நாசரேத்து ஊரில் வளர்ந்தபோது எடுத்ததா? அல்லது

30ம் வயதில் யோர்தான் நதிக்ரையில் நின்றபோது எடுத்ததா? அல்லது,

ஊழிய நாட்களில் கலிலேயாவிலிருந்து பெத்தாணியா போனபோதா?

எரிகோவிலிருந்து எருசலேம் போனபோதா?

பெதஸ்தா குளக்கரையிலா? அல்லது,

போர்ச் சேவகரால் பிடிக்கப்பட்டபோதா?

விசாரிக்கப்பட்டபோதா? அடிக்கப்பட்டபோதா? அல்லது,

உயிர்த்தெழுந்த பின்பா? எனக் கேட்டேன்.

அந்த சகோதரி சொன்னார்கள். பிரதர்கிட்ட கொடுக்கிறேன் என்று.

அந்த சகோரரர்கிட்ட அதாவது அவுங்க கனவர்க்கிட்ட தொலைபேசியை கொடுத்திட்டாங்க..! சகோதரர் லைனில் வந்தார்.

பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டோம். அதே முன்னுரை…

அதேகேள்வி... அதற்கவருடைய பதில் : பிரதா் கேள்வி கேட்ருக்கீங்க இல்லையா ? இயேசப்பாகிட்ட ஜெபிப்போம். இயேசப்பாக்கிட்ட கேட்போம். இயேசப்பா நமக்கு பதில் தருவாங்க.

எனக்கு ரொம்ப ஆச்சர்யம்….!? அதனால கேட்டேன்

நீங்க இயேசப்பாக்கிட்ட ஜெபம்பண்ணிக் கேட்டுட்டுதான இந்தப்படத்த போடலியா? ன்னேன்.

அதற்கு அந்த ஐயா சொன்னாங்க சரி இப்பதான கேட்ருக்கீங்க ஜெபிப்போம் பிரதர். இயேசப்பாக்கிட்ட கேட்போம் சரியா? இயேசப்பா சொல்லுவாங்க..!

நான் சொன்னேன். சரி ஜெபம் பண்ணுங்கள்..! நீங்கள்லாம் ஜெபம்பண்ண ஆரம்பிச்ச உடனே இயேசப்பா உங்ககிட்ட வந்து பேசுவாங்க. ஜெபம்பண்ணிக் உங்க இயேசப்பாவிடம் கேட்டு விட்டு அடுத்த மாசப்பத்திரிக்கையில ஒரு கட்டம்கட்டி நம்முடைய உரையாடலயும் போட்டு அதுக்கு இயேசப்பா சொன்ன பதிலயும் போடுங்க. அப்படியில்லைன்னா..,

யாரோ ஒருவர் கேள்வி எழுப்பினாரென்று எழுதுங்கள். எப்படியாச்சும் பதில் போடுங்கய்யா என்றேன்.  சரி என்றார்...!

ஒருவேளை இயேசப்பாக்கிட்ட இந்த ஐயா பேசி கரெக்டா சொல்லீட்டா நம்மிடம் எவனாவது இப்படி முட்டாள்தனமா கேள்வி கேள்வி கேட்டா டாண், டாண்னு பதில் சொல்லலாமுல்லன்னு சந்தோஷப்பட்டேங்க..!

நான் ஆவலோடு எதிர்பார்த்த அடுத்த மாதமும் வந்தது. பத்திரிக்கையும் வந்தது. மிகவும் ஆவலாக புத்தகத்த எடுத்து ஜாக்கிரதையுடன் ஒவ்வொரு பக்கமாக புரட்டி பார்த்தேன்.

கட்டத்தையும் காணம் பெட்டி செய்தியும் காணோம்.

மீன்டும், மீன்டும் புரட்டினேன். அப்படி ஒரு செய்தியையே காணோம்

சலிப்புற்றவனாக புத்தகத்தை மூடி மேசையில் போட்டேன். அட்டையை பார்த்தேன் அந்த படத்தையேக் காணோம்.

அதாங்க என் கேள்விக்கு காரணமான தாடியும் நீள தலைமுடியும் கொண்ட நபருடைய படத்தைக்காணோம். இன்றுவரை அந்தப் படம் அவருடைய பத்திரிக்கையில் வருவதில்லை.

என்ன காரணம்? சிந்தையில் சரியாக இருப்பவர்களும் சிந்திக்கத் தெரிந்தவர்களும் இந்த சம்பவத்தின் உள்ளே இருக்கும் செய்தியை புரிந்து கொண்டிருப்பீர்களென நினைக்கிறேன்.



இங்கே ஒரு உண்மையை சொல்கிறேன் இந்த சமபவத்தில் வரும் தேவ ஊழியர் பிறருடைய பத்திரிக்கையில் வருகிற இயேசு படத்தைப் பார்த்து அந்தப் படத்தை இவரும் பின்பற்றி தனது பத்திரிக்கையிலும் வெளியிட்டு விட்டார். நமதுக் கேள்விக்குப் பின்னா் உண்மையை உணர்ந்து அந்த தவறை திருத்திக் கொண்டார். ஆனால், தனது தவறை எல்லாரும் அறிகிற விதத்தில் ஏற்றுக் கொள்ள அவரால் முடியவில்லை. ஆனால்..

இன்னும் எத்தனையோ அப்பாவிகளான ஊழியர்கள் தாங்கள் ஏமாறுவது மடடுமல்ல எத்தனையோ பேரை ஏமாற்றிக் கொண்டும் இருக்கிறார்கள்.

பிரியமானவர்களே,  கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். (என்றும்) கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். என்றும் ஆவியானவா் நமக்கு அனுமதியளித்துள்ளார். எனவே எச்சரிக்கையாயிருங்கள்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?