நமக்கு எந்த சபை வேண்டும்?

தேவகுமாரனாம் இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் எனக்கு மிகவும் அன்பானவர்களே..! சர்வலோக மீட்பரும் ஆண்டவருமாகிய அவருடய பெயரால் வாழ்த்துகிறேன்.

கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் இருந்தே வாழ்ந்து வருபவர் தமிழா்..! என்று, தமிழ் பற்றுடையவர் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள்.

இந்தியன் என்றாலே அவன் இந்துவாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில், நமது தேசத்தில் முதலிலிருந்தே இருப்பது இந்து மதம்தான் என்று, விபரமறியாத இந்து மதப்பற்றாளாகள் சொல்லித்திரிவர்.

இந்துக்களுடைய பொய் பிச்சாரங்களை முறியடித்து, மிக குறுகிய காலங்களிலேயே இந்துமதம் வந்தது என்றும், பொய்களையும் கட்டுக்கதைகளையும் விட்டுவிலகி உண்மையாய் வந்த இயேசுவைப் பற்றிக்கொண்டு, நிலைவாழ்வு வாழ வாருங்கள் என்று, அழைத்து வழிநடத்தினால்…, மதப் பிரச்சாரம் செய்கிறார்கள், மதம் மாற்றுகிறார்கள் என்று சூலாயுதமும், குண்டாந்தடியும் தூக்குகிறார்கள்..! இந்துமதமென்ற போர்வைக்குள் மறைந்திருக்கும் காட்டுமிராண்டிகள்.

ஆபிரகாமுக்கும் அவருடைய மனைவியாகிய சாராளுக்கும், ஈசாக்கு எனும் மகன் பிறக்கும் முன்னரே, ஆபிரகாமுடைய வேலைக்காரியின் மூலமாக, இஸ்மவேல் பிறந்துவிட்டார். அந்த இஸ்மவேலுடைய வழியில் வந்தவர்களுடைய மதம்தான் இஸ்லாம். என்று, எங்குமே இல்லாத ஆதாரமில்லா கட்டுக்கதைகளை, கண்ணை மூடிக்கொண்டு அளப்பார்கள்.

அதை மறுத்து, உண்மைகளைச் சொல்ல முயன்றால், உயிருக்கு உத்திரவாதம் இல்லை என மிரட்டுவார்கள். முட்டாள்கள் எதைச் சொன்னாலும் நாம் நம்ப வேண்டுமாம்…?..! மீறிப்பேசினால்,


கொலையும் செய்வார்களாம்..! இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் இப்படியே செயல்பட்டு வருகின்றனர்.


இதைப்போலவே…, R.C எனப்படும் ரோமன் கத்தோலிக்கர்கள். 

இவர்கள் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் சற்றும் சளைத்தவர்களில்லை..! பைபிளில் காணப்படும் உண்மைகளுக்கு மாறாக போதிப்பதுதான் இவர்களுடைய முழுநேர பணி. இப்படி போதித்து மக்களை தவறான வழியில் நடத்துவார்கள். இதை எதிர்த்து, அவர்களது தவறான உபதேசத்தை மறுத்து, உண்மைகளைச் சொல்லி, மக்களை நல்வழி நடத்தின அநேகரைக் கொடூரமான முறைகளில் கொன்று, உண்மைகளைத் தடுத்தனர். இது வரலாறு.


இப்படிப்பட்டக் கொலைகார கத்தோலிக்கர்களுக்குப் பயந்து, உண்மைத் தெரிந்திருந்தபோதும், வெளியில் சொல்ல முடியாமல், முடங்கிப் போனவர்கள் ஏராளம். எனவே, “அவர்கள் வாழும் பகுதிகளில் பெரிய அளவில் சத்தியம் பேசப்படவில்லை” என்பது உண்மையே ஆனாலும், இவர்களுடைய இரும்புப் பிடியிலிருந்து தேவபெலத்தோடு தப்பிப் பிழைத்து. ஆங்காங்கே ஒரு சிறுக்கூட்டமானார்கள். இவர்கள்தான் இன்றைய ஆவிக்குரிய கிறிஸ்தவ சபையினர்.

ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் பொருளாதார நிலையில் குறைவுபட்டாலும். பொருளாசை உடையவர்களாக இராமல்... உண்ணவும் உடுக்கவும் நமக்கு இருந்தால்போதும் என்று இருந்து விடுகிறார்கள். எனவேதான், பொருளாதார நிலையிலும், அரசியல் மடடத்திலும், உலகில் பல விதங்களிலும், செல்வாக்குடையதாக கத்தோலிக்கமதம் அடையாளம் காணப்படுகிறது. இதனால்தான் இம்மதம் சார்ந்த சாதாரண மனிதனும், பாரம்பரியமாக இருந்துவருவது கத்தோலிக்க திருச்சபை மட்டுமே! என்று, அடிப்படை உண்மை தெரியாமல், பரிதாபமாக புலம்பித் திரிகிறாா்கள். 

அநேகமான கத்தோலிக்கர்களுடைய அறியாமையின் விளைவாகவே இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவமார்க்கம் அதுவும் ஆவிக்குரிய சபைகள் இடையில்தான் தோன்றியது என்று கூற வேண்டியதாகிறது. இது அறியாமையேயன்றி வேறல்ல..!

சபையை “கிறிஸ்துவின் உடல்” என்று சொல்லும்போது அது, எத்தனை வருடமாக இருக்கிறது? என்ற கணக்கின்படி அல்ல. எதன் அடிப்படையில் இயங்குகிறது? என்பது கவனிக்கப்பட வேண்டியது முக்கியம்”

“எந்த சபையையும் பாரம்பரியத்தைக் கொண்டு அல்லது காலத்தைக் கொண்டு மதிப்பிடக்கூடாது” கிறிஸ்தவ சபையின் செயல்பாடுகள் பிற இனத்தவரையும் “இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் எனது மீட்பர்” என ஏற்றுக் கொள்ள வைப்பதுடன், ஏற்றுக்கொண்ட மக்களை கலப்புக் கலாச்சாரம் இன்றி கிறிஸ்து கற்பித்த பாதையில் பிழையில்லாமல் நடத்திச் செல்வதும் தான் (மத் 28: 18...20) இயேசுகிறிஸ்து ஏற்படுத்தியதும் ஆவியானவரால் நடத்தப்படுகிறதுமான சபை..! கிறிஸ்துவை தலையாகக்கொண்ட சபைதான் கிறிஸ்தவசபை. 

கிறிஸ்து தலையாயிருக்கும் சபையைத்தான் கிறிஸ்துவின் திருத்தொண்டார்கள் வழிநடத்தினார்கள்.  

முதன்முதல் இருக்கிற சபை என்று கதைகட்டி விடப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபை தோன்றும் முன்பே இருந்ததும், பாரம்பரியமானதுமான சபையையும் அதன் செயல்பாட்டையும் உங்களுக்கு காண்பிக்கிறேன். அதன்பின்பு கூறுங்கள் எது கிறிஸ்தவ சபை? என்று.

“கடவுளின் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன்” என்று கடவுளாலேயே நற்சான்று கொடுக்கப்பட்ட இறைவாக்கினர் மோயீசன் என்ற மோசேயின் காலத்திலிருந்து இன்றுவரை இஸ்ராயீலர்களுடைய யூத சபை இருக்கிறது. இயேசுவானவா் தான் பிறப்பதற்காக தெரிந்தெடுத்த யூதா்கள்தான் இந்த சபையை நிர்வகித்து வருகிறார்கள். யூதசபைக்கு சொந்தமானதுதான், எருசலேம் தேவாலயம். 

எருசலேம் தேவாயத்தில் கூடிய இஸ்ராயீல் மக்கள் தந்தையாம் கடவுளை “:யெகோவா” அல்லது “யாவே” என்ற பெயரில் வணங்கி வந்தனர்.  அந்த எருசலேம்சபை கிறிஸ்தவசபை என அழைக்கப்படவில்லை.  அந்தக் கோவிலில் கடவுளுக்கென்றோ, இறைத்தொண்டர்களுக்கென்றோ சிலைகளோ, சொருபங்களோ, படிமங்களோ வைக்கப்படவில்லை. (லேவி 26 :1 2கொரி 6 :16 ) இஸ்ராயீல் மக்கள் இந்த “எருசலேம் தேவாலயம் இருக்கும் திசை நோக்கி இறைவனை வணங்கி வந்தனர்” காரணம் இறைவாக்கினர் மோயீசனுக்கு கடவுள் ஒரு மாதிரியை காண்பித்து இதன்படி கட்டு என்றார். (வி.ப 25 :9, 40) (வி.ப 26 :30 எண் 8 :4) அதன்படியே இஸ்ராயீல் மக்களால் பாலைவனத்தில் கூடாரமாக கட்டப்பட்டது. (வி.ப 40 :16, 34) அதே இஸ்ராயீல் மக்கள் பின்னாளில் இராஜாக்களையும், பிரபுக்களையும் கொண்ட ஜனமான பின்னா், தாவீது அரசனால் பொருட்கள் சேர்க்கப்பட்டு (1குறி 28 :19 1குறி 29 :1-3) அவரது மகன் சாலமோன் அரசனால் மிகவும் அலங்காரமாக செல்வசெழிப்புடன் எருசலேம் தேவாலயம் கட்டப்பட்டது. (2குறி 5 :1, 13, 14) பின்பு எஸ்ரா நெகேமியா என்பவர்களாலும் பின்பு ஏரோதிவினாலும் அந்தந்த காலகட்டத்தில் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

எருசலேம் தேவாலய விதிமுறைகளை தந்தையாம் கடவுள் தமது ஊழியரான மோயீசன் வழியே இஸ்ராயீல் மக்களுக்கு கொடுத்தார் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்திருக்கிறோம். 

சாலமோன் அரசனின் காலத்தில் ஒரளவு சரியாய் நடந்து வந்திருந்தாலும் சாலமோனுடைய அந்திம நாட்களிலும் அதற்குப்பின் வந்த ராஜாக்களும் சில தலைமை குருக்களும் சிலை வழிபாட்டை மறைமுகமாக அங்கீகரித்தனர். இஸ்ராயீல் ஒரு பிரிவினா் புனிதத்தை விட்டு விலகினா். 

நாளடைவில் இஸ்ராயீல் மக்களில் ஒரு பிரிவினா் கடவுளை விட கொள்கைகளையும், தத்துவங்களையும், சடங்குகளையும் போற்றி, பெருமைபடுத்தினா். பெரிதாக மதித்தனர்.

இஸ்ரவேலரில் ஒரு பிரிவினா் இருந்த குருக்களையும், இறந்த குருக்களையும், காரணமின்றி புனிதராக மதித்தனர். (யோவா 18 :23 அப் 6 :11) அதுமட்டுமல்ல இன்றைய கத்தோலிக்கா் போன்று திருவிழாக்கள் கொண்டாடினர். விழாக்கள் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு தேவாலயத்தை சுற்றிலும் வைக்கப்பட்ட கடைகளும், வியாபாரங்களும், நிரந்தரமானது இதனால் சத்தங்களும் சலசலப்புகளும் நிறைந்தது. மக்கள் இவற்றில் மகிழ்ச்சி அடைந்து கடவுளை மறந்தனர். என்றாலும்,

இஸ்ரவேலர்களில் மற்றொரு பிரிவனா் இறைவனுக்குப் பயந்து அவருடைய கட்டளைகளை மறுக்காமல் அவற்றை அப்படியே பின்பற்றி வாழ்ந்தனர். அவர்கள் தங்கள் மேசியாவான இயேசுவை எதிா்பார்த்து காத்திருந்தனா். இப்படி இருந்த நாட்களில்தான்...,

2000 ஆண்டுகளுக்கு முன்பு நாசரேத்து ஊரைச்சேர்ந்த தச்சனாகிய யோசேப்பு என்பவருக்கு திருமணம் செய்யவதற்கு நியமிக்கப்பட்டிருந்த மரியாள் (லூக்கா.1 :27) என்ற கன்னிகையின் மூலம்  “கடவுள் மனிதனாக இயேசு என்னும் பெயரோடு பெத்லகேமில் பிறந்தார்”  இயேசு பிறந்த எட்டாம் நாளில் யோசேப்பும். மரியாளும் அவரை இஸ்ரவேல் சபையான எருசலேம் தேவாலயத்திற்கு கொண்டு சென்று மோயீசன் மூலம் கடவுள் சொன்ன கட்டளைகளை நிறைவேற்றினார்கள். (லூக்கா 2: 22..24)

அந்த எருசலேம் தேவாலயத்தில் வருஷம்தோறும் நடக்கும் திருவிழாவிற்கும் சென்றனர்.  இயேசுவின் பெற்றோரும், இயேசுவை அழைத்து சென்று, திருவிழாவும் கொண்டாடிவந்தனர். (லூக் 2 :41) இயேசுவோ மற்ற சிறுவர்களைப்போல நடந்து கொள்ளாமல் தமது 12-வது வயதில் தாம் கடவுளின் மகன் என்பதையும், தமது தந்தையின் கடமைகளை தான் செய்யவேண்டி இருக்கிறது என்பதையும் அறிவித்தார்.

இயேசு பரலோகத் தந்தையின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக தங்கி விட்டதும் கூட (லூக்2 :43) இந்த எருசலேம் தேவாலயத்தில்தான்.


இயேசுவுக்கு சுமார் 32 வயது இருக்கும்போது அவரது சீடர்களும் அவருடன் இருந்த மக்களும் இந்த எருசலேம் தேவாலயத்தைதான் இயேசுவிடம் காட்டி பெருமையாக பேசினார்கள். (யோவா.2:20)


இயேசுவும் கூட தமது சரீரத்தை அந்த எருசலேம் தேவாலயத்தோடு ஒப்பட்டுப்பேசினார். (மத்26 :6 மாற்.15 :29) அப்படியானால் இது எத்தனைப் பாரம்பரியம் மிகுந்த திருச்சபை பாருங்கள்.? இப்படியாக…


பாரம்பரியமும், பெருமையும் நிறைந்த சபையான எருசலேம் சபை பக்தி வைராக்கியமாய் இருந்தது. ஆனால், கடவுளைக் கண்டுகொள்ள மறந்தது மட்டுமல்ல.., மறுத்ததுடன், 


“கடவுள் பெயரையே அழிக்க தலைப்பட்டது” எப்படியெனில்…

காலம் காலமாக முன்னறிவிக்கப்பட்ட இயேசுவை ஒரு கன்னிகை மூலம் (ஆண் துணையின்றி) பிறந்த இயேசுவை தான் பிறந்த இடத்தை நட்சத்திரம் மூலம் அடையாளம் காண வைத்த இயேசுவை 12 வயதில் பெற்றோர் மதகுருக்கள் மற்றும் வேதபண்டிதர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இயேசுவை, 30 வயதில் திருமுழுக்கு பெற்று கரையேறினபோது வானம் திறந்து தூயஆவி புறாவைப்போன்று இறங்கினதுடன் வானத்தில் இருந்து ஒரு சத்தம் உண்டாகி, “என் அன்பார்ந்த மைந்தன் இவரே இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று, தந்தையாகிய கடவுளால் இவ்வுலகிற்கு அடையாளம் காட்டப்பட்ட இயேசுவை.., 

கடவுளது வல்லமை பற்றி ஒன்றுமே தெரியாமல் “இது எனக்கு எப்படி ஆகும்” (லூக்கா 1 :34) என்று சொன்ன மரியாள் போன்ற மக்கள் வாழ்ந்த தேசத்தில் யோசேப்போ மரியாளோ கூட நினைத்துப் பார்க்க முடியாத அரும் அடையாளங்களை செய்த இயேசுவை எருசலேம் தேவாலயத்துக் குருக்களே மலைத்துப் போகும் அளவிற்கு செத்துப் போனவர்களையும் குருடர்களையும் குஷ்டரோகிகளையும் பிறவி சப்பாணிகளையும் சுகமாக்கிய இயேசுவை (யோவா 21 :25 ல் எழுதப்பட்டது போன்று இயசு செய்தவை வேறு பல உண்டு அதற்கு இதில் இடம் போதாது.) இப்படி...,

கடவுளது தன்மைகளையும் வல்லமையையும் வெளிப்படுத்திய இயேசுகிறிஸ்துவை பாரம்பரியமான எருசலேம்சபை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இறைமகன் எனச் சொல்வதை எதிர்த்தது மறுதலித்தது மாறாக தச்சனாகிய “யோசேப்பின் மகன்” “மரியாளின் மகன்” என்றும் “பாரம்பரிய சபையையும் அதன் மக்களும் சொன்னார்கள்” (யோவான் 6 :41, 42)


“நான் இவ்வுலகத்தில் இருந்து வந்தவனல்ல, விண்ணிலிருந்து வந்தவன்” என்றார் இயேசுகிறிஸ்து. (யோவா 8 :23) ஆனால், பாவத்தில் விழுந்த இஸ்ராயீல் மக்களோ, இயேசு மரியாள் வயிற்றில் இருந்து வந்தவர் என்று அறிவித்து வந்தார்கள். (மத்13 :53, 54)

“நான் கடவுளின் மகன்” என்று (மத் 26 :63-65) இயேசு சொன்னபோது மரியாளுடைய மகன் என்றும் எருசலேம்சபை சொன்னது. 


இயேசு கடவுளின் மகன் என்ற இயேசுவின் உண்மையான அறிவிப்பையே காரணம் காட்டி பாரம்பரிய சபை 
இயேசுவை கைது செய்தது.  
இயேசுவை அவமானப்படுத்திற்று
இயேசுவின் கன்னத்தில் அறைந்தது. 
இயேசுவுக்கு சிவப்பு அங்கி மாட்டி கின்டலடித்தது.
இயேசுவின் தலையில் முட்களால் ஆன கிரீடம் சூட்டியது.
இயேசுவின் கையில் ஒரு கோலைக் கொடுத்து கேலி செய்தது.
இயேசுவை அசிங்கப்படுத்துவதற்காக அவரது முகத்தில் காறித்துப்பிற்று.
கடைசியாக..,
இயேசுவை கொலை செய்வதற்காக பிறவினத்தாரிடம் இழுத்துச் சென்றது. 

பாரம்பரிய சபையும் பிற இனத்து அதிகாரிகளும் ராஜாக்களும் ஒன்றாகக் கூடிவந்த விசாரனையில் அவர் குற்றமற்றவர் என்று தெரியவந்த பின்னரும், “இயேசு இறைவனுடைய மகன்” என்ற அறிவிப்பின் காரணத்தினால் கொதித்தெழுந்தனர்.  இயேசுவை சிலுவையில் அறையும்..., சிலுவையில் அறையும்.., என்று சத்தமிட்டனா். சிலுவையை தூக்கி நடக்க வைத்தனர் கொடுமையாக நடத்தினா். பாரத்தினால் இயேசு தடுமாறிக் கீழே விழுந்தபோதெல்லாம், சவுக்கால் அடித்தனர். கடைசியாக,

கொல்கதா மலைமேட்டில் இரண்டு கள்ளா்களுக்கு நடுவில் இறைமகன் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றனர்.  கடைசிவரை இறை மகன் என்பதை ஏற்க மறுத்து “யோசேப்பின் மகன் மற்றும் மரியாளின் மகன்” என்றே சொல்லி வந்தனர். இன்றைக்கும்..,

இயேசுவை இறைமகன் என்று அறிவிக்காமல் இயேசுவை யோசேப்பின் மகனாகவும், மரியாவின் மகனாகவும் பார்க்கிறவர்கள், இயேசுவை இறைமகன் என்பதை ஏற்க மிகவும் தயங்குகின்றனர். ஒருசிலர் ஏற்பதாகச் சொன்னாலும் அதை அறிக்கைசெய்ய மறுக்கின்றனர். இதைக் கொள்கையாகவே கொண்டதுதான், பாரம்பரிய கத்தோலிக்க சபை.

அதுமட்டுமல்ல, கத்தோலிக்கசபை இயேசுவை இறைமகன் என்று சொல்லும் ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைகளை பரிகாசம் பண்ணுவதுடன் நிந்தித்து வருகிறது. வாய்ப்பு கிடைத்தால் துன்பப்படுத்தவும் செய்கிறது. 

மீண்டும் சொல்லுகிறோம், “கத்தோலிக்கத் திருச்சபை இறைமகன் இயேசுவை சூசையின் மகன் அல்லது யோசேப்பின் மகன் என்றும் மரியாளின் மகன் என்றும் மரியாளால் தான் இயேசு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றும் சொல்லி இறைமகனை அவதூறு செய்து வருகிறது. 

இதனால் தெரிய வருவது என்ன? பாவத்தில் விழுந்த இஸ்ராயீல் ஜனங்களால் நிறைந்த சபை சபை வெளிப்படையாய் செய்ததை கத்தோலிக்க சபை மறைமுகமாய் செய்கிறது. 

கிறிஸ்துவின் சரீரமாகிய சபை என்றால் அது “பாரம்பரியமாக இருந்து வருவதாக சொல்லப்படும் கத்தோலிக்க சபை அல்ல இயேசுகிறிஸ்துவை இறைமகன் என்று அறிவித்து அவரை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கும் ஆவிக்குறிய கிறிஸ்தவ சபைகள் மட்டுமே..!

இதை படிக்கிற நண்பர்களே! வாசித்து, யோசித்து.., நமக்கு இயேசுவின் தரத்தைக் குறைத்துக் கூறும் கத்தோலிக்க சபை வேண்டுமா? அல்லது, “இயேசுவேயே ஆண்டவா்” என்று அறிவிக்கும் ஆவிக்குரிய கிறிஸ்தவ சபையா? எந்த சபை வேண்டும்? என்று முடிவு செய்யுங்கள். 

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?