நிஜத்தை அறிந்து கொள்ள, நமது சந்ததிக்கு அறிவிக்க..,

கிறிஸ்துவுக்குள் எனக்குப் பிரியமானவர்களே..! 

உங்களுடன் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இதில் மகிழ்ச்சியடைகிறேன். கர்த்தர் கொடுத்த இப்படிப்பட்ட வாய்ப்புகளுக்காக நம்முடைய தேவனாகிய கர்த்தரை முழுமனதோடே துதிக்கிறேன்.  எழுதப்படும் செய்திகளை நிதாணமாக படியுங்கள். இதை மற்றவர்களுடன் பொறுமையாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆலோசனைகள் சொல்ல விரும்புவீர்களானால்..., சொல்லுங்கள்..., வரவேற்கிறேன். ஏனெனில்...
இன்றைய சமூகத்திற்கு சில வரலாறுகள் மறைக்கப்படுகின்றன. அல்லது, திரிபுபடுத்தி அறிவிக்கப்படுகிறது. நாமோ.., மிகவும் கவனமாக நிஜத்தை அறிந்து கொள்ள வேண்டியது இன்றைய காலகட்டங்களில் மிகவும் அவசியமாக இருப்பதுடன் அதை நமது சந்ததிக்கு அறிவிப்பதும் அதை அவர்கள் வரும் சந்ததிகளுக்கு தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டியதும் மிகவும் கட்டாயமானதாக இருக்கிறது. எனவே..,

 இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து படியுங்கள். கர்த்தர் எனக்குக் கொடுத்துள்ள சபை மற்றும், வெளி ஊழியங்கள் மத்தியிலும் சமயமிருக்கும்போதெல்லாம் என்னால் முடிந்தமட்டும் எழுதுகிறேன். ஆர்வமுடன் இந்த எழுத்துக்களைப் படிக்கிற உங்களுடைய அகக்கண்களை கர்த்தர்தாமே திறந்தருள்வாராக... ஆமென். 
பிராமனர்களால் பிராமனர் அல்லாதோர் வருண வகைகளின்படி நடத்தப்பட்டார்கள். பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன் பிராமனன் தோளிலிருந்து சத்ரியன் தொடையிலிருந்து வைசியன் பாதத்திலிருந்து சூத்திரன் என்று அறிவித்ததின் மூலம் பிறசமூகத்தவரை எளிதாகப் புறக்கணித்தனர். ஜாதியின் பெயரால் மனிதர்களை மனிதனே புறந்தள்ளுகிறதைப் புறக்கணிக்கப்படுகிறதை இழிவு படுத்தப்படுவதைப் பார்த்த ஈரோட்டு வியாபாரியின் மகன் ராமசாமி என்பவர் கொதித்தெழுந்தார். கேள்விகள் கேட்டார் கேள்வி கேட்பவர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டார். ஒரு இயக்கம் கண்டார். அந்த இயக்கம் கடவுளே இல்லை...! கடவுள் இல்லவே இல்லை...! என்று வெறுப்புடன் அறிவித்தது. இன்னும் அந்த இயக்கத்தில் ஏராளமான உறுப்பினர்கள் உண்டு. எனது தகப்பனாரும் கூட அந்த இயக்கத்தின் ஆரம்பகால தொண்டராக இருந்தவர் ஆவார். இந்தியாவில் இருப்பது போல இல்லாவிட்டாலும்...,

மேற்கு கரை பகுதிகளிலும், அரபு தேசங்களிலும் வசித்த யூதர்களும், யூத மார்க்கமமைந்தவர்களும், யூத மார்க்கமல்லாதவர்களை புறக்கணிப்பதாக சிலர் எண்ணிக் கொண்டார்கள்....! அதேவேளையில்..

யூதர்களுடைய எவ்வித போதனைக்கும் இணக்கமில்லாதவர்களாக இருந்தபோதும் தங்களை யூதர்களோடு தொடர்புடையவர்கள் என்றுச் சொல்லிக் கொள்ளும் கத்தோலிக்கர்கள் தங்களை கிறிஸ்தவர்களென்று துணிகரமாக அறிவித்துக் கொண்டார்கள்

இப்படி இருந்தபோதும்..., கத்தோலிக்கர்களின் ஆட்சி அதிகாரங்களிலும் அவர்களுடைய வணக்க வழிபாட்டு முறைமைகளிலும் ஒழுக்கமின்மை மலிந்து கிடந்தது...! அவர்களுடைய செயல்களால் அநேகர் பாதிக்கப்பட்தென்னவோ உண்மைதான். 

கத்தோலிக்கர்களால் பாதிப்புக்குள்ளாகி வேதனையடைந்தவர்களில் கத்தோலிக்கர்களும், கிறிஸ்தவர்களும், குறைஷிகளும், பெர்சியர்களும், மற்றும், அரபியர்களிலும் அநேகர் இருந்தனர். அவர்களெல்லாரும் ஒன்றினைந்தனர். ஆலோசித்தனர்.

கிறிஸ்துவுக்குப் பின் (கி.பி.) 650 ஆண்டுகளில் வெறுப்பாளர்களாலும், அதிருப்தியாளர்களாலும் "முசுலீம்" என்ற நூதன மதம் உருவாக்கப்பட்டது. இந்த மதத்தின் உற்பத்திக்கு முன்னும் பின்னும் சிலருடைய கடுமையான உழைப்பு இருந்தது என்பது உண்மை மட்டுமல்ல.... 

முசுலீம் மத வளர்ச்சிக்காக.., அநேக மனிதர்கள் அவர்களுடைய குடும்பங்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது. அநேகருடைய உடமைகள் பறிக்கப்பட்டது. இது வரலாற்றின் வரிகளில் வெளிப்படும் வேதனையான உண்மை. என்றாலும்.., வெளியாக்கப்பட்டவைகள் சிறிதளவே மறைக்கப்பட்டவைகள் மலையளவு எனவேதான்..

கிறிஸ்துவுக்குள்ளான நண்பர்களே..! பிற மதத்தவரை புறந்தள்ளாதிருங்கள். அவர்களை நேசிப்பதுடன் நிதானமாக கர்த்தருடைய வார்த்தையை விளக்குங்கள். அதேநேரம் நமது உண்ணத மார்க்கமான கிறிஸ்துவ மார்க்க உபதேசங்களிலும் பரிசுத்தத்திலும் நேர்த்தியான வாழ்வு வாழவேண்டும் இப்படி நடப்போமானால் கிறிஸ்துவுக்கென்று அநேகரை ஆதாயப்படுத்த முடியும்.   

                                                                             - கர்த்தருக்கு சித்தமானபடி தொடரும்....,

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?