கல்லை முத்தமிடுவதால்...,

அன்பு, பாசம், நேசம், காதல் என, மனதில் ஏற்படும் உணர்வுகளை அடையாளப்படுத்த உதவும், எளிமையான சாதணமாக முத்தம் பயண்படுகிறது..  தாய், தந்தை மற்றும் பிள்ளைகள் பெற்றோருக்கு என குடும்பத்திற்குள் பகிர்ந்து கொள்ளும் முத்தம். பாசத்தின் அடையாளமென்கிறோம்.

காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனைவிக்குத் தரும் முத்தம், அன்பின் அல்லது, மோகத்தின் அடையாளம் என்கிறோம். இப்படியாக, சூழ்நிலை அல்லது இடத்திற்கேற்படி முத்தத்தின் பொருள் மாறுபடுகின்றது.

முத்தம் தோன்றியது எப்போது? 
   எந்த உயிரினம் தன் உணர்வை வெளிப்படுத்த விரும்பியதோ..? அப்பொழுதுதான், முத்தம் தோன்றியது. என்பதுதான், பதிலாக இருக்குமேயன்றி வேறில்லை.

யார்? யாரிடத்தில் அன்பை வெளிப்படுத்துவார்கள்? 
    உயிரிணங்கள் மட்டும்தானா? உயிரினங்கள் மரியாதை செய்யும் பொருட்டு, உயிரற்ற பொருட்களில் முத்தமிட மாட்டார்களா? என்பீர்களாகில்.... ,
 சிலர் சில பொருட்களுக்கு முத்தமிடுகிறார்கள் என்பது உண்மையே..!
ஒரு மட்டை வீரர் தன்னை நோக்கி வீசப்பட்ட பந்தை தனது மட்டையால் வேகமாக அடிக்கிறார். பந்து ( Ball ) எவருடைய கையிலும் சிக்காமல் பறந்து போய், பார்வையாளர்கள் பகுதியில், பாய்ந்து விழுகிறது.

ரசிகர்களுடைய கைதட்டுகளால் அரங்கம் அதிருகிறது. இவரது அணிக்கான ஓட்ட எண்ணிக்கை (Run) உயருகிறது. அந்த வீரர் துள்ளி குதிக்கிறார். சக வீரர்கள் ஓடிவந்து இந்த வீரரை கட்டி அணைக்கின்றனர். சிலர் முத்தமிடுகின்றனர். இந்த வீரரும் மிகவும் மகிழ்ந்து அந்த மட்டை (Cricket Bat) யை முத்தமிட்டு அந்த மட்டையை உயர்த்தி காட்டுகிறார். மீன்டும் ரசிகர்கள் கைதட்டி அரங்கை அலற வைக்கிறார்கள்.

ஆக நம்முடைய மட்டை வீரர் தனது வெற்றிக்கு வித்திட்ட மட்டைக்கு முத்தமிடுவதன் மூலம் அந்த மட்டை (Cricket Bat) -க்கு  நன்றி சொல்லுவதாக எண்ணி மகிழுகிறார். தொலைக்காட்சியில் பார்க்கிற நம்மில் அநேகர், அதை கைத்தட்டி வரவேற்கிறோம்.

நம்முடன் உட்கார்ந்து அந்தக் காட்சியைப் பார்க்கிற நம்ம வீட்டு சிறுவனும், இதை தன் நண்பர்களுடன் விளையாடும்போது, இவனும் பந்தை அடித்து விரட்டுகிறான். குறிக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி  பந்து பறக்கிறது. இவனுடைய அணியின் ஓட்ட எண்ணிக்கை (Run) அதிகரிக்கிறது. 

நம்ம வீட்டுச் சிறுவனும் உற்சாகத்தில் குதிக்கிற வேகத்தில் தனது மட்டையை முத்தமிட்டு மகிழுகிறான். இவனைப் பார்க்கிற இன்னொருவன் அவனும் செய்கிறான் அவனைப் பார்த்து இன்னொருவன் ஆக மட்டைக்கு முத்தம். தொடருகிறது....,
நண்பர்களே.. இங்கே நான் உங்களிடத்தில் ஒரு கேள்வியை வைக்கிறேன். உயிரற்ற அந்த பொருளை முத்தமிட்டு மரியாதை செய்வதை சரி என்றும், பகுத்தறிவிற்கு உகந்தது என்றும் ஏற்றுக் கொள்கிறீர்களா?

நாம் தொலைக்காட்சியில் பார்த்தபோது அந்த சர்வதேசவீரன் முத்தமிட்டானே.., அதுவே முட்டாள்தனமானதுதானே..?! அதை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? அதே போல

முசுலீம்கள் மக்கா சென்று ஒரு கல்லை வணங்குகிறார்கள். அல்லது ..,

கருப்புக் கல் இருக்கும் திசை நோக்கி வணங்கி இறை வாழ்த்துக் கூறுகிறார்கள். முடிந்தால்..., 

கல்லை முத்தமிடுவதால் அவர்கள் தொழுகை இன்னும் சிறப்பு பெருகிறது.

சாத்தான் மேல் கல்லெறிதல் என்றும்.., 

இரண்டு மலை (இதுவும் கல் சம்பந்தப்பட்டதே?!) களுக்கிடையே தொங்கோட்டமாக ஓடி கடன் செய்கிறார்களே..! இதுமட்டுமல்ல 

மொட்டையடித்தல், தைக்காத துணியை போர்த்திக் கொள்ளுதல் போன்ற, அநேக மூடப்பழக்க வழக்கங்களை நிறைவேற்றுகிறார்களே...? 

இதை சரி என்கிறீர்களா?

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?