"சிலுவைபலி" முசுலீம் நண்பர்களுடன் விவாதம்
சிலுவைபலி என்கிறதான தலைப்பில் முசுலீம் நண்பர்களுக்கும் கிறிஸ்தவ நண்பர்களுக்கும் இடையில் ஒரு எழுத்து விவாதம் நடைபெற்றது. கடந்த 6-7-12 வெள்ளிக்கிழமை பகல்12 மணியளவில் சகோ வெங்கடேஷ் அவர்கள் விவாதத்தின் தலைப்பை பதிவிட்டு விவாதம் தொடங்கியது கிறிஸ்தவர்கள் சார்பாக நானும் கலந்து கொண்டேன். விவாதம் 8-7-12 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியுடன் நிறைவுபெறும் என்று இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. விவாதத்தில் நாம் முன் வைத்தக் கேள்விகளுக்கு மழுப்பலானதும் ஏற்றுக் கொள்ள இயலாததுமானவைகளை பேசி நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தது மட்டுமல்ல பல மணி நேரங்கள் அவர்கள் தொடர்புக்குள் வராமலேயே தப்பிக் கொள்ள பார்த்தார்கள். கடைசியாக சனிக்கிழமை இரவு சுமார் 10 30 க்கு மேல் ஓடிப்போனார்கள். திரும்பவும் வரவேயில்லை. காலையிலாவது வருவார்கள். என்று எதிர்பார்ப்பு 8- ம் தேதி அதாவது விவாத ஒப்பந்தப்படியான நேரம் முடிவடையும்முன் காலை 6- 45 க்கு நான் இட்ட பிண்ணூட்டம் :- //ஹலோ அபுபக்கர் என்னுடைய கேள்விக்கு முழுமையான பதில் சொல்லிவிட்டு போங்கள் நண்பரே...!? // என்று நமது நண்பர் Venkatesan Mycoimbatore அழை த்த...