Posts

Showing posts with the label பெந்தகோஸ்தே

சபை என்ற தேவ வடிவமைப்புக்கு எதிராக போர் தொடுப்பவர் யார்?

அனுபவமும் வயதில் மூத்தவருமான ஒரு பெந்தகோஸ்தே பாஸ்டரிடம் சில நாட்களுக்குமுன் பேசிக் கொண்டிருந்தேன். எங்களுடைய பேச்சின் நடுவே சபைகளுக்கு எதிராக நடக்கிற சில விரும்பத்தகாத விமர்சனங்களைப் பற்றி அந்த அனுவம் வாய்ந்த பாஸ்டரிடம் பேச வேண்டியதாயிற்று. அப்போது... நான் : இது கடைசி காலம் என்றும் கர்த்தருடைய வருகை அதி சீக்கிரத்தில் இருக்குமென்றும் அறிந்திருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான் கிறிஸ்தவ சபைகளுக்கு எதிரான தாக்குதலை பல வழிகளில் சாத்தானானவன் தொடுத்திருக்கிறான். பாஸ்டர் : இது சபையின் தொடக்க நாட்களிலிருந்தே பிசாசானவன் தனது அடியார்களைக் கொண்டு நிறைவேற்றுகிற செயல். இப்போது இருக்கிற விசுவாசிகளுடைய பிள்ளைகள் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து விட்டார்கள். பல இடங்களுக்கு பல நாடுகளுக்கு பயணிக்கிறார்கள். ஆங்காங்கே பல்வேறு கலாச்சாரங்களைப் பார்க்கிறார்கள். நமது சபையும் மேலை நாட்டு முறைமைகளின்படி மாறவேண்டுமென ஆசைப்படுகிறார்கள். ஒருசிலர் சற்று வித்தியாசமாக நமது முந்தைய முறைமைகளின்படியே தொடரவேண்டுமென்கிறார்கள். எல்லாருடைய ஆசைகளின்படியேயும், விருப்பத்தின்படி யேயும் சபையை நடத்த முடியாதல்லவா...