Posts

Showing posts with the label ஓரிறைக் கொள்கை யூதர் கிறிஸ்தவர் அல்லாஹ் கருப்புக்கல் சுன்னத்

முஹம்மது என்பவர் சொன்ன அல்லாஹ் யார்?

முகம்மது என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கியவர்களை உண்மையிலே பாராட்ட வேண்டும். ஏனெனில்... அந்த மனிதருடைய வழியிலே வாழவிரும்புகிற மனிதர்களை ஏராளமான எண்ணிக்கையில் கட்டிப் போட்டிருக்கிறது பாருங்கள். முசுலீம்களுடைய நம்பிக்கையின்படியே நாமும் பேசுவோம் முகம்மது என்ற ஒருவர் இருந்தார் என்றும் ஓரிறைக் கொள்கையை போதித்தார் என்றும் பேசுகிறார்களல்லவா? “ஓரிறைக் கொள்கை” புதிதாக முஹம்மது என்பவரால்தான் கண்டுபிடிக்கப்பட்டதா ?  “ஓரிறைக் கொள்கை” ஏற்கனவே யூதர்களாலும் கிறிஸ்தவர்களாலும் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த ஒன்றல்லவா? முஹம்மது என்பவரது பெயரால் அரபிய அரசர்களால் உருவாக்கப்பட்ட வேதமான குர்ஆனில் காணப்படுகிற அனைத்து பாத்திரங்களுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? இதற்கு முன், இவர்களுடைய பெயர்களெல்லாம் யூதர்களுடைய வேதமாம் தோறா-விலும் கிறிஸ்தவர்களுடைய வேதமாம் தோறா,சபூர் மற்றும் இஞ்சிலை உள்ளடக்கிய பரிசுத்த வேதாகமத்தில் இருக்கிறதல்லவா? இப்படி உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களும் யூதர்களும் பரவலாக வாழ்ந்த காலத்தில் கி.பி 652 க்குப் பின் எழுதப்பட்ட குர்ஆனில் முகம்மது ஓரிறைக் கொள்கையைப் போதித்த...