தூத்துக்குடி ஊழியத்தைச் செய்ய உற்சாகமாக...

தூத்துக்குடியில் "தூத்துக்குடி எழுப்புதல் திருச்சபை" என்ற வடிவமான சபையை, 09 02 2014 - ல், மிக எளிமையான முறையில் தேவ கிருபையினால் துவக்கியிருக்கிறோம்.

இந்த சபையானது தேவஒழுங்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வித விளம்பரமுமில்லாமல் ஆரம்பித்தபோதும் வாய்மொழி அழைப்பை ஏற்று அநேகர் வந்து கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

முதல் நாளிலேயே 14 இந்துக்கள் வந்ததுடன் அவர்கள் சுவிஷேசத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்டபோது அருமையான ஊழியம் செய்த திருப்தி எமது குழுவினருக்கு ஏற்பட்டது.

தூத்துக்குடி ஊழியத்தை கர்த்தருக்கு பயப்படும் பயத்துடன் வழி நடத்திச்செல்ல ஆவிக்குரிய அனுபவமுள்ள நண்பா்களை நியமிக்க இருக்கிறோம். ஜெபித்து கொள்ளுங்கள்.

தூத்துக்குடியிலுள்ளவர்கள், தொடர்பு கொள்ள..

Contact No's  93606 77580.


Comments